Tuesday, October 28, 2014

ஞானிகள்...

மக்கள் அனைவரும் அயோக்கியர்களையே நம்புகிறார்கள்
அவர்கள் அப்பிடிதான் இருப்பார்கள்
இல்லை , அப்பிடியேதான் படைக்கபட்டிருக்கிறார்கள்
அதனால்தான் அவர்களுக்கு வழிகாட்ட ஞானிகள்
தேவைப்படுகிறார்கள்...

மரணம்...

மரணம் வெல்ல முடியாதென்பதை அறிந்தும்
மனிதர்கள் மரணத்தை எண்ணிக் கலங்குகிறார்கள்...

மானிட தர்மம்...

காலம் காலங்களாகப் போதிக்கப்பட்டும்
இன்னும் மானிட தர்மம்
போதனைக்குரியாதாகவே இருக்கிறது
வேதனைக்குரிய எதுவும் போதனைக்குரியதுதான்...

பணம்...

மனிதர்கள் தாங்களே பின்னிக்கொண்ட
சிலந்தி வலையில் தாங்களே சிக்கிக்கொண்டு
தவிப்பதற்குக் காரணம்
பணத்தின் மீது வைக்கும் ஆசைதான்...

இந்து சமுதாயம்...

கைக்கெட்டிய கனியானாலும் (பெண் , ஆண்)
கட்டுத் திட்டங்களுக்கு அடங்கியே அதைப் பறிக்க வேண்டுமென்ற நியதியை இந்து சமுதாயமும் அறக்கோட்படுகளும் ஏற்படுத்தியது
பெண்களுக்கும் ஆண்களுக்கும் எத்தனை சிறந்த பாதுகாப்பு
தமிழர் பண்பாட்டையும் இந்து மதச் சிறப்பையும் அது வகுத்த கட்டுப்பாடுகளில் நிலை பெற்றுள்ள கற்பின் திடத்தையும்
பலமுறை நினைத்து பூரிப்படைந்து இருக்கிறேன்...

காதல்...

காதல் தன் பலவீனத்தை காட்டிக்கொள்ள விரும்பாது
தான் நன்றாகவே இருப்பதாகவும்
எதையும் செய்துவிட முடியும் என்றும்
நிரூபிப்பதே காதலின் முதலம்சம்...

இதயம்...

இதயம் அவரவருக்கென்று
தனித்தனியாகப் படைக்கப்பட்டுவிட்டது
வேதனைகளைப் பரிமாறிக்கொள்ள முடியுமே தவிர
இன்னொருவருக்காகத் தாங்கிக்கொள்ள முடியாது...

கவலை...

கவலையின் அளவு கையளவாக
இருக்கும் வரை தான் கண்ணீருக்கும் வேலை
அது மலையளவாகும் போது
மனமும் மரத்துப்போகும்...

மலர்கள்...

மலர்கள் இறைவனுக்கும் மங்கையருக்கும்
மட்டுமே உரியவை
மனிதன் சடலமாகும்போதும் தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம்
மணக்கோலமும் பிணக்கோலமுமே
மனிதன் மாலைகள் தாங்கும் கோலங்கள்...

தாய்‬...

நஞ்சை விட கொடியது ஏமாற்றும் பிள்ளைகளின் மனது
அதை புரிந்துகொள்ளாமல்
இதோ தனிமையில் கவலைகளை மறைத்து
கண்களில் கண்ணீரோடு வாழ்கிறேன்...

தாய்‬...

நடுத்தர வர்க்கம்...

இந்த நாட்டில் நடுத்தர வர்க்கம் என்பது
ஊசலாடும் பொம்மை
அது பணக்காரனைப் போல் நினைத்துக் கொண்டு
ஏழையாக வாழ்வது...

உலகத்தின் மரியாதை...

திரும்பத் திரும்பச் சிந்திக்கும் போது
உலகத்தில் நாம்தான் வாழத் தெரியாதவர்கள் என்று
எனக்குத் தோன்றுகிறது
இறைவன் உலகத்தைப் படைத்தபோதே
உலகத்தின் மரியாதையை
குணத்திலே வைக்கவில்லை
பொருளிலே வைத்து இருக்கிறார்...

சாதாரண அழகு...

நாம் மட்டும் பார்ப்பது
நமக்கு மட்டுமே சொந்தமானது என்று எண்ணும்போது
சாதாரண அழகு கூடப் பலமடங்கு பிரகாசிக்கும்...

மனிதன்...

தினசரி கணக்கற்ற மக்கள் கண்ணுக்கெதிரே மடிந்து
மயானம் செல்வதைக் கண்டாலும்
தன் வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து
பொய்யான மண்ணையும் பொன்னையும்
கட்டிக்கொண்டு இருக்கான் மனிதன்...

மக்கள்...

மக்கள் இன்று மதிப்பவனை நாளை மதிப்பதில்லை
மக்களுக்கு தீர்க்காலோசனை கிடையாது
அவ்வப்பொழுது தங்களுக்குக் கிடைக்கும்
நன்மை தீமைகளைப் பொறுத்து
அவர்கள் மதிப்பும் கசப்பும் மாறிவிடுகின்றன...

பணம்...

உலகத்தில் தாங்கள் பிறந்ததை எண்ணியே
சிலர் வருத்தப்படுவது நியாயம்தான்
இரக்கம் இல்லாதவனிடம் பணம் போய் சேருகிறது
பணம் இல்லாதவனை இரக்கம் பிடித்து ஆட்டுகிறது...

மறையும் பொருள்...

மறையும் பொருள் மீது
மனிதனுக்கு ஏற்படும் ஆசையும் மோகமும்
பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது...

கடவுளும் காலமும்...

கண்ணீர் ஓடிய கன்னங்களை
கடவுளும் காலமும் தான்
துடைத்தாக வேண்டும்...

அவரவர் நோக்கம்...

எது தவறு
எது தவறல்ல என்பது
அவரவர் நோக்கத்த்கைப் பொறுத்தது...

Thursday, July 3, 2014

ஆண்...

பெண்ணை விட
ஆண்களை பலமா படைச்சதுக்கு காரணமே
பெண்களுக்கு பாதுகாப்ப இருக்கணும் என்றதற்காகத்தான்...

வித்தியாசம்...

படிச்சதெல்லாம் கொண்டு போய்
வாழ்க்கைல Apply பண்ண முடியாது
அனுபவத்தில்தான் அதை கற்று கொள்ள முடியும்
இரண்டுக்குமே நிறைய வித்தியாசம்...

வாழ்க்கை...

ஒரு உயிரை எடுத்து தான் உள்ள வாறோம்
உயிரை விட்ட தான் வெளிய போக முடியும்...

கடவுள்...

சக்தியிழந்த நிலையில்தான் மனிதன் கடவுளை நினைக்கிறான்
சுயபலத்தில் நம்பிக்கையிருக்கும்வரையில்
மனித எண்ணத்தில் மமதை ஒங்கி நிற்கிறது
நிர்ப்பலமாகித் திண்டாடும் சமயத்தில் தான்
அகங்காரம் விலகி கடவுளுக்கு இடம் கொடுக்கிறது மனது
வேண்டியவேளையில் மட்டும் கடவுளை நினைத்தால் போதுமா
என்ற சர்ச்சையில்கூட
மனித மனம் அந்தச் சமயத்தில் இயங்குவதில்லை
ஆபத்தான நிலைமையில் ஆதரவாகப் பிடித்து கொள்ளக்கூடிய இடத்தை மனம் நாடுகிறது
திக்கற்ற நிலைமையில் மனித மனத்துக்கு பிடிப்பை அளிப்பது கடவுளின் நினைப்பு ஒன்றுதான்...

சரித்திரம்...

எது சரித்திரம்?
மக்கள் அறிந்ததே சரித்திரம்
அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாக
கலந்து விட்ட நிணைகளே சரித்திரம்
"நாம் நீர்க்குமிழிகள் அல்ல
வடியாத பெருவெள்ளத்தின் துளிகள் நாம்"
அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்ல
அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம்
நேற்று இருந்தோம் , இன்று இருக்கிறோம்
நாளைக்கும் இருப்போம் என்று
தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்...

கனவு...

வாழ்க்கையின் ஒரு பகுதி தானே கனவு
ஆனால் அந்தக் கனவில் தானே மனிதன் மனத்தின்
சுகங்களை அடைய முடியாத இன்பங்களை அடைகிறான்
கைக்கெட்டாதது மனத்துக்கு எட்டுகிறது கனவில்...

விஷம்...

உலக ரீதியே இப்பிடித்தான்
எத்தனை பாலையும் வீணடிக்க
ஒரு துளி விஷம் போதும்
நல்லவர்களின் வாழ்வும் அப்பிடித்தான்...

பணம்...

ஒருவன் பணம் சேர்க்க
எத்தனை பேர்
அடிமையாக வேண்டியிருக்கிறது...

ஆண்கள் கோழைகள்...

உண்மையில் ஆண்கள் கோழைகள் தான்
உலகில் பிரதி தினம் அக்கம் பக்கத்தில்
நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பிறப்பதை அறிந்தும்
தங்கள் மனைவிக்கு அந்த நிலை வந்தால்
என்ன பயம் பயப்பிடுகிறார்கள்...

ஆண் பெண் உறவில்...

ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும்
ஆண்கள் கேட்டுக் கொள்ளும் கேள்வி
"என்ன இருந்தாலும் என் மனைவி என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள் ?"

அதுவரை வளர்த்த தாய் தந்தையர் , சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது
ஆண் மனம் தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது மணமான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது
காரணம் சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர் , அவிழ்க்க முடியாத விந்தை ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்...

சந்தேகம் அலட்சியம்...

மனித வாழ்வில்
நடக்குமா? நடக்காதா? என்று
நினைப்பவனுக்கு எதுவும் நடப்பதில்லை
தெய்வம் உண்டா? இல்லையா? என்று
நினைப்பவனுக்குத் தெய்வம் கிடையாது
வீரம் தனக்கு உண்டா? இல்லையா? என்று
சந்தேகிப்பவனுக்கு வீரம் கிடையாது
சந்தேகம் அலட்சியம் இந்த இரண்டும்
சிந்தனையின் பலவீனங்கள்
நம்பிக்கை , லட்சியம் இரண்டும்
ஆத்மாவின் சக்திகள்
ஒரு மனிதனுக்கு வாழ்வில்
இரண்டும் எப்பவும் அவசியம்...

காதலின் அர்த்தம்...

ஆண்களுக்கு
முரட்டுத்தனம் மட்டும் இல்லாவிட்டால்
எந்தப் பெண்ணுக்கும்
காதலென்பதற்கு அர்த்தம் புரியாது...

சிருஷ்டி...

மனிதப் பிறவியில்
சமுதாயக் கட்டுப்பாடுகள் , நாகரிக வலைகள்
எத்தனை கோட்பாடுகளை ஏற்படுத்தினாலும்
சிருஷ்டியின் அடிப்படை இச்சைகளை
யாரும் வெற்றி கொள்ள முடிவதில்லை...

விதி...

விதியென்பது ஆண்டவனின் விசித்திர தண்டம் (தண்டனை கொடுக்க)
மனித அறிவுக்குச் சிறிதும் புலப்படாத ஒரு மர்மம்
அஞ்ஞானி அதை அறிவீனத்தால் அசட்டை செய்கிறான்
விஞ்ஞானி அதை விவேகத்துக்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கிறான்
மெய்ஞ்ஞானி அதை ஆண்டவன் கட்டளை , கர்மத்தின் கரம் என்று உணர்ந்து அதன் விளைவுகளுக்குச் சிரம் தாழ்த்துகிறான்
ஆனால் அந்த மெய்ஞ்ஞானிகூட விதி எதை விளைவிக்கிறது என்பதை அறியாமல் திகைக்கிறான்

வலைஞன் எப்படி ஒரு நூலிழையை எடுத்துப் பின்னத் துவங்கி பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறானோ
அப்பிடியே விதியும் வாழ்வின் ஒரு நூலிழையை எங்கோ துவக்கி
எப்படியோ பின்னிப் பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறது
அதில் சிக்க வேண்டியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்
அதை நாடி வருபவர்கள் தானே வருகிறார்கள்
அப்படி வருவதை "சந்தர்ப்பம்" , 'தற்செயல்' என்ற
சொற்களால் குறிப்பிடுகிறார்கள்
உலக பந்தத்தில் உழலும் மனிதன் வைத்த பெயர் அவை
சாஸ்திரம் வைத்த பெயர் விதி...

ஆண்டவன்...

மனித சக்திகள்
பயனற்றுப் போகும்போதுதான்
மனிதன் ஆண்டவனைச் சந்திக்கிறான்...

மண்ணாசை...

சொர்க்கத்தின் சிறப்புகளை
புராணங்கள் எத்தனை தான் வர்ணித்தாலும்
பேரின்பத்தை அடைவதன் உயர்வை
வேதாந்தங்கள் எத்தனை தான் போதித்தாலும்
பூலோகத்தில் இருப்பதில் மனிதன்
எத்தனை திருப்தி அடைகிறான்
உலகத்தில் மதங்கள் பல இருந்தாலும்
தத்துவங்கள் பல இருந்தாலும் இந்த உலகத்தைவிட்டு
மேல் உலகம் சென்றால் எத்தனை அமைதியும் சந்தோசம் உண்டு என்பதை மதங்களும் தத்துவங்களும் லியுறுத்தினாலும்
உயிருடன் பூவுலகத்தில் கூடியவரை வாழவேண்டும்
என்ற ஆசை மனிதனை விட்டு அகலுவதில்லை
"
மண்ணாசை சில நேரங்களில் சிறந்ததுதான்"...

எண்ணங்கள்...

இதமான இனிமையான எண்ணங்கள்
வேகமாக வளருவதில்லை
ஆனால்
கொடுமையான , விபரீதமான எண்ணங்களுக்கு
மட்டும் ஆயிரம் கால்கள் ஒரே கணத்தில்
முளைத்து விடுகின்றன...

தகுதி...

துன்பத்தை தங்கிக் கொள்பவனுக்குத் தான்
இன்பத்தை வரவேற்கிற தகுதி உண்டு
அதாவது
எவன் புளிப்பைச் சாப்பிட மாட்டேனென்று சொல்கிறானோ
அவனுக்கு இனிப்பைச் சாப்பிட அருகதை கிடையாது...

காலம்...

காலம் ஒரு காட்டுக் குதிரை
அதன் பாய்ச்சலைப் பிடித்து நிறுத்த
யாருக்கும் ஆற்றல் கிடையாது...

சுமை...

வீடு என்கிற சுமையை விட்டு விட்டு
ஓடப் போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய உடல் என்கிற
சுமை உன்னோடுதான் வரும்
பெற்றோரையும் சகோதரர்களையும்
உற்றார்களையும் உறவினர்களையும்
விட்டுவிட்டு ஓடப்போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய அகங்காரம் , உன்னுடைய ஆசை , உன்னுடைய கோபதாபம் யாவும்
உன்னுடன் தானே வரும்...

காதல்...

காதல் சூழ்நிலையில் மனம் சிக்கும் போது
புத்திக்கு மறதி பெரிதும் ஏற்படுகிறது
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் எத்தனை பிணைப்பு
ரோஜாவையும் முள்ளையும் போல்...

கோவம்...

கோவம் யார் கண்ணையும் மறைக்கவல்ல
ஒரு பெரும் திரை
அந்தத் திரையைச் சரேல் சரேலென
மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப்
பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில்
பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...

அன்பு...

அன்பு மெள்ள மெள்ள முளைப்பதில்லை
திடீரென்று தான் ஏற்படுகிறது
அதுவும் ஆசையைப் போல்தான்

அழகான மலரைப் பார்க்கிறோம்
திடீரென்று ஆசை பிறக்கிறது
ஓர் அழகான பெண்ணைப் பார்க்கிறோம்
திடீரென்று அன்பும் பிறக்கிறது
அன்பும் ஆசையும் முளைப்பது சில விநாடிகளில்தான்
அவற்றுக்கும் காலமும் யோசனையும் தேவையில்லை...

மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

நாம் வாழும் மண்
எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது
எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது
மண் தாய் அவள் தான் குழந்தைகளில்
யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை
எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள்
என்றாவது ஒரு நாள்.

மண்ணிடமிருந்து வருகிறோம்
மண்ணால் வளர்கிறோம்
மண்ணுக்கே போகிறோம்
மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

காதல்...

உறக்கத்திற்குக் காதல் பெரும் விரோதி
உறங்காத சமயத்திலும் கனவை அளிக்கும் சக்தி
காதல் ஒன்றுக்குத்தான் உண்டு...

உலக இயல்பு...

பெண் காத்திருப்பதும்
ஆண் இஷ்டப்பட்ட வேளைக்குத்
திரும்புவதும் உலக இயல்பு...

மனிதன்...

மனிதன் விரும்புவதைத்
தெய்வத்திற்கு படைக்கிறான்
தனக்கு வேண்டியதைத்
தெய்வத்திற்கும் வேண்டுமென்று நினைக்கிறான்...

இல்லாது வந்தோம் இல்லமால் போகிறோம்...

இல்லாம் , இல்லம் , இலம்
இந்த மூன்று சொற்களுக்கும் ஒரே பொருள்
"இல்லாது வந்தோம் இல்லமால் போகிறோம்
இடையிலே சிலர் நம்மை இல்லாதவர்கள்" ஆக்குகிறார்கள்...

மனைவி...

மனைவிக்குக் கணவன்
கேள்விக் குறியாக இருந்தால் தான்
மனைவி எப்போதும் அவனைப்பற்றி
சிந்தித்துக் கொண்டிருப்பாள்...

பயம் வேறு பக்தி வேறு...

பயம் வேறு பக்தி வேறு
பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது
இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும்
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்

உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில்
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப்
பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது
வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர்
கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து
தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள்
இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும்
பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக்
செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்

தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத்
தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ
என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம்
நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான்
தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு
வழிகாட்டும் பெரியோர்களிடத்தும்
பயபக்தி வேண்டும் என்று
பயத்தையும் பக்தியையும் இணைத்தே
உலகம் கூறுகிறது...

மதம்...

மதம் உலக நன்மைக்காக ஏற்பட்டது
அழிவிக்காக அல்ல
ஆனால் மதத்தின் பெயராலேயே
அழிவுச் செயல்களில் மனிதன் ஈடுபடுகிறான்
இதற்கு ஆண்டவன் பொறுப்பாளியல்ல
தனி மனிதனின் ஆசையும் வெறியும் தான் காரணம்...

அதிர்ஷ்டம்...

மனித முன்னேற்றத்துக்குத் தேவை அதிர்ஷ்டந்தான்
ஆனால்
அது ஏன் வருகிறது எப்படி மாறுகிறது
என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டதாயிருக்கின்றது...

சந்தர்ப்பங்கள்...

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்
ஏன் வருகின்றன் எப்படி வருகின்றன
யாருடன் நம்மைச் சேர்க்கின்றன
யாரிடமிருந்து பிரிகின்றன
என்பதைச் சொல்ல முடிவதில்லை...

குறிக்கோள்...

சாவைத் தேடுகிறவன் சாவதில்லை
அதற்கு அஞ்சுகிறவன்தான் சாகிறான்
வாழ்க்கையில் குறிக்கோள் உள்ளவன் உயிர்
நீண்ட நாள் உடலில் இருக்கிறது...

விவேகி...

வாழ்க்கையில்
பணத்துக்கும் சரி பதவிக்கும் சரி உணர்ச்சிக்கும் சரி
எதற்குமே ஏற்றத்தாழ்வு உண்டு
அந்த ஏற்றத் தாழ்வுகளால் அடியோடு
பாதிக்கப்படாதவன் யோகியாகிறான்
அடியோடு பாதிக்கபடுபவன் ஒன்று போகியாகிறான்
அல்லது ரோகியாகிறான் சற்றுப் பாதிக்கப்பட்டாலும்
சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து
அவற்றினின்று சட்டென்று
விலகிக் கொள்கிறவன் விவேகியாகிறான்...

Thursday, May 8, 2014

ஒவ்வொரு சொல்லுக்கும் அஞ்சினால்...

உலகத்தின்
ஒவ்வொரு சொல்லுக்கும்
அஞ்சினால் வாழ்க்கையை நடத்த முடியாது...

மனது...

பல நாட்களாக ஏங்கியது கிடைத்து விட்டால்
அதை பரிபூர்ணமாக அனுபவிக்க
மனதுக்கு துணிவு இருப்பதில்லை...

துயரம்...

துயரங்களின் தொடக்கம் கண்ணீரில் தான்
ஆனால் அதுவே தொடர்கதையாகி விட்டால்
சிந்தனை செயலற்றுப் போய்விடுகிறது...

ஊமைக்காதல்...

பேசி விளையாடுகிற காதலைவிட
ஊமைக் காதலுக்கு சக்தி அதிகம்
பேச்சில் அடங்குவது சில வார்த்தைகளே
பேசாத போது வளர்வது பல கோடி வார்த்தைகள்...

விடை...

சில பேரைப் பார்த்ததும் விரும்புகிறோம்
சில பேரை பார்த்ததும் வெறுக்கிறோம்
என்னுடைய சின்னஞ்சிறு மூளையிலிருந்து
இவற்றுக்கு விடை கிடைப்பதேயில்லை...

மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...


கவிதை உணர்ச்சிகளில் தான் உருவாகிறது
எல்லா ஜீவராசிகளுக்கும் (மனிதன் உட்பட )
அடிப்படையானவை உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிகள்
அழகைகண்டு , சோகத்தைகண்டு , உற்சாகத்தைக் கண்டு கொந்தளிக்கின்றன
அந்தக் கொந்தளிப்பு கவிதையாகக் சொற்களில் மலர்கிறது
ஆகையால் தான்
மலையழகு , மலரழகு , நதியழகு , கடலழகு
எல்லாம் கவிதைகளாக வடித்திருக்கின்றன
இத்தனையும் சேர்ந்த பெண்ணழகைப்பற்றி
வடித்துள்ள கவிதைகள் ஏராளம்
மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...

விதியின் இயற்கை...

கனவு என்பது மனத்தின் இயற்கை
கனவை உடைப்பது விதியின் இயற்கை
வாழ்வின் போக்கு இது
இதிலிருந்து யாருமே தப்பமுடிவதில்லை...

பெண்ணின் அழகு..

அடக்கமுள்ள பெண்களுக்கு இருக்கும் அழகு
அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை

தலைகுனிந்த பெண்ணிடம் இருக்கும் அழகு
தலைகுனியாமல் நிமிந்து நடக்கும்
தருணிகளிடம் கிடையாது

அச்சப்பட்டும் வெட்கப்பட்டும் கூனிக்குறுகும்
குமரிகளிடமுள்ள அழகு
உணர்ச்சிகளைக் கைவிட்டு உலாவும்
காரிகைகளிடம் கிடையாது

சுதந்திரத்தை ஆடவனிடம் பறிகொடுத்து அடங்கி
அவனிடம் வாழும் பெண்ணின் அழகு தெய்வீகமானது
அந்த அடக்கத்தில் சுதந்திரத்தை இழப்பதில்
மகத்தான சக்தி பெண்களுக்கு ஏற்படுகிறது

இயற்கை பெண்களை படைக்கும் போது
சில அம்சங்களை இயற்கையாகவே
படைத்தது விடுகிறது அதில்
அச்சம் , நாணம் , மடம் , பயிர்ப்பு
பெண்களுக்கே என்றும் உரித்தானவை
இந்த நான்கு அம்சங்களால் தான்
பெண் கடைக்கண் பார்வைக்குகூட
ஆண் அடங்கி விடுகிறான்...

பெண்கள் விரும்புகிறார்கள்...

அதட்டல் , கெடுபிடி இத்துடன் அன்பு
இத்தனையும் கலந்து பரிமாறும்
ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்...

வாழ்க்கை...

வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து
இன்னொரு கல்லறைக்கு போவதல்ல
அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது
நன்மைக்காக என்று சொன்னால் கூட 
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால்
அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும்
எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம்
சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட
சிறையில் கிடப்பதோ
பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல்...

நாம் முட்டாள்...

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக
வேடம் அணிகிறோம், மற்றவர்கள்
அதைப் பார்த்து மகிழ்வதற்கு
ஆனால் நாம் தோற்பதில்லை
அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்
ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது
நாம் வென்றிருப்போம்!
எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை
நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...

பெண்...

கருங்கல்லின் கடினத்தன்மையையும்
விஷத்தின் கொல்லும் தன்மையையும்
எடுத்து இணைத்துத் தான்
பெண்ணை பிரம்மன் படைத்ததாக
வட மொழியிலுள்ள சாடு சுலோகம் சொல்லுகிறது...

பெண்கள்...

வாழ்க்கையில் பல சமயங்களில்
பலவீனமான இனம் என்று கூறப்படும்
பெண்ணினமே பலத்துடன் நிற்கிறது
பலமுள்ள இனத்தைச் சேர்ந்த
ஆண் பலமற்று போகிறான்
ஆணினத்தின் பலவீனத்தையும்
உணர்த்திருப்பதும் பெண்கள் தான்...

கற்பனைக் கதை...

கற்பனைக் கதைகளிலும்
உண்மை நிரம்ப இருக்கிறது
உணர்ச்சியில் இருந்து தான்
கற்பனையும் விளைகிறது
கதையும் விளைகிறது...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்...

மனிதனை எது விட்டாலும் விடாவிட்டாலும்
இளமையில் ஏற்படும் பழக்க வழக்கங்கள்
மட்டும் விடுவதில்லை
இயற்கையின் காரணமாகவே
செயற்கையின் காரணமாகவே
பரம்பரையின் காரணமாகவே
இளவயதில் மனிதனைப் பிடித்து கொள்ளும்
குணாதிசயங்கள் ஆயுள் முடியுமட்டும்
அவனை பிடிக்கவே செய்கின்றன
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழி
காரணமில்லாமலா ஏற்பட்டிருக்கிறது...

அபாரசக்தி இரண்டு கை...

உலகத்திலேயே இரண்டு கைகளுக்குத் தான்
அபாரசக்தி உண்டு
ஒன்று பத்து மாத காலம் தாங்கிய
தாயின் ரத்தமோடும் கை
இன்னொன்று கட்டி வாழும் மனைவியின் கை
ஆண் மகன் நோயுற்ற காலங்களில் இந்தக் கைகள்
பட்ட மாத்திரத்தில் பெரும் சாந்தியுண்டு...

யாரும் தப்ப முடிவதில்லை...

ஒருவன் மகிழ்ச்சி
இன்னொருவனுக்குத் துன்பம்
ஒருவன் வெற்றி
இன்னொருவனுக்குத் தோல்வி
இந்த நியதியிலிருந்து யாரும்
தப்ப முடிவதில்லை...

உலகம் மிகச் சிறியது...

உலகம் மிகப்பெரிது என்று நாம் எண்ணுகிறோம்
ஆனால் அது உண்மையில் மிகச் சிறியது
ஏனென்றால்
நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத
இடங்களுக்குப் போகிறோம்
மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம் கனவிலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம்
ஆகவே ஆண்டவன் படைப்பில் இந்தப் பரந்த உலகம்
மிகச் சிறிய கிரகம் தான்
அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில்
எடுத்து வீசப்படும் நாம் இந்தக் கிரகத்தின்
எந்தப் பாகத்தையும் அடைகிறோம்
எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது ஆயுளில்
அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம்...

இறப்பு ஒரு பெரும் உறக்கம்...

இறப்பு ஒரு பெரும் உறக்கம்
அதற்குப்பின் மீண்டும் பிறப்பு உண்டு
உடல் தான் அழிகிறது
உயிர் அழிவதில்லை...

இயற்கையின் மர்ம படைப்பு...

இயற்கை உருவாக்கும் எதிலிலும்
மர்மமும் புதைந்து கிடக்கிறது
வெளிப்படையாகச் சிலவற்றையும்
மர்மமாகச் சிலவற்றையும் தோற்றுவிக்கின்றன
இயற்கையின் காட்சிகள்
மேகத்தை படைத்த இயற்கை
அதன் கருமையை கண்ணுக்குக் காட்டுகிறதேயொழிய
அதில் கர்ப்பமாயிருக்கும் நீரைக் கண்ணுக்கு காட்டுவதில்லை
உலகத்தின் படைப்பு எதிலும் தெரிவது பாதி 

தெரியாதது பாதி
தெரிந்ததை மட்டும் அறிந்து திருப்தி அடைகிறான்
அறிவு குறைந்தவன்
ஆராய்ச்சிக்காரன் தெரியாததிலும்
ஊகத்தைச் செலுத்த முற்படுகிறான்...

காதலில் மட்டும் தான் உயிர் மயிர் போல தெரிகிறது...


உயிர்மேல் ஆசையில்லாதவன்
உலகத்தில் யாருமே கிடையாது
கூன் , குருடு , நொண்டி , முடவன் , பிறர் காணச் சகிக்காத ரோகமுடையவன்
தள்ளாடும் கிழவன் ஆகியவர்கள் கூட
உலகில் தத்தித் திரிந்தாவது ஜீவிக்க
இஷ்டப்படுகிறார்களே யொழிய
உயிர்விட யாருக்கும் மனம் வருவதில்லை
இந்தப் உயிர்ப் பயமும் அதனால் உயிர்மீது ஏற்படும்
தீவிரப் பற்றுதலும் மனித சமுதாயத்துக்கு மட்டுமல்ல
எப்படியாவது பிழைத்திருக்க வேண்டுமென்ற முயற்சியால் தான்

செடி கொடிகள் கூடத் தங்கள் வேர்களை நிலத்தின் ஆழத்துக்கு அனுப்பி
நீர் நிலைகளை ஆராய்ந்து உணவை உறிஞ்சுகின்றன
வேங்கையும் சிங்கமும் மனிதர்களை நோக்கிப் பாய்ந்து கொள்ள முயல்வதும்
உயிரை எப்பிடியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான்
உயிர் அகன்றால் உலகம் இருண்டு போகிறது

ஆனால் இந்த காதலில் மட்டும் தான்
உயிர் மயிர் போல தெரிகிறது
எவ்வளவோ பாசங்களை கடந்து வாரோம்
அந்த இழப்பு பெரிதாக தோன்றுவது இல்லை
ஆனால் காதலி இல்லை என்றதாகி விட்டால்
உடம்புக்கு உயிர் சுமை போல தோற்றமளிக்கிறது...

காதல் பண்ணுங்க காதல் மேல உயிரை வைக்காதிங்க
நம்பிக்கை தைரியம் வைத்து காதல் பண்ணுங்க
உங்க காதலுக்கும் ஜெயம் தான்...

பெண்ணின் உணர்ச்சி...

பெண் உள்ளமே ஓர் அலாதி
ஆண் பிள்ளைகள் தங்கள் அங்க லாவண்யங்களைப்
பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயம் உண்டு
ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு
பார்த்து விட்டால் வெளியில் கோபம் உண்டு
பார்த்து மலைப்பது கண்டு உள்ளே மகிழ்ச்சி உண்டு
நாணமுண்டு அந்த நாணத்தை உடைக்க
ஆண்மகன் வரமாட்டானாவென்ற ஏக்கமும் உண்டு
இத்தைய பயம் , ஆசை , கோபம் , நாணம் , ஏக்கம் ஆகிய
வேறுபட்ட உணர்ச்சிகளின் அலை மோதல்தான் காதலின்பம்
அந்த இன்பத்திற்கு வசப்படாத பெண்
உலகத்தில் என்றும் பிறந்ததில்லை
இனிப் பிறக்கப்போவதுமில்லை
உணர்சிகள் எல்லோருக்கும் சமம்
இந்த உணர்ச்சிகளை அந்தஸ்தோ , சாதியோ , சமயமோ
எதுவுமே கட்டுப்படுத்த முடியாது
அந்தஸ்தும் சமயமும் சாதியும் கடலையும் காற்றையும்
கட்டுப்படுத்த முடியமா?
இயற்கையின் இந்தச் சக்திகளைப் போலத்தான் உணர்ச்சிகளும்
இயற்கைகளைக் கட்டுப் படுத்த முடிவதே இல்லை...

மனித ஊகம்...

மனித ஊகம் கண்களில் கண்டதோடு திருப்தி அடைவதில்லை
தெரிந்ததை விடத் தெரியாத விஷயங்களில்
கற்பனை அதிகமாக ஓடுகிறது
கற்பனை ஓட்டத்திலே காணும் இன்பக் கனவுகள் பல
பாதி திறந்தும் பாதி மறைந்தும் இருக்கும் அம்சங்களில்
கற்பனை வெறி பிடித்து ஓடுகிறது
மறைத்து நிற்கும் திரைச்சீலையைக் கிழித்தெறிய
மனம் துடிதுடிக்கிறது
இது தான் இயற்கையின் படைப்பு...

வறுமை , செழிப்பு...

ஒருவர் வறுமையாலேயே
மற்றொருவர் செழிப்பு ஏற்படுகிறது...

மனம்...

கண்ணின் வலிமையையும் ஆற்றலும்
ஒரு பொருளின் வெளித்தோற்றத்தைக்
காட்டுவதோடு முடிந்து போய்விடுகிறது
ஆனால்
மனத்தின் வலிமையோ அந்தப் பொருளின்
வெளித்தோற்றத்தையும் துளைத்துக் கொண்டு போய்
அதன் உள்ளுக்குள் இருக்கும் உண்மையை
உணர்த்தும் வரை தொடர்கிறது...

Saturday, March 1, 2014

‪நான் மட்டும் எப்பிடி தப்புவேன்...

மனித சித்தம் எத்தனை எத்தனை
பிரமைகளையோ உருவாக்கிறது
காலத்தின் வேகத்தைப்பற்றி நிர்ணயமும்
அந்தப் பிரமைகளில் ஒன்று.

காலம் ஒரே சீராகத்தான் ஓடுகிறது
இத்தனை மாத்திரைகள் கொண்டது ஒரு நாழிகை
இத்தனை நாழிகை கொண்டது ஒரு நாள் என்று
சூரியன் உதித்து மறைந்து மீண்டும் உதிக்கும் வரையில்
உள்ள நேரம் ஒரே ஒழுங்காகத்தான் அமைத்திருக்கிறது

நேரம் வேகமாகவும் ஓடுவதில்லை
அடியோடு ஆமை நடையும் போடுவதில்லை
ஆனால் மனித சித்தம் இந்த இயற்கை நிலையையும்
பல சமயங்களில் மாற்றி விடுகிறது
சிந்தனையில் சுழலும் எண்ணங்களுக்குதக்க படி
நேரம் வேகமாக ஓடுவது போலவும்
ஆமை வேகத்தில் நகருவது போலவும்
பிரமை மனிதனுக்கு உண்டாகிறது
சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி , வேதனை , கவலை 
ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி
காலமும் வேகமாகவோ , மெதுவாகவோ
நகருவதாக நினைக்கிறோம்
வெறும் பிரமைதான்
இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து
தப்பியவர் யாருமே இல்லை...

காதலுக்கு தேவைப்படுகிறது...

இந்தக் காதலுக்கு எப்படியோ ஏதோ
ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது

கொஞ்சம் பொய்
முத்தம் கவிதை கண்ணீர்
இப்படி ஏதோ ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது...

விதி...

இந்தப் பூவுலகில் பிறந்தவர்க்கு
வாழ்க்கையே ஒரு புதிர்
விதியின் ரகசியங்களை மானிடர் அறிவது கடினம்
அதை அறிந்தாலும் புரிந்து கொள்வதென்பது மிகவும் கடினம்
வரப்பிரசாதம் போல வந்தது பெரும் தொல்லையாகிப் போகும்
அதே சமயம் எதிரி கூட
நண்பன் போலத் தோற்றத்தில் தெரிவான்

‪எவன் நல்லவன் எவன் கெட்டவன்‬ என்று
கண்டு பிடிக்கிறதிலே வாழ்க்கை போகிறது...

கவலைகள் ரசியுங்கள்...

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்...

பெண்ணின் உடம்பு ஒரு யாழ்...


பெண்ணின் உடம்பு ஒரு யாழ் போன்றது
காதலன் அணைப்பில் அவள் இருக்கும் போது
அவளுடைய உடல் நரம்புகள் எல்லாம்
யாழின் நரம்புகள் போல் ஆகிவிடுகிறது...

எழுதாத சட்டம்...

ரசிகத் தன்மையுள்ளவர்கள் மட்டுமே
காதலர்களாக ஆக முடியும் என்று
எழுதாத சட்டம் ஒன்று உண்டு
பிரம்மனின் படைப்பிலே...

நான் கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன...

இந்த உலகத்தில் இன்னும் நான்
கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன
நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிகொண்டிருப்பவர்கள்

பொல்லாதவர்களாகி விடுகிறார்கள்
பொல்லாதவர்கள் என்று நினைத்தால்
நல்லவர்களாகி விடுகிறார்கள்
ஆனால்
நடந்து போன நாட்கள் எல்லாம் வேறு விதமாய்
நடந்திருக்க கூடாதா என்று தினந்தோறும் தோன்றும்
அதுவும் ஒரு கற்பனை
இனி எதிர்காலம் எப்பிடி நடக்க வேண்டும்
என்று யோசிப்பதும் கற்பனையே
இப்பிடி நிகழ்காலத்தை
அந்தக் கற்பனைப் பனி மூட்டம் மூடுகிறது
திடமாய் நிற்கும் மலையை மூடும் மேகக் கூட்டம் போல

இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக
எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை...

அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை
அதற்குத்தானே கடவுள் நம்மை 
ஆறறிவுடன் படைத்திருக்கிறார்
அன்பு நம்மை மனிதனாக அடையாளம் காட்டுகிறது
ஆனால்
அதுவே வெறியானால் நம்முள் இருக்கும் 
மிருகத்தை வெளிக்கொண்டு வருகிறது
அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

உறவு...

உறவு என்பது
எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வலை
இரும்புக் கயிற்றில் பின்னிய சக்தி வாய்ந்த வலை
திமிங்கலம் சிக்கினால் கூட அதிலிருந்து வெளிவர முடியாது...

கண்ணீர்...

மனதில் உள்ள துன்பங்களையெல்லாம்
வெளியில் வாரிக் கொட்டக்
கண்ணீர்தான் சிறந்த வழி...

கை ரேகைகள்...

குழந்தை கருவில் இருக்கும் போது
அதன் எதிர்காலம் முழுவதும்
அதற்குத் தொடர்படம் போலத் தெரியுமாம்
அதன் பின் பூமி காற்றைக் சுவாசித்த பின்பே
அனைத்தையும் மறந்து விடுமாம் அந்த குழந்தை

அது அனைத்தும் தெரிந்த போது கையை
மடித்து வைத்திருக்கும் போது
ரேகைகள் உருவாகுமாம்...

கோவத்திலும் சந்தத்திலும் சில பெண்கள்...

சாந்தத்தில் பெண்களின் குரல்
தேனின் சொட்டுப் போல இனிக்கும்
கோபத்தில் பெண்களின் குரல்
தேனீயின் கொட்டுப் போல வலிக்கும்
ஆனால் சில பெண்களின் குரல்
சாந்தத்திலும் கோபத்திலும்
யாழ் எடுத்து வாசிப்பது போல் இருக்கும்...

இயற்கை அழிவு...

மனிதன் இயற்கையை ஒடுக்கி அடக்கிவிட்டுத்
தன் பெயர் சொல்லும் கட்டடங்களைக் கட்டுகிறான்
அவன் எப்போது அயர்வான்
தன் இடத்தை மீண்டும் அடைவதற்கு என
இயற்கை தன் பங்குக்கு காத்திருக்கிறது...

நிதானம்...

பேச்சிலும் சரி எழுத்திலும் சரி
அறிவாளிகள் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள்
ஏனென்றால்
ஆண்டவன் மனிதனுக்கு அளித்திருக்கும்
இந்த இரண்டு சாதனங்களும்
அதிக சக்தி வாய்ந்தவையாயிருப்பது மட்டுமின்றி
கொஞ்சம் நிலை தவறினால்
எழுத்தும் பேச்சும் அவற்றைக் கையாள்பவர்களையே
சங்கடத்தில் மாட்டி வைத்துவிடுகின்றன
மனித வரலாறு கண்ட உண்மை இது...

எண்ணம்...

எண்ணம் தான் எத்தனை வேகமுடையது
அது எத்தனை தூரத்தை
எத்தனை விநாடிகளில்
கடக்க முடிகிறது...

காதல்...

ஆண்களின் அசட்டுச் சிரிப்புக்கும்
பெண்களின் பொய்க் கோபத்துக்கும்
இடையே எழுவதுதான் காதல்...

பெண்களின் ஆசையின் ஆழம்...

ஆசை ஆண்மகனுக்கு ஏற்பட்டால்
உதறி விடுவார்கள்
பெண்களுக்கு ஏற்படும் ஆசை
வெளிக்குத் தெரியாது ஆனால் உள்ளூர ஊரும்
அந்த ஆசையின் வேகமும் ஆழமும் பெரிது
பெண்களில் இதய ஆழத்தை அளப்பது
அத்தனை சுலபமில்லாத காரியம்...

இயற்கையிலிருந்து மனிதன் பாடம் கற்கிறான்...

உலகமக்கள் அனைவரும்
பொன்னையும் வெள்ளியையும்
ஏன் உயர்வாக மதிக்க வேண்டும்
ஏன் அந்த உலோக நாணயங்களை
வட்டமாக அமைக்க வேண்டும்
இயற்கையிலிருந்து (சந்திரன் ,சூரியன் ,வெள்ளி)
மனிதன் பாடம் கற்கிறான்
ஆனால்
முழுப்பாடத்தையும் அவன் கற்பதில்லையே
கற்றால் உலகில் சண்டை இருக்காது
பொறமை , போட்டி இருக்காது
சுபிட்சமே நிறைத்திருக்கும்...

தெய்வம் உண்டா இல்லையா?...

தெய்வம் உண்டா இல்லையா?
ஆதிகாலம் முதல் மனிதன் தன்னை தானே
கேட்டு வரும் கேள்வி இது 

அவ்வப்பொழுது பதிலும் சமயோசிதமாக வந்திருக்கிறது

உடலில் கொழுப்பும் ரத்த வேகமும் உள்ள சமயங்களில் 
மனிதனின் மனத்தில் நாத்திகமும் 

அந்தச் சக்திகள் அகன்றதும் ஆத்திகமும் எழுந்து நிற்பதே 

இயற்கையாக இருந்து இருக்கிறது 

கொழுப்பும் ரத்த வேகமும் நிரம்பியவர்களுக்கும் 
அவர்கள் முயற்சிகள் தோல்வியடையும்போது 
தெய்வ சிந்தனை உண்டாகிறது 
"தெய்வம் இருக்கிறது அதன் சக்தி தான் பிரதான சக்தி"
என்பதை உணருகிறார்கள் 

இந்த உண்மைய வலியுறுத்தவே ஓர் ஆங்கில ஆசிரியர் 
"மனிதப் பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வி அடையும் போது 

தெய்வம் பிறக்கிறது" என்று சொன்னார்...

நெருப்பு காதல்...

காதலை நெருப்பு என்று கூறுவது முற்றும் பொருத்தமானது
நெருப்பு சொற்பமாயிருந்தால்
காற்று அடித்ததும் அணைந்து விடுகிறது
பெருநெருப்பாயிருந்தால் காற்று அடிக்க அடிக்க
நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்துவிட்டு எரிகிறது
நெருப்புக்குக் காற்று எப்படியோ
அப்படிக் காதலுக்குப் பிரிவு
பொய்க் காதலாயிருந்தால் பிரிவினால்
அது அழிந்து விடுகிறது
உண்மைக் காதலாயிருந்தால் பிரிவினால் அது
நாளுக்கு நாள் வளர்ந்து பெரு நெருப்பாய் மூளுகிறது...

மனிதன்...

மனித சக்திக்கு எதுவும் மீறியதல்ல
பிசாசுகளையும் பூதங்களையும்
உருவாக்கியவனே மனிதன் தான்
அவற்றை அடக்க மந்திரங்ககளையும்
உருவாக்கியவனும் அவனேதான்...

போர்...

தனி மனிதன் இன்னொருவனுடைய உயிரை
வாங்குவது கொலை
அதே கொலையை மனிதர்கள் கூட்டமாகப்
பெரு அளவில் செய்யும் போது
அது போர் என்ற புனிதச் சொல்லால் அழைக்கப்படுகிறது...

பெண்களுக்காக ஏற்பட்ட துணைவர்கள் மூவர்...

வாழ்க்கையில் பெண்களுக்காக ஏற்பட்ட
துணைவர்கள் மூவர்

இளமையில் தந்தை
வாலிப பருவத்தில் கணவன்
முதுமையில் மகன்

இந்த மூவருக்கு அடங்கியே
பெண்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்
அந்த மூன்று துணைவர்களில்
பெண்கள் இரண்டறக் கலப்பது
வாலிப பருவத்தில் கிடைக்கும் துணையுடன் தான்
இனம் தெரியாத இளமைப்பருவமே
வாலிபத் துணையின் அவசியத்துக்கு கொடி காட்டுகிறது
முதுமை வாலிபத் துணையின் நாள்களை
நினைத்து சாந்தி பெறுகிறது...

புதிர்...

விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள்
விவரம் புரியாத எத்தனையோ பதில்கள்
இரண்டும் கலந்ததுதான் இயற்கையளிக்கும் காதல் பாசம்
அதைக் காதலாகவும் இலக்கியத்திலும் அகராதியிலும்
வித்தியாசம் மிக பெரிதாயிருக்கலாம்
அனுபவத்தில் ஏற்படும் வித்தியாசம் மிக நுண்ணியது
கண்ணுக்குத் தெரியாத கயிறு அது
விதி ஒன்றே விளக்கக்கூடிய பெரும் புதிர்
காலம் ஒன்றே அவிழ்க்கக்கூடிய பெரும் சிக்கல்...

எட்டாத பழம்...

எட்டும் பழத்தை விட
எட்டாத பழத்துக்கு இனிப்பு அதிகம்
முயற்சியின் கஷ்டம் அதற்குள்ள
மதிப்பை ஒன்பது மடங்காக்குகின்றது...

இயற்கையின் விந்தைக் கரங்கள்...

மனிதன் காலை வைக்ககூட
இஷ்டப்படாத சேற்றிலிருந்து அவன் எடுத்து
மணந்து இன்பப்படும் தாமரை முளைக்கிறது

தொட்டால் குத்துமே என்று அவன் வெறுக்கும்
முட்களுள்ள மடல் கூட்டத்தில் பிறக்கிறது
அவன் ஆசையுடன் எடுத்து மகிழும் தாழை மலர்

கையில் பட்டாலே அடுத்த வினாடி 
நீர் விட்டுக் கழுவிகொள்ளும் கரியிலிருத்து 
அவன் பெருமையுடன் நகைகள் செய்து
அணிந்து கொள்ளும் வைரம் விளைகிறது 

வெட்டி தூர எறியும்
சிப்பியிலிருந்துதான்
கட்டி முத்து கிடைக்கிறது

இயற்கையின் விந்தைக் கரங்கள்
கெட்டதிலிருந்து அழகையும்
அதிலிருந்து நல்லதையும்
உருவாக்கி விடுகின்றன...

சோதிடம்...

விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது
நட்சத்திரங்ககளின் அசைவுக்குத் தகுந்தபடி
மனித வாழ்க்கை இயங்குகிறது என்று சோதிடம் கூறுகிறது...

மனச்சலனம்...

மனச்சலனம் மட்டும் இல்லாதிருந்தால்
உலகத்தில் வாழ்க்கை எத்தனை இன்பமாயிருக்கும்

ஒரே இன்பமயமாகிவிட்டாலும் வாழ்க்கைக்கு
அர்த்தமிருக்காது
துன்பத்தின் கரையில் தான்
இன்பத்தை அனுபவிக்க முடியும்...

மனிதர்களின்‬ மனம் பலவிதம்...

சில பொருள்களை பிரிந்தால்
மீண்டும் காணவேண்டும் அடைய வேண்டும்
என்னும் ஆவலிலே மற்ற வேலைகளைக் கவனிக்காமல்
பொழுதைக் கழிப்பவர்கள் உண்டு
பிரிந்த பொருளை மீண்டும் எப்பொழுதாவது சந்திப்போம் 
எனும் ஓர் ஆசையால் மனத்தின் ஒரு மூலையிலே
அந்த நினைப்பு பாதிக்கப்பட்டு மற்றவற்றை 
கவனித்து விட்டுச் செல்லலாம் என்ற 
குண மூடையவர்களும் உண்டு...

காதல் என்றால் என்ன?...



ஒரு பொருள்மீது இதயத்தை படரவிட்டு
அழியாது நிலைத்திருப்பது தானே காதல்

ஒரு பொருள் அதன் மதிப்பு எல்லையற்றது
அளவிட முடியாதது அதைப் பார்த்தவுடனேயே
நட்டம் ஏற்படுகிறது அதை அடைய துடிக்கிறோம்
ஈடுபாடு அதிகமாகிறது அதை அடைவதற்கு
ஏற்படும் இன்னல்கள் எதுவாயினும் ஏற்கத் துடிக்கிறோம்
அந்த நிலை ஏற்படுவதற்கு
இயங்கும் சக்தியைத்தான் காதல் என்கிறோம்...

நட்பும் பாசமும்...

நட்பு என்பதும் பாசம் என்பதும் எப்போது
ஏன் எப்பிடி நடக்கிறது என்று
காரணகாரியம் சொல்ல முடிவதில்லை...

தாய்...



தாயை மிஞ்சிய சுமை தாங்கி கிடையாது
அங்கே ஒரு பிள்ளை எத்தனை பாரத்தை
வேண்டுமானாலும் இறக்கலாம்
அன்னையின் அறிவுக்கு மிஞ்சிய சாத்திரம் கிடையாது
அங்கே எந்தப் பிரச்சனைக்கும் விடை காணலாம்
அம்மாவின் முகத்துக்கு மிஞ்சிய சந்தனம் கிடையாது
அங்கே எந்த வெப்பத்துக்கும் குளிர்ச்சி பெறலாம்...

கோபம்...

கோபம் யார் கண்ணையும் மறைக்கவல்ல
ஒரு பெரும் திரை
அந்தத் திரையைச் சரேல் சரேலென
மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப்
பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில்
பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...

அன்பும் ஆசையும்...

அன்பு மெள்ள மெள்ள முளைப்பதில்லை
திடீரென்று தான் ஏற்படுகிறது
அதுவும் ஆசையைப் போல்தான்

அழகான மலரைப் பார்க்கிறோம்
திடீரென்று ஆசை பிறக்கிறது
ஓர் அழகான பெண்ணைப் பார்க்கிறோம்
திடீரென்று அன்பும் பிறக்கிறது
அன்பும் ஆசையும் முளைப்பது சில விநாடிகளில்தான்
அவற்றுக்கும் காலமும் யோசனையும் தேவையில்லை...

தத்துவம்...

வறண்ட வாழ்க்கைக்கு அவ்வப்பொழுது
சிறிது உயிரூட்டும் ஒரே சாதனம் தத்துவந்தான்
தத்துவங்களிலும் பல மாறுபாடுகள் உண்டு
அவை மனித சுபாவத்துக்குத் தக்கபடி
மாறுபட்ட உணர்சிகளையும் அர்த்தங்களையும்
அளிக்க வல்லவை
வாழ்வில் எது வளர்ச்சி எது விழ்ச்சி
என்பதை நிர்ணயிப்பதுகூட சுலபமல்ல...

மண்...

நாம் வாழும் மண்
எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது
எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது
மண் தாய் அவள் தான் குழந்தைகளில்
யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை
எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள்
என்றாவது ஒரு நாள்.

மண்ணிடமிருந்து வருகிறோம்
மண்ணால் வளர்கிறோம்
மண்ணுக்கே போகிறோம்
மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

காதல்...

உறக்கத்திற்குக் காதல் பெரும் விரோதி
உறங்காத சமயத்திலும் கனவை அளிக்கும் சக்தி
காதல் ஒன்றுக்குத்தான் உண்டு...

கண்ணீர்...

துன்பம் அளவுக்கு அதிகமாகிவிட்டால்
கண்ணீரும் வியர்வையாகி விடுகிறது...

பயம் வேறு பக்தி வேறு...

பயம் வேறு பக்தி வேறு
பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது
இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும்
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்

உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில்
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப்
பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது
வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர்
கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து
தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள்
இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும்
பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக்
செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்
தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத்
தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ
என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம்
நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான்
தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு
வழிகாட்டும் பெரியோர்களிடத்தும்
பயபக்தி வேண்டும் என்று
பயத்தையும் பக்தியையும் இணைத்தே
உலகம் கூறுகிறது...

அம்மா...


மற்றக் கடவுள்களைப்போல
ஏனோதானோ என்று
படைத்து மட்டும் விடாமல்
என்னை படைத்து இந்த உலகத்தில்
வாழவும் பழக்கிவிட்டாள் என் அம்மா...

உலகம் மிகச் சிறியது...

உலகம் மிகப்பெரிது என்று நாம் எண்ணுகிறோம்
ஆனால் அது உண்மையில் மிகச் சிறியது
ஏனென்றால்
நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத
இடங்களுக்குப் போகிறோம்
மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம் 
கனவிலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம்
ஆகவே ஆண்டவன் படைப்பில் 
இந்தப் பரந்த உலகம் மிகச் சிறிய கிரகம் தான்
அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில்
எடுத்து வீசப்படும் நாம் 
இந்தக் கிரகத்தின் எந்தப் பாகத்தையும் அடைகிறோம்
எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில் அகப்பட்டுக் கொள்கிறோம்
அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது 
ஆயுளில் அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம்...

முதற்காதல்...

மனித வாழ்க்கையில் முதற்காதல்
ஒரு மகாகாவியம்
அதற்குப் பின்னால் வாழ்க்கையில்
எத்தனை பெண்கள் வந்தாலும்
அவர்கள் தற்கால அழகிகளாகவே 
தோற்றமளிக்கிறார்கள்...

மரங்கள்...



மரங்கள் மனுஷனைப் பார்த்து கேட்டுச்சாம்
நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக
எத்தனை லட்சம் சிலுவைகளைத் தந்திருக்கிறோம்
ஆனால் மனிதர்களே, உங்களால் ஏன் ஒரு
ஏசு கிறிஸ்துவைக்கூட தர முடியவில்லை என்று...

இயற்கையின் ரசிகன் நான்...

வானத்தை ரசிக்காத நாளே இல்லை
வானம் ஒரு நகரம் போல எனக்கு தோன்றும்
விண்மீன்கள் பார்த்தவுடன் என் காதலி கூந்தலில்
ஆபரணமாக சூட்ட நினைப்பேன்

வானில் தெரிந்த நகரம் பெரும் சனத்தொகை
கொண்ட ஒளிமயமான ஒரு நாடு போலவும்
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விளக்கு
எறிவது போல எனக்கு தோன்றும்

ஆனால் அது அமைதியான நகரம்
ஒருவர் கூட ஒரு சப்தமும் எழுப்பவில்லை
நான் தான் பெரியவன் நான் செய்வதுதான் சரி
என்ற குரல்களே வரவில்லை
நாங்கள் தவறு செய்யவில்லை எல்லாம்
தற்செயலாகத்தான் நடந்தது என்று யாரும்
சாக்குபோக்கும் சொல்லவில்லை

தனக்கு மேலிருப்பது தன் சாதனைகளை
தம்பட்டம் அடித்துக் கொள்ளாத நாடு

நான் இப்பிடி வானத்தை ரசித்து கொண்டு இருப்பேன்
வானத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்...

நம்மை அறியாமல் ஒரு சக்தி...

மனித கண்ணுக்கோ கருத்துக்கோ புலப்படாத
ஆண்டவனின் சக்திக் கயிறுகள்
எப்பிடியெல்லாம் மனிதப் பொம்மைகளை இயக்குகின்றன
எந்தெந்த இடங்களில் கொண்டு மோதுகின்றன
நம்மை அறியாமல் ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது...

வாய்க்கும் உள்ளத்துக்கும்...

வாய்க்கும் உள்ளத்துக்கும்
எதோ பெரும் ஏற்பாடு ஒன்றிருக்க வேண்டும்
ஒன்று செயலற்று இருக்கும் போது தான்
இன்னொன்று துடிப்புடன் பேசத் துவங்குகிறது...

காதலர்களுக்குள்ள வித்தியாசம்...

பொண்ணுங்க அளவ காதலிப்பாங்க
அதிகமா புரிஞ்சுக்குவாங்க

ஆம்பளைங்க அதிகமா காதலிப்பாங்க
அளவ புரிஞ்சுப்பாங்க...

எது அழகு எது அழிவு...

கண்ணுக்கு மிக அழகாகத் தெரியும்
நல்ல பாம்பிடமும் தான் மனிதன்
உயிரை குடிக்கும் சிறந்த விஷம் இருக்குறது

நாக்குக்கு ருசிக்கும் இனிப்பில்தான்
மனித சக்தியை உறிஞ்சி நாசம் செய்யும்
கடுமையான வியாதிகள் மறைத்து கிடக்கின்றன

அழகிய நெருப்பு ஜுவாலைதான்
எதையும் பொசுக்கி அழித்து விடும்
சக்தி இருக்கிறது

அழகிய கடலலைகள் தான்
உலகத்தின் மாபெரும் நகரங்களை அழித்து
பசுஞ் சோலைகளை பாலைவனக் காடுகளாக்கி விடுகின்றன

இப்பிடி விகாரத்திலிருந்து அழகையும்
அதிலிருந்து விகாரத்தையும்
அழிவிலிருந்து ஆக்கத்தையும்
ஆக்கத்திலிருந்து அழிவையும்
இயற்கையும் விளைவிப்பதால்

எது அழகு எது விகாரம்
எது ஆக்கம் எது அழிவு என்பதை
மனிதன் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
புரிந்து கொள்ள முடியாத பெரும் பிரமையிலேயே
கால வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது...

தாய்மை...



பெண்ணிடம் தாய்மை தத்துவத்தைப் படைத்து விட்ட ஆண்டவன்
முதன் முதலில் அவர்கள் அந்தப் பேற்றை அடையும் போது
கருவிலே வளரும் குழந்தையை எண்ணி
அந்த தாய் இன்ப நினைவும்
அந்த குழந்தை நல்ல படியாக பிறந்து 

நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமே என்ற கவலையும் 
அதனால் ஏற்படும் இடர்களுமாகப் பலவித உணர்ச்சிகளை 
அடைய வைத்து விடுகிறான்...

தாயின் வயிறேனும் சுவர்க்க கமலத்தினின்று 
ஆசாபாசங்கள் நிறைத்த மண்ணிலே விழுந்தவுடன் 
எழுப்பும் ஒலி கேட்டவுடன் தாய் எல்லா நினைவுகளையுமே 
விட்டு விடுகிறாள்...

சூழ்நிலை...

காலம் சூழ்நிலையை படைக்கிறது
சூழ்நிலை இரும்பு மனதைக்கூட
மாற்றிவிடுகிறது...

சிலபேரின் உள்ளம்...

சிலபேரின் உள்ளம்
நடுக்கடல் போன்றது
அலை வீசாது
ஆனால்
அதன் அழத்தைக் கூறமுடியாது...

காதல்...

இன்று காதல் சுபாவமாகவும்
கண்ணீர் அதற்கு விலையாகவும் ஆகிவிட்டன
ஆனால் அந்தச் சுபாவத்திற்குத் தப்பியவர்கள்
சிலரும் உலகத்தில் இருக்கிறார்கள்

இயற்கையாகவே எந்தப் பெண்ணின்
நளினத்திற்கும் வசப்படாத மிகச் சிலரும் உண்டு...

ஆண் பெண்...

எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவள் விலகி விலகிச்
செல்லத்தான் ஆணுக்கு ஆசை அதிகமாகும்
வலிய வலிய வந்து ஒருத்தி மேலே விழுந்தால்
அவள் பேரழகியனாலும் வெறுப்பு தான் வரும்...

Thursday, January 2, 2014

பெண்...

ஒருவர் நான்கு நாட்கள்
நம்பிக்கைக்குரியவராகக் காட்சியளித்து விட்டால்
தன் சகல உடைமைகளையும்
அவரிடம் ஒப்படைத்து விடுகிறாள் பெண்...

பெண்...

இக்கட்டான நேரங்களில்
பெண்ணுக்கு வரும் துணிச்சல்
சிங்கதுக்குக் கூட வராது...

சீதை...

இராமன் காட்டுக்குச் செல்லும்போது
சீதை ஏன் கூடச் சென்றால்?
கணவன் மீது இருந்த காதலால்
மட்டுமல்ல அங்கும் ஒருத்தி
வந்து விடக்கூடாதே என்றுதான்...

இரவு...

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே
ரகசியத்தை வைத்த இறைவன்
அந்த ரகசியத்தைப் பரிமாறிக்கொள்ளவே
இரவைப் படைத்து இருக்கிறான்
இல்லை என்றால் இரவு என்ற
ஒன்றே இல்லாமல் வாழ முடியாத என்ன?...

தனிமை...

துன்பப்பட்டவன் தனிமையை
நாடினால் சமயங்களில்
தற்கொலை எண்ணமே வரும்...

மெழுகுவர்த்தி...

மனிதன் பலபேரின் உதவி இருந்தாலும்
தான் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிறான்

எவரின் உதவியும் இல்லாததால்
தன்னைத்தானே அழித்து
திரியை சின்னதாக்கி தீயோடு
சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி...

வாழ்க்கை போராட்டம்...

வாழ்க்கை போராட்டம் மனிதர்களுக்கு மட்டுமில்லை
எல்லா உயிர் இனங்களுக்கும் தான்
மனிதன் மட்டும் தான் சோதனையிலும் வேதனையிலும்
புழுவாய் துடிக்கிறான்...

உன் சுதத்திர வாழ்க்கை உன் கையில்...



நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சனை பெரிய வியாதியே இது தான்
ஒவ்வொருவரையும் அவர் படிக்கும் போதே
அவர் இந்த வேலைக்கு என்று முடிவு பண்ணிவிடுகிறோம்
அல்லது அவர் படிப்பை வைத்து அவர் இந்த வேலைதான்பார்க்க வேண்டும்
என தீர்மானித்து விடுகிறோம்
சொல்லப்போனால் இது எழுதப்படாத சட்டம் போல்ஆகி
எல்லோரது வாழ்க்கையிலும் புகுந்து விளையாடுகிறது

ஆக கடைசியில் மனிதனாய் பிறப்பதேபடிப்பதற்கு
பின் படித்த படிப்பிற்கு வேலை தேடுவதற்கு
பின் கல்யாணம் குடும்பம் என சொட்டிலாகி விடுவது
என ஒரு குறுகிய வட்டத்திற்குள்அடைப்பட்டு விடுகிறது

அதைத் தாண்டி யாரும் சிந்திப்பதும் இல்லை
நம் வீட்டாரும் சரி நம்மை சுற்றியுள்ளவர்களும் சரி
நம்மை இப்படி சிந்திக்க விடுவதுமில்லை

நாம் விருப்பப்பட்ட வாழ்க்கையை நாம் ஏன்அமைத்து கொள்ளகூடாது?
என்பது பற்றியெல்லாம் யாரும் சிந்திக்க முடியாத அளவுக்கு
ஒவ்வொருவரும் ஒருவித காட்டாயத்தில்அகப்பட்டு விடுகிறோம்
அப்பிடியே வாழ்ந்து நம் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம்
பிறப்பு இறப்பு இந்த இரண்டுக்குள்ளும் நாம் காண்கிற கனவு
சிலது பலித்து விடுகிறது சிலது கனவாகியே விடுகிறது
நாம் எப்பிடி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ
அது முடியமால் அந்த தவிப்பையும் மனதில் வைத்துகொண்டு
இறந்து போகிறோம்

நீ என்ன வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறயோ
அது வாழ முடிந்தவரை முயற்சி செய்
உன் வீட்டார் சுற்றத்தார் எதிர்ப்பை மீறி
நீ நினைத்த ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்...
PAKEE Creation