Saturday, January 31, 2015

ஹீரோ...

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு
அவன் எத்தனை சாதாரணமானவனாய் இருந்தாலும்
"ஹீரோ" என்று ஒரு தனி ஜாதி கிடையாது
அவனவனுடைய வாழ்க்கையில் அவனவன் ஹீரோதான்...

மனிதனின் சிந்தனை...

காலகதி ஒரு மதிரியாக
ஒரே விதமாக
ஒரே அளவுடன் ஓடிக் கொண்டிருந்தாலும்
நேரத்தின் அனுபவம் மட்டும்
மனிதனுடைய
சிந்தனையைப் பொறுத்ததாகவே அமைகிறது...

மரக்கட்டை தேகம்...

நினைப்புதான்
உடலுக்கு உணர்ச்சியைக் கொடுக்கிறது
மற்ற சமயங்களில் தேகம் வெறும்
மரக்கட்டைதான்...

பெண்மை...

அனர்த்தத்தை விளைவிக்கும்
ஆண்மையின் முரட்டுத்தனம் கோபம் இவற்றுக்கு
அணை போட்டுத் தடுப்பது பெண்மை
அதுதான் சாந்தத்துக்கு அஸ்திவாரம்
வாழ்க்கைக்குப் பெண்மையின் உதவி
இன்றியமையாதது...

மனிதன்...

உடல்வெறி தணிந்து விட்டால்
மனிதன் நியாய அநியாயங்களை
எவ்வளவு நிதானமாகச் சிந்திக்கிறான்...

சந்தர்ப்பங்கள்...

பழைய வழிகள் அடைபடும்போது
புது வழிகளுக்கும் முறைகளுக்கும்
கோடி காட்டுவதும் சந்தர்ப்பங்கள்தான்...

நல்லுறுவு...

இருக்கும் இடம் சொல்லாமலும்
இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது
என்பதைப் பற்றி கவலைப்படாமலும்
உயிர் பெற்று நடமாடும் மரமாக இருப்பதே
நல்லுறுவு...

மனசு...


நாடு நாகரிகத்தில் திளைக்கிறது
செயற்கையை வளர்க்கிறது
இயற்கை வாழ்விலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறது

காடு அப்பிடியில்லை
கட்டுப்பாடு இல்லை கேட்பார் இல்லை
இயற்கை கொடுக்கிறது உரம்
சுதத்திரம் அளிக்கிறது சூழ்நிலை
கவலையற்று வளர்கிறது காட்டுச்செடி
அதன் மலர்களுக்கு மனிதன் பறித்துவிடுவானே என்ற
அச்சமில்லை
அதனால் செழித்து வளர்ந்து மலர்ந்து
காற்றில் விளையாடுகிறது
இயற்கையோடவே வாழ விரும்புகிறது மனசு...

PAKEE Creation