Tuesday, September 29, 2009
உன்னை ஞாபகப்படுத்த...
எத்தனை பிறவி வேண்டுமடி...
உன்
இமைகள்
பாடும் தாலாட்டில்
என்
இதயம் விழிக்கும்
சுகமாக!
உன்
விழிகள்
வீசும் பூங்காற்றில்
என்
உள்ளம் இசைக்கும்
பூபாளம்!
உதட்டில்
உயிரை வைத்தாயோ
என்
உள்ளம் முழுதும்
மின்னல்
அடிக்குதடி!
எத்தனை அழகு
உன்
கூந்தல்
என்னை மறந்தேன்
கண்
சிமிட்டவில்லை!
நிலவை பிழிந்து
வடித்தாரோ?
இல்லை
தங்கத்தை செதுக்கி
செய்தாரோ?
சேலைப்போர்த்திய
உன் அழகு
சிந்தும் கவர்ச்சி
சிலிர்க்குதடி!
உன்
பாதம் கொஞ்சும்
மொழியழகோ
உன்
கொலுசுகள்
பாடும் இரரகங்கள்!
வார்த்தைகள்
இன்னும்
உதிர்க்கவில்லை
ஏன்
பாற்கடல் அமுதம்
ஏதுமுண்டோ?
எதை
எதையெல்லாம்
அழகென்றேன்
இன்று வெட்கித்
தலைக் குனிந்தேன்!
இத்தனை அழகை
ரசிப்பதற்கு
எனக்கு
எத்தனை பிறவி
வேண்டுமடி?
Sunday, September 27, 2009
எப்படிச் சொல்வது...
பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.
ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.
கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
நான் உன்னை நேசிக்கிறேன்...
உணர்கிறேன்...
காதல் தோல்விகள்...
குமுறி வெடிக்கும் இதயம்...
குமுறி வெடிக்கும் இதயம்
சாவை நோக்கிஅழைக்கிறது
நெருப்பு நீரில் குளித்தெழும்ப
மனம் என்னை இழுக்கிறது
நினைத்துக்கூடப் பார்க்கவில்லை
நிம்மதி தந்தவள்
நிறுத்திவிடுவால் என்று
காற்று நின்று இதயம் அடித்து
கண்கள் மூடும்வேளை
கானல் நீராய்ப்போன வாழ்க்கை
குறுகிப்போய்விடும் என் உடல் கருகிப்போய்விடும்
உடல் எரியும் சாம்பல் மேட்டில்
ஊளை இட்டு நாய் வாலை ஆட்டும்
காதல் நிலைத்தது எனக்காட்ட
காலால் கிளறும் என் இதயத்தை
ஆப்பொழுது தெரியும்
நாய்க்குத்தெரிந்தது
எனக்குத்தெரியவில்லையே என்று
காதல் வலி...
என் வாழ்வின் சந்தோசம்
என் காதல் என்றிருந்தேன்
உன் அழகை ரசித்தேன் - அதைவிட
உன் உள்மனதை புரிந்து கொண்டேன்
நீயோ! என்னை ஸ்பரிசத்துக்காக
ஏங்குபவன் என்றாய்
உன் வார்த்தை வலியை விட
என்னை காதல் வலி கொல்கிறது
ஞாபகங்கள் துரத்துகின்றன
தவிர்க்க முடியவில்லை
இன்றும் கானல் நீராய்,
என்னுள் என்னை ஏமாற்றுகின்றாய்
நித்திரை இன்றி, கனவுகள்
தொலைந்த இடம் தெரியவில்லை
உணவு இன்றி, பசி
தொலைந்த இடமும் தெரியவில்லை
மாரி மழை பொழிந்தாலும் - என்னை
சோக மழை நனைக்கிறது – ஆனால்
உன் எண்ணங்களை கரைக்காது
காப்பதற்கு என் நெஞ்சில் திடம் இருக்கிறது…
காதல் வலி...
காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இதயம் திறந்து சொல்லாமலே
இனம் கண்டு கொண்டேன் நான்…
அமைதியாக இருக்கும் உனக்குள்
ஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை
பார்த்த மருகணமே உணர்ந்துக்கொண்டேன்
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!
இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!
உண்மை...
என் இதயத்தில்....
நீ வந்த போதும்
என் இதயத்தில் நுழைந்த போதும்
தடுக்க நினைக்கவில்லை காதலை
நீ போகின்ற போதும்
இதயம் வேகுகின்ற போதும்
என்னால் அடக்க முடியவில்லை
சோகத்தை
வார்த்தைகள் கொடுக்கும் வலியை உன்னால் உன்னால் என் இதயம் துடிப்பது உனக்காக, என் இதயம் இருப்பது உன்னிடம், நான் கண்ணீர் சிந்துவது உன்னால், என்னை இழக்கப் போகிறேன் நீயாக வந்தாய் நான் வாழ்வது சந்தேகமடி உயிரே மனசு மட்டும் உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது என்னவளே ஏன் எங்கிருந்தாலும் உள்ளம் ஊமையாய் உறக்கம் மறந்து போனதே பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில், சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும் முன்பு, மழையில் நான் நனையவில்லை, நேசிக்கும் முன் யோசி வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல… அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு உன் என் கண்ணீர் காய்வதேயில்லை! பார்வை விட்டு
அறிந்து கொண்டேன்..!
நீ நம் காதலை
மறந்துவிடச் சொன்ன போது..!!
நீ சொன்னது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!
உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி,
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!
உன்னை இழக்க முடியாமல்..!
நான் நீயாக மறினேன்
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று - உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..?
பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்த என் தோழியே….
இன்று,
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசனை ஏனோ…..
ஈரம் காய்ந்து போவதற்கு…..
மணலில் நான் விழவில்லை,
உதறி விட்டு நடப்பதற்கு…..
களவையும் கற்று மற என்றனர்….
காதலை கற்றேன், மறப்பதெப்படி?
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்
நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல்.
என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.
மறக்கவே முடியவில்லை...
கண்கள் மூடி தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?
நீதான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..
நம் காதலை..
மறுபடியும் ஏன்
வருகிறாய்? என்
நினைவுக்குள்.
மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம்
காதல் நினைவுகளையும்
மறந்துவிட
அது என்ன நினைவுகளா?
இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.
நானும் உன்னை
மறந்திடலாம்
என்றென்னி இறைவனிடம்
வேண்டி நின்றேன்
அவனும் என்னை மறுத்துவிட்டான்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்.
ஏமாற்றங்களின் நெடும் பயணம்...
இறுதியாக கேட்டுச் செல்...
வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!
ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?
இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?
ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…
பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!
ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!
பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல
ஊமைக் குயிலடி நான்...
கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே
தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்
ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி
என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்
புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி.
புரியவில்லை...
காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....
என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...
சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...
என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...
எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...
நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
காதல் சோகம்...
புயலாய் வந்தாய்... பனியாய் உருகினேன்
மேகமாய் மறைந்தாய்... குழத்தையாய் அழுகிறேன்.
கண்ணீரும் கவிதையுமாய் நான்
கணவனோடு நீ....
காதல் வந்ததால் கவலை வந்ததா
கவலை வரவே காதல் செய்தாயா?
முதல் காதலும் நீ
முழுதாய் காதலை முடித்தவளும் நீ.
இன்று மாற்றான் மனைவியாய் இருக்கிறாய்
உன்னை நினைத்து என் காதலை
மாசாக்கிக் கொள்ள விருப்பமில்லை
காலம் நம் கையில் என்று காதலித்தோம்
இன்றோ காலத்தின் கையில் நாம்
கலக்கம் வேண்டாம் கவலையும் வேண்டாம்
கணவனை மட்டும் நினைத்து கண்ணியமாக வாழ்
இந்த கவிதையோடு
என் காதலையும் முடித்துக் கொள்கிறேன்.
Thursday, September 24, 2009
ஆசை...
அன்பு ...
என் உயிர்...
Tuesday, September 15, 2009
நண்பனாகப்பட்டவன்...
நட்புடன்...
கண்களில் தொடங்கி
காலங்களில் நிறைகின்றதடா நட்பு....
அறிமுகம் கிடைத்தவுடன் ஆயுசுக்கும் முடிவதில்லை....
உன் நட்பு ஒரு பொது சொத்து..அதில்
என் பங்கை பட்டாயிட்டு விட்டாய்...... இனி
என் முயற்சிகளில் முதலாமவன் நீ....
வெற்றிகளில் கைதட்டும் கரம் நீ....
வேதனைகளில் தோள் கொடுக்கும் தோழன் நீ...
லட்சியத்தின் லட்ச தீபம் நீ....
வானம் போலவே உன் நட்பின்
தேவை முடிவதில்லை................
Monday, September 14, 2009
சொல்லிவிட்டு செல்...
உனக்காய் நான் அழுதுகொள்கின்றேன்...
நம் காதலின் சின்னமாக…..
அன்புத் தோழனாய்...
என்னை எப்பொழுது புரிந்துக்கொள்வாய்....?
உன் நினைவுகளை...
என்காதலை வாழ வைப்பேன்... !
உன்னை மன்னிக்கிறேன்....
நட்பு...
உனக்கு தெரியவில்லையா...?
I missed you so much...
எனக்குப் பிடிக்கும்...
Saturday, September 12, 2009
இப்படிக்கு உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன்
என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.
உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.
எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்
விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?
வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?
எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்
என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.
விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்
எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
புதைந்து கிடந்தாலும்
புதையலாகவே கிடக்கின்றேன்.
இது எனது நண்பன் அஜய் என்பவரால் எழுதபட்டது