Sunday, August 16, 2009

தனிமை கூட இனிமை...


தனிமை
கூட
இனிமை
தான்
உன்
நினைவில்
மட்டுமே
முழ்கி
இருந்தால்.....

எங்கு நீ சென்றாயோ...


வாடாத
மலருடன்
உனக்காக
நான்
காத்திருக்க....
புது மலரினை
தேடும்
வண்டு போல்
எங்கு
நீ
சென்றாயோ...?
என்
காதலும்
மனதும்
வாடிப்
போக....!

நீ சென்று விட்டாய்....


காணல் கரை
ஓரமாய்
நீ சென்று விட்டாய்
தூரமாய்
என் விழி இரண்டும்
ஈரமாய்
மனம் கணக்கிறதே
பாரமாய்.

சிரிப்பின் சிறப்பு....


அன்பே நானறிவேன்
நட்பின் இலக்கணம்
தான் உனது
புன் சிரிப்பு என்று.....
ஆனால் அதுவே
பிரிவின் போதும்
இருந்தால்.......
அது தான்
இன்னும் சிறப்பு...

தாயே..........


தாயே..........!
உன்
உடலில்
விழுந்த
கோடுகள்
எல்லாம்
முதுமையால்
வந்தவையல்ல....
அவை
நீ
செய்த
சேவைகளின்
எண்ணிக்கைகள்....

முடியுமோ உயிரே....

நினைவின்
வலிகள்
நெஞ்சை
கசக்க.........!
நிழலின்
நிறங்கள்
நீயாய்
ஜொளிக்க.....!
மனதின்
விழிகள்
கலங்கி
தவிக்க......!
முடியுமோ
உயிரே
உன்னை
மறக்க........?

உன் விழிகள்...

உன்
விழிகள்
சொல்லிச்
சென்ற
ஆயிரம்
கவிதை
என்
அனுமதி
இன்றி
எடுத்துச்
சென்றாய்
மனதை...!

உனக்கு தெரியுமா....

அன்பே
உனக்கு
தெரியுமா...!
நீ
உன்
காதலை
தேடி
வாசலில்
காத்து
நிற்கிறாய்...
பூட்டிய
வீட்டுக்குள்...
நான்
உன்
இதயத்தை...
திருடிச்
சென்றது
அறியாமல்...

நானுன்னை காதலிக்கிறேன்...


அறிமுகம்
நமக்கில்லை...!
பெயர்களும்
தெரியவில்லை...!
என்னருகில்
நீயில்லை...!
உன்னருகில்
நானில்லை...!
முகவரியும்
அறியவில்லை...!
பிறகெப்படி
உணர்கிறேன்
என்
உயிருக்குள்
உன் சுவாசத்தை
என்று
எண்ணாதே..........!
ஏன்
தெரியுமா
நானுன்னை
காதலிக்கிறேன்...!

காதலின் வலிகள் சுகமானது...

காற்று
என்னை
தொட்டுச்
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
நீயே
என்னை
தொட்டுச்
செல்வதாய்
உணர்கிறேனே...
நீ
என்னை
விட்டு
தொலை
தூரம்
சென்றதாலா...?
நிரந்தரமாய்
மனதுக்குள்
புகுந்ததாலா
காதலின்
வலிகள்
கூட
சுகமானது
தான்...!

அன்பே....


அன்பே...!
என்னை
சிறுக
சிறுக
கொல்லும்...
உன்
நினைவுகள்
மிகவும்
கொடியது...
என்னை
வதைக்காதே
விட்டு விடு...
PAKEE Creation