Saturday, December 25, 2010

என்மேல் பாசம் வைப்பவர்களையும் வெறுக்கிறேன்...


என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்...

என்னால் மறக்க முடியவில்லையே...


அன்பே உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும் நினைக்கின்றேன்
ஆனால் உன் பார்வைகள் என் மேல்
விழூந்த அந்த நாளை...
உனக்காய் நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் ஆனால் என்னால்
மறக்க முடியவில்லையே...

சொர்க்கத்தில் அல்லவா இருந்திருப்பேன் ...


உந்தன் நினைவுகளே என்னை
இவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கே
உந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்
வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவா
இருந்திருப்பேன்...

இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்.....


இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்
அப்போதெல்லாம் உன் நிழலை விட
நெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்
உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்
சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்
உன்னுடனான நிஜங்களே வேண்டும் ....

Sunday, November 14, 2010

அழியாத காதல்...


நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு..
நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்..
உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ..
துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ..
என் உயிரை நீ அழிக்கலாம்,உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு
என் கண்களின் கண்ணீர்...
நீ என்னை பிரிந்ததின் பிரதிபலிப்பு
என் அண்ணன் எழுப்பிய கல்லறையில்
எனது ஆழ்ந்த நித்திறை...

காதல் ரோஜா...


காதல் எனும் மலரைப் பறிக்க
ரோஜா தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த நான்
கையிலொரு அழகிய மலரைப் பறித்துக்கொண்டு
வெளியே வந்தேன்...
கையில் வைத்திருந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தவர்களின்
கண்களுக்கு புலப்பட வாய்ப்பில்லை
என் கையில் தென்படும் கீறல்களும் காயங்களும்...

உயிரையே துறந்தேன் நான்...

இமைக்க மறந்தேன் நான்-என்
கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என்
இதயத்திற்குள் உறங்கும் உன்
தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ
என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..

உயிராக அவளை நினைத்தேன்...


உயிராக அவளை நினைத்தேன்
அப்போது எனக்கு தெரியவில்லை
உயிர் எப்போது வேண்டுமனாலும்
பிரியும் என்று.....

காதல்...


உறவுகளை நிலைக்க வைத்திடும் காதல்...
வேதனையை தாங்கிடும் காதல்...
வெற்றியைத் தந்திடும் காதல்...
சரித்திரம் படைத்திடும் காதல்...
இது பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள காதல்..

மறக்க தெரியாது...


மழைக்கு அழத்தெரியும் ஆனால்
சிரிக்கத்தெரியாது
சூரியனுக்கு எரிக்கத்தெரியும் ஆனால்
அணைக்கத் தெரியாது
எனக்கு நினைக்கத்தெரியும் ஆனால்
மறக்க தெரியாது...

நட்பு...


உள்ளம் ரெண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகும்...
அதே உள்ளத்தில் நட்பு துளிர்விட்டால்
கண்ணீர் என்ற வார்த்தை
வாழ்க்கை அகராதியிலிருந்தே அழிந்து போகும்...

உண்ணை எனக்குப் பிடிக்கும்...


கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
அது என் கவலை தீர்க்கும் வரை
உறவுகள் எனக்குப் பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை
உண்ணை எனக்குப் பிடிக்கும்
என் உயிர் பிரியும்வரை...

நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...


நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...
இதயமாக இருக்க வேண்டாம்
ஏன் என்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ விரும்பவில்லை...
நட்பு என்றால் என்னவென்று யோசித்தேன்...
நல்ல வேளை உன்னை சந்தித்தேன்.......
இல்லை என்றால் தெரியாமலே போயிருக்கும்...

என் காதலி...


அன்று என் இதயத்தை வடம் பிடித்து
தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி!!!!
இன்று ஊர் பார்க்க மணமகள்
ஊர்வலத்தில், அவள்...
கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய்...
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய்!!
சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
"என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும் கணம்"...
¸.•♥•PAKEE Creation¸.•♥•

மறக்கவே முடியவில்லை....


கண்கள் மூடி
தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?

நீ
தான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..நம் காதலை..
மறுபடியும் ஏன் வருகிறாய்? என் நினைவுக்குள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல் நினைவுகளையும்
மறந்துவிட அது என்ன நினைவுகளா?
இல்லை..என் வாழ்வின் நியங்கள்.

நானும் உன்னை
மறந்திடலாம் என்றென்னி
இறைவனிடம்வேண்டி நின்றேன்
அவளும் என்னை மறுத்துவிட்டாள்

மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்....
¸.•♥•PAKEE Creation¸.•♥•

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை புரிந்துகொள்.....

காதல் தோல்வியா அழு....
வாய் விட்டு அழு....
கதறிக் கதறி அழு....
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும் வரை அழு....

பின்பு உலகத்தை பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்
காதல் தோல்வியையும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்
அழகுகளை ரசிக்க கற்றுக்கொள்
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்
வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்துகொள்...

பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்
காதல் இறந்ததற்காக உயிரை சிந்தத் துணிகிறாய்
காதல் புனிதமானதுதான்.....
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை

விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கின்றோம்.

காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்

தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்

காதலையே வெறுத்திருந்தால்

களவைப் போல் காதலையும் கற்று
மறந்ததாய் நினைத்துக்கொள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்.....

¸.•♥•PAKEE Creation¸.•♥•

நான் தோற்றுவிட்டேன்...


காதல்
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை

மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது

வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...
¸.•♥•PAKEE Creation¸.•♥•

Monday, August 2, 2010

இறந்தால் சொர்க்கம் எப்படி...


இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ...

என் இதயத்தில் இருப்பதாலடி...


இறக்காத காதல் ஒன்னு
என் இதயத்தில் வாழுதடி..
இறக்கவென நான் சென்றேனடி...
இதயமது இறக்க மறுத்ததடி...
இறக்காத உன் நினைவுகளும்
உன் மேல் கொண்ட காதலும்
என் இதயத்தில் இருப்பதாலடி...

மரண நேரத்தில்...


மரண நேரத்தில்

உன் மடியின்

ஓரத்தில் இடமும்

கிடைத்தால்

இறந்தும்

வாழுவேன்

உன் பாதத்தில்...

நான் மட்டும்தான் உயிரைக் கொடுப்பேன்...


உனக்குத் தெரியுமா?
உன்னுடைய வார்த்தைகளுக்கு
மற்றவர்கள்...
செவி கொடுப்பார்கள்
நான் மட்டும்தான்
உயிரைக் கொடுப்பேன்...

நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது...


உனக்கு பிடித்த நானும்,
எனக்கு பிடித்த நீயும்,
நமக்கு பிடித்த நம் காதலும்,
யாரிற்கும் பிடிக்காததால்,
உன்னை பிரிந்து நானும்,
என்னை பிரிந்து நீயும்,
நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது..

உன்னை மறக்க நினைக்கிறேன்....


உன்னை மறக்க நினைக்கிறேன்,
நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் முகம் என் கண்முன்னே வருகிறது
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண்முன்னே வருகிறது..

இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா...


பிரிந்து விட்டதால்
முடிந்து விட்டது
என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது
"என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "
இனி உன்னால் நிம்மதியாக
வாழ முடியுமா என்று"...

வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...


விழியில் விழுந்தாய்!
என் இதயம் நுழைந்தாய்!
உயிரிலும் கலந்தாய்!
எனை ஏன்! பிரிந்தாய்?

உன் மேல்
நான் கொண்ட பிரியாத
அன்பை புரியாமலே
பிரிந்து சென்றாய்

நம் நினைவுகளை
தண்ணீரில்
எழுதி சென்றாய்
எனை கண்ணீரில்
மிதக்க வைத்தாய்!

என் உயிரில்
வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!

ஒரே வினாடியில்
என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்தாய்!

உன் பிரிவை மறக்க
முயல்கிறேன்
முடியவில்லை!

உன் பிரிவை மறக்க
நினைக்கும்தோறும்

இதயத்தில் இறங்கிய
முள்ளாய் என்னுள்
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...

திரும்ப தர முடியுமா உன்னால்...


வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !

கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !

ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !

துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !

பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !

உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !

உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !

உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !

இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை

திரும்ப தர முடியுமா உன்னால்?...

காதல் தோல்விக்கு பின்...


காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்-
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை அவளின் நினைவுகள்!

காதலில் தோற்பவர்கள்..


காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு ...

கவிதைகள் உனக்காக...


கவிதைகள் உனக்காக
உனக்கும் எனக்கும் இடையே
எஞ்சி இருப்பது
சில கவிதைகளும் ரணங்களும் தான்
கவிதைகள் உனக்காக...
ரணங்கள் எனக்காக...

உன் அன்பு மட்டுமே....


உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம் ...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர் ...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள் ...
நீ மட்டுமே"நான் "...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்..."

உன்னோடு பேசாமல்...


உன்னோடு பேசாமல்

இருக்கும் பொழுதெல்லாம்
உன்னை மறந்தேன் என்றில்லை!

உன்னோடு பேசாத
பொழுதுகள் எல்லாமே
உன் நினைவிலேயே
மூழ்கித் தவிக்கிறேன் நான்!

கண்ணைத் தழுவாத
தூக்கத்தில் கூட
கனவு நுரைக்கும் கண்களோடு
கனவுகளைத் தேடித் தேடி
அலைகிறது இந்த மனம்!

இப்படியே மிக இயல்பாக
தூங்கும் இரவினிலும்
தூங்காத விழிகளுடன்
நிலவின் மடியினில்
நிறைந்து வழிகிறது
எனக்கும் உனக்குமான நேசம்...

சற்று நிமிடத்தில்....


சற்று நிமிடத்தில்
ஒரு குறைக் கனவின்
அழகிய காட்சிகள் யாவும்
கண்விழிக்கும் போது
புகார் மூட்டம் பரவி
கலைந்து போனது போல்
எல்லாமே கலைந்தே போனது!

ஓ…
என் அன்பே
என்செய்வேன்…?
நான் நேசிப்பது எல்லாமே
என்றுமே தொலைவில்தான்…

முன்பு அன்னை!
பின்பு தந்தை!!
அன்று நிலவு!
இன்று நீ...

இனி எந்த வழியிலும்....


இனி எந்த வழியிலும்
எந்தச் சந்தர்ப்பத்திலும்
இறுகக் கைகள் குலுக்கி
சந்திக்கச் சாத்தியமே இல்லை!

இருந்த போதிலும்
இதய தேசத்தில்
நினைவின் பாதையில்
இன்னும் பல தடங்கள்
அழியாமல் கண்ணீர் சிந்தியபடி
நிழலாகத்தான் தொடர்கின்றன...

நீண்ட நேரமாய்...


நீண்ட நேரமாய்
மண் கிளறிக் கிளறி
நீ வரும் வழி பார்த்து
புது விடியலைத் தேடியபடி
இதயம் நனைக்கத் துடித்து
இன்றும் காத்திருக்கிறேன் நான்...

உன்னை நேசித்து....


உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன்

ஆனால்

என் கவிதை கூட என்னை

நேசிக்காமல் உன்னை நேசிக்கிறது

என்னை போலவே ...

Monday, June 21, 2010

பிரிந்து போன உன் நினைவுகள்....


பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான்
இருக்கின்றன ... ???
கனவாக அல்ல ... ???
கண்ணீராக ...

ஒரு நிமிடம் கூட...


ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று..

நீ வரமாட்டாய்....


நீ வரமாட்டாய்

என்று தெரிந்தும்

காத்திருக்கிறேன்....

உன் சுவாசக் காற்றாவது

என்னை வந்தடையும்

என்பதற்காய்...

காதல் ஓர் இனிமையானது....


காதல் ஓர் இனிமையானது
கண்மணியே உன்னை நினைப்பது என்னுள் வரமானது
காலங்களில் என் காதல் தனிமையானது
காதலியே நீ தனிமையாக்கிய காதலும் என்னுள் உயிரானது

உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...


உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...
உன்னை நான் நானாகவே பார்த்தேன் - என்னை
நீ நாயாகவே பார்க்கிறாய் என்பதைத் தெரியாமல்.....

உள்ளத்தால் உறவாகி....


உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

என் கனவிலேனும் வந்து விடு.....


மறுபடியும் நான் உன்னை சந்திக்க நேர்ந்தால்..
என் தூக்கத்தையாவது திருப்பிக் கொடு ..
மறுபடியும் நான் தூங்கினால் ..
என் கனவிலேனும் வந்து விடு ...!!!

என் இதய துடிப்பை....


என் இதய துடிப்பை எண்ணிவிடும் என்னால்
இதயத்தோடு துடிக்கும் உன் நினைவுகளை
இன்றும்கூட எண்ணி முடிக்க இயலவில்லை
எப்படி மிஞ்சினாய் என் இதயத்தை...

Friday, April 2, 2010

என் மனமோ தவம் கிடக்கின்றது...


அன்று

உன்

உதடுகள் என்னிடம்

உரைத்த அன்பு வார்த்தைகள்

இன்று இரங்கியேனும்

அன்பாக பேசமாட்டாயா

என்று

என்

மனமோ

தவம் கிடக்கின்றது...

யார் சொன்னார்....


யார் சொன்னார்

தனிமையில் நானென்று

என் இதயத்தில்

நீ இருக்கும் பொழுது

நான் உன்னோடு இருக்கிறேன்

உயிர் விடும் நிமிடங்கள் கூட

உன் மடியில் என்றால்

இறப்பிலும்

சுகம்

காண்பேன்உயிரே..

எதை சொல்லுவது.........


எதை

சொல்லுவது

புரிதல்

இல்லாததால் பிரிந்ததையா

பிரிந்த பின் வருந்துவதையா??

என் பிரிவு உனக்கு சந்தோசம் என்றால்

பிரிந்தே இருப்பேன்

உன்னை நினைத்து

தனித்தே இருப்பேன்.

என்னருகில் நீ.....


என்னருகில்

நீ

இருந்தபோது என்னையறியாமலே

எனக்குள்

ஒரு

திமிர் இருந்தது

என்னை

யாராலும்

அசைக்கமுடியாதென்று....

ஆனால்

நீ

சற்று தூரம் சென்றதும்

தான் எனக்கு புரிகிறது

நீ

என்னருகில்

இல்லை

என்றால்

என்னை அசைத்து விடலாம் என்று..

அன்பே என்னருகில் இரு..

நான் நானாக இருக்க.....

Friday, March 19, 2010

அழுகிறது என் உள்ளம் ஒரு முறையாவது பேசு...


தென்றலாய் என் மனதை

வருடி புயலாய் என் கவலைகளை
கலைந்து பாலைவனமாய்

இருந்த என் வாழ்வை பூங்காவனமாய்
மாற்றி விட்டாய் அன்பெனும்

விதையை மனதினில் விதைத்து
இப்போது நீ எங்கே சென்றாய்

ஊமையாக அழுகிறது என் உள்ளம்

ஒரு முறையாவது பேசு.

அவளை மட்டுமல்ல...


அவள்

கூறியது

பொய்

என்று

தெரிந்தும்

காதலித்தேன்

அவளை

மட்டுமல்ல

அவளது

பொய்களையும் தான்.

PAKEE Creation