கடலில் கண்ணீர் விட்ட போது தான் என்னை புரிந்துகொள்ள வில்லை கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும் போது கூடவா தெரியவில்லை நான் உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன் என்று...
என் சுவாசத்தில் தானே உன்னை கலக்க நினைத்தேன் ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்து வெளியே சென்று விட்டாய் நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடி...
கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும் உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய் அதனால்தான் வலிக்கிறது இன்னும்.... ஆனாலும் வலிகள் ஒன்றும் புதிது இல்லையே எனக்கு,,,, காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை...
உன் பாதச் சுவடுகள் பதிந்த மணல் கொண்டும் உன் விரல் பட்ட மரக்கிளைகள் கொண்டும் உன் வெட்கத்தில் வழிந்த வர்ணம் கொண்டும் நமக்கான வீட்டைக் கட்டுவோம்... அதில் காற்றும் புகாத அளவுக்கு காதலை நிரப்பி வைப்போம்...
உன் குரலை கேட்டாலே உதிரத்தில் அலையடிக்கும்.. உன் குரல் போதும்.. உயிரின் அணுவும் அதிரும் எந்த பாட்டு கேட்ட போதும் உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்.. என்ன வேலை செய்த போதும் உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும் என் காதும் உனக்கு கருவறைதான்.. உன் குரலைச் சுமக்கும் பலமுறை.. என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன… என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன… உன்னோடுபேசத்தானே நெருங்கி வருகிறேன்.. என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய் என் வாழ்வின் இனியவளே...
உன்னிடம் என் காதலை சொன்னேன், நீயோ அதை நிராகரித்தாய், என்றாவது ஒருநாள் உனக்கு என்மீது காதல் வரும், அன்று உனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன் மலர்களின் நடுவே புகைப்படமாய்….
வானத்தில் மேகத்தோடு மேகமாய் நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம் அங்கிருந்து நம்சோக கண்ணீரை மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய் இந்த பூமியை நனைத்திடுவோம் வா பெண்ணே வா….
பெண்ணே நீ யார் உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன். உன் முகம் தெரிந்ததே முகவரி தெரியவில்லை, முகவரி தெரிந்தபின் என் மனதை உனிடம் கூற முடியவில்லை, கனவினில் வருகிறாய், நேரிலும் வருகிறாய், ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா...
கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது '‘நீ நாத்திகவாதியா?’ அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’ வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் ‘நீ தலித்தா?’ காதல் கவிதையெழுதும்போதெல்லாம் ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’ இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன கேள்வி வரும்?...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com