Monday, December 12, 2011

நினைவுகளாய் என்னுள்...



வானத்தில் இருக்கும் மேகம் போல்
எத்தனை உறவுகள்
என் வாழ்வில் வந்து போனாலும்
நான் கல்லறைக்கு செல்லும் வரை
நினைவுகளாய் என்னுள்...

இறைவா உனக்கேன் என் மீது இத்தனை கோபம்...



என் இதயத்து ஆசைகள்
நிறைவேறுவது என்று
இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான்
சிலவேளை உன்னை
வெறுத்திருந்தால்
உன்னுடன் வாழ்ந்திருப்பேனோ
இறைவா உனக்கேன் என் மீது இத்தனை கோபம்...

என் கண்ணீருடன் ஒப்பிடுகையில்...



ஆற்றின்
வேகம் கூட குறைவுதான்
என் கண்ணீருடன் ஒப்பிடுகையில்...

இறைவனின் படைப்பில் எனக்கு பிடித்தது...



இறைவனின் படைப்பில்
எனக்கு பிடித்தது
கனவு ஏனென்றால்
அதில் மட்டும் தான்
நீ எனக்கு என்று காண்பதால்...

சருகாகி உன் காலடியிலே கிடப்பேன்...



நீ மரம்
நான் இலை
என்னை நீ உதிர்த்தாலும்
சருகாகி உன் காலடியிலே கிடப்பேன்...

வரமா சாபமா தெரியவில்லை...



வரமா சாபமா தெரியவில்லை
நினைவுகளில் மட்டும் மல்ல
கனவிலும் வதைகின்றாய் என்னை தேடி வந்து...

உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன்...



கடலில் கண்ணீர் விட்ட போது தான்
என்னை புரிந்துகொள்ள வில்லை
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும்
போது கூடவா தெரியவில்லை
நான் உன்னை நினைத்து
வருத்தி வருந்துகின்றேன் என்று...

என் காதல் உனக்கு புரியும்...



மழை பொழியும் போது தான்
வானவில் தெரியும்
என் கண்ணில் மழை பொழியும் போது தான்
என் காதல் உனக்கு புரியும்...

இதயம் சுவாசிக்க மறுக்குதடி...



என் சுவாசத்தில் தானே
உன்னை கலக்க நினைத்தேன் ஆனால்நீயோ
நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது
வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா
இருந்து வெளியே சென்று விட்டாய்
நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடி...

இதயம் கிடையாது...



பூவிற்க்கும்
பெண்ணிற்க்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
இரண்டுக்கும் இதழ்கள் உண்டு
ஆனால் இதயம் கிடையாது...

உன்னை பார்த்த பிறகு தான்...



உன்னை பார்த்த பிறகு தான்
எனக்கு காதலிக்கும் ஆசை வந்தது
ஆனால் தொடவும் முடியவில்லை தொடரவும் முடியவில்லை...

என்னை வெறுத்தால்...



உன்னிடம் சொல்லாமல் இருந்த போது
மன வேதனை சொல்லிய பின்பு
மரண வேதனை நீ யோ என்னை வெறுத்தால்...

நீயும் கலைந்து போவாய் என்பதால்...



கண் திறக்க இஷ்ரமில்லை
கண்மடலை நான் திறந்தால்
கனவோடு சேர்ந்து நீயும்
கலைந்து போவாய் என்பதால்...

என் இதயம் உன்னை மறப்பதில்லை...



கனவுகள் பிறக்கும் போது
விழிகள் திறப்பதில்லை
உடலைவிட்டு உயிர் பிரிம் போது
உயிர் இறப்பதில்லை
என்னைவிட்டு நீ போன பின்பும்
என் இதயம் உன்னை மறப்பதில்லை...

அம்மாவாசை...



நிலவும் காதலில் தோற்றது போலும்
துக்கத்தை அனுசரிக்கிறது இன்று
அம்மாவாசை...

என் இதயத்தினை...



கடன் அன்பை முறிக்கும்
என கூறி நான் அளித்த அத்தனையும் திருப்பி தந்து விட்டாய்
உன்னால் முடிந்தால் திருப்பி கொடு
உன்னிடம் நான் இழந்த என் இதயத்தினை...

என் கதையை...



உன் விழிகளுக்கு
கண்ணீர் துளிகள் வேண்டுமாயின்
என்
கதையை எடுத்துப்படி அது
சொல்லித்தரும் உனக்கு...

உன் அழகான நினைவுகள் மட்டுமே...




உன்னை நினைத்துக்கொண்டு
உனக்காக காத்து கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு ஆறுதல் என்னவென்று தெரியுமா ?
எனக்குள்ளே இருக்கும்
உன் அழகான நினைவுகள் மட்டுமே...

மடிந்து போனேன்...




நீ என்னவள் இல்லை என்று அறிந்த நொடியில்
நான் உறையவில்லை
நீ
என்னோடு இருந்த நொடிகள் பொய்யானவை
என்று அறிந்த தருணத்தில் மடிந்து போனேன்...

என் கண்கள்...



வறண்டு போவதில்லை
என்
கண்கள் உன் காதலுக்காய்
ஏங்கி அழும் போது...

Friday, October 21, 2011

என் காதலை யார்தான் அறிவார்...

சொல்லாமல் உள்ளே நுழைந்து
கண்ணீராய் வெளியே செல்லும்
என் காதலை யார்தான் அறிவார்...

நான் உயிர் வாழ காரணமே நீ தான்...

நீ
என் இதயத்திற்க்குள் இல்லை
என் இதயமாகவே இருக்கிறாய்
நான் உயிர் வாழ காரணமே நீ தான்...

துடிக்கத்தானடி தெரியும்...

துடிக்கத்தானடி தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும் உன்னை சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று...

மரணத்தை தேடிச்சென்ற...


மரணத்தை தேடிச்சென்ற எந்தன் வாழ்கை
மறுபடியும் வாழ நினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது என்பதற்காக...

உன்னை நேசித்ததால்...

கானல் நீரான உன்னை நேசித்ததால்
இன்று கண்ணீருடன் வாழ்கிறேன்
உள்ளுக்குள் இதயம் பதறுதடி
காதல் கொண்ட நெஞ்சம் கதறுதடி...

Thursday, July 21, 2011

எழுதிப்பாருங்கள்...

எழுதிப்பாருங்கள் என்னை போல
காதலில் தோற்று....
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்..!

நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

சுடிகொண்ட சுடர் கொடி யார் தெரியுமா
சுடிதார் அனிகின்ற நீ தானடி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தான் - ஆனால்
நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் தீமை கூட நன்மை தான்...

காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை...

கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல
நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய்
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும் புதிது இல்லையே எனக்கு,,,,
காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை...

ஒரு ஆண் மதிப்படைகிறான் எப்போது தெரியுமா?..

ஒரு " ஆண் " மதிப்படைகிறான் ...
எப்போது தெரியுமா...?
ஒரு " பெண் " அவனுக்காக
கண்ணீர் சிந்தும்போது தான்...

உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

நீ வாழும் போது
எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
அவர்கள்தான்
நீ இறந்தபிறகு
உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

உன் பாதச் சுவடுகள்...

உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்...

பிப்ரவரி மாதத்திற்க்கு கூட ஆயுள் குறைவு...

காதலர் தினம்
இருப்பதானால் தானோ
என்னவோ
தெரியவில்லை
“பிப்ரவரி “
மாதத்திற்க்கு
கூட ஆயுள் குறைவு...

சாமி கூட உன்னை மட்டும் தான் பார்க்கிறது...

பாஸாக வேண்டும் என்று
கோவில் சுவற்றில் இருவருமே
பேர் எழுதினோம்!
ஆனால்
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும் தான்
பார்க்கிறது...

என் வாழ்வின் இனியவளே...

உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்
எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்
என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன…
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன…
உன்னோடுபேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவளே...

மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே...

மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடாதே...
ஒருவேளை
மறுபடியும் உன்னை காதலித்தாலும் காதலித்து விடும்
என் பாழாய்ப்போன மனது...

நீ என்னை இழ‌ப்பாய் என்று தெரியாம‌ல்...

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்

நீ என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல்...

என் ஆத்மா சாந்தி அடையும்...

பெண்ணே !
எனக்காக கண்ணீர் சிந்தாதே !
நீ அழுதால்
என்னால் தாங்க இயலாது

சேர்த்துவை ! உன் கண்ணீரை

என்றோ ஒரு நாள்
என் மரண செய்தி வருமே ! அன்று
எனக்காக ஒரு சொட்டு !
ஒரே ஒரு சொட்டு ,கண்ணீர் சிந்து

அது போதும் எனக்கு
உன் மனதிலாவது
நான் வாழ்ந்தேன் ,என்ற நிம்மதியுடன் !
என் ஆத்மா சாந்தி அடையும்...

மலர்களின் நடுவே புகைப்படமாய் நான்...

உன்னிடம் என் காதலை சொன்னேன்,
நீயோ அதை நிராகரித்தாய்,
என்றாவது ஒருநாள் உனக்கு என்மீது
காதல் வரும்,
அன்று உனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன் மலர்களின் நடுவே
புகைப்படமாய்….

வா பெண்ணே வா...

வானத்தில் மேகத்தோடு மேகமாய்
நாமும் ஒன்றாய் கலந்து விடுவோம்
அங்கிருந்து நம்சோக கண்ணீரை
மேகக்கண்ணீருடன் சேர்த்து மழையாய்
இந்த பூமியை நனைத்திடுவோம்
வா பெண்ணே வா….

என் வாழ்கை துணையாக வருவாயா...

பெண்ணே நீ யார்
உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன்.
உன் முகம் தெரிந்ததே
முகவரி தெரியவில்லை,
முகவரி தெரிந்தபின்
என் மனதை உனிடம் கூற முடியவில்லை,
கனவினில் வருகிறாய்,
நேரிலும் வருகிறாய்,
ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா...

உன் நினைவோடு...

கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு...

என் கண்ணீரை...


மண்ணில் வாழும்
மலர்கள் யாவும் வாழ்ந்திட
தண்ணீரை தானடி கேட்கிறது...
நீ மட்டும் ஏனடி கேட்கிறாய்
என் கண்ணீரை...

உயிர் துறந்த என் இதயமும் தான்...

என் விரலிடுகில்
சாம்பலாகிக் கொண்டிருப்பது
சிகரெட் மட்டுமில்லையடி
உன் பிரிவால்
உயிர் துறந்த
என் இதயமும் தான்...

தெரியவில்லையடி எனக்கு...

பிறருக்கு
கொடுத்தே பழகியதால என்னவோ
உன் இதயம் வாங்கத்
தெரியவில்லையடி எனக்கு...

என்ன தான் தெரியும் உனக்கு?..

பணத்தின் மதிப்பு தெரியுமா...?
தெரியாது...

என் அன்பின் மதிப்பு தெரியுமா...?
தெரியாது...

என்ன தான் தெரியும் உனக்கு...?
நீ என்னுடன் இருந்தால் இந்த உலகமே என் காலடியில்
என்பது மட்டும் தெரியும்...

என்ன கேள்வி வரும்?...

கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
'‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?...

மரணம் நிச்சயம்...


உன்னை நேசித்திருந்தால்
மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....
ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...
மறுத்தாலோ, மறந்தாலோ,
மரணம் நிச்சயம்...

மழையே...

மழையே...


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!..

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது...

உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்...

நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே...

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!...

உன்னோடு நான் வருவதற்கு...

உன் நிழலோடு
யூத்தமிடுகிறேன்....
உன் நிழலாய் உன்னோடு
நான் வருவதற்கு...
.
PAKEE Creation