Sunday, March 27, 2011

துடிக்கத்தானடி தெரியும் என் இதயத்திற்கு...



துடிக்கத்தானடி
தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும்
உன்னை
சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று...

நினைவுகள் கூட அன்பாக பேசும்...



உண்மையான
உணர்வுகள்
இருந்தால்
வார்த்தைகள்
தேவை இல்லை
நினைவுகள்
கூட அன்பாக பேசும்...

எப்போது வாழும் உண்மையான காதலர்களின் நினைவுகள் என்னும் காதல்...



என் வாழ்கை
ஒரு வானவில்லை
போல், தோன்றி உடனே மறைந்து விட்டது,
அவளை காதலித்ததால்,

என் உயிர்
ஒரு நாள் வாழும்,"ஈசல்"ஐ
போல், சிறு காலங்களில்
பிரிந்து விட்டது,
அவள் மேல் அன்பு கொண்டதால்,

என் ஆன்மா இறந்தும்,
அலைந்து கொண்டு தான் இருக்கிறது,
அவள் நினைவால்,

உயிர் உள்ள வரை மட்டும் அல்ல,
உலகம் அழியும் வரை மட்டும் அல்ல,
எப்போது வாழும் உண்மையான காதலர்களின் நினைவுகள் என்னும் காதல்...

அவளுடன் வாழ்ந்த கனவுகளை...



காதல் செய்தேன் அவளை அல்ல,
அவளுடைய நினைவுகளை,
அதனால் தான் அவள்
என்னை
வெறுத்த பின்னும் காதலிக்கிறேன்,
அவளையும் அல்ல,
அவள் நினைவுகளையும் அல்ல,
அவளுடன் வாழ்ந்த கனவுகளை...

உண்மையான காதலுக்கு கண்கள் இருக்கிறது என்கிறார்கள்.!.



உண்மையான காதலுக்கு கண்கள்
இருக்கிறது என்கிறார்கள்.!

But,
என் காதலுக்கோ
இல்லாமல் போனது ஏனோ..!? ..
(தவறு என் மேலா..)
புரியவில்லை என் இமைகளுக்கு..
ஏனென்றால் இன்னும்
உன் அன்பு காதலை நினைத்து
அழுகின்றதே...

உன்னை நினைத்து...



என்னோடு நீ பேசாத நேரங்களில்,
என் இதயம் பாடும் வேதனைதான்.
என் இமை ஓரம் கண்ணீர் துளி...

உன்னை நினைத்து...

போன ஜென்மத்தில்...



போன ஜென்மத்தில்
மெழுகுவர்த்தியாக பிறந்தனோ தெரியவில்லை
இந்த ஜென்மத்தில் உருகிறேன்
உன் நினைவுகளால்...

அவள் இதயம் துடிக்கும்...



அவள் இதயம் துடிக்கும்
வ்வொறு நொடியும்
நான் ரசித்து கொண்டிருப்பேன்,
ஏனென்றால்
துடிப்பது அவள் இதயம்
என்றாலும்
இருப்பது என்னிடம்...

ஆனால் நீ என்றும் என் மனதில்..



உன்னில் நான்
எண்ணில் நீ
சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
சில நேரம் தொலைவில்

ஆனால் நீ என்றும் என் மனதில்...!

தண்ணீரில் அல்ல, கண்ணீரில்...




ஒவ்வொரு நாளும் நான்
குளிக்க தவறிணனோ
என்னவோ தெரியவில்லை எனக்கு.

But,

தினமும் தவறாமல்
குளித்தது என் தலையணை.

தண்ணீரில் அல்ல,
கண்ணீரில்...

என் உயிர் நீயாக இருப்பின்...


என் உயிர் நீயாக இருப்பின்
என் இதயம் துடிக்கும்
நான் இறந்தும் உனக்காக...

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்...



உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்.

கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல

என்னோடு இருக்கும் கவலைகளும் மறைந்து விடும்...

அன்பு காதல் மலராக, உனக்காக...



நீ விட்டு சென்ற போது கூட
என் கண்ணில் வரவில்லை கண்ணீர் துளி..

காரணம்,
நீ என்றாவது திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில்.

ஆனால்,
நான் எதிர் பார்த்தது போல நீ திரும்பி வந்தாய்.
என் காதலை ஏற்றுக்கொள்ள அல்ல,
உன் வாழ்த்துமடல் கொண்டு.

அப்போதுதான் உனக்கென சேமித்து வைத்த கண்ணீர் துளி
மொத்தமாக வெளி வந்தது
உன்னை சபிக்க அல்ல,
உன்னை வாழ்த்த வந்தது...

உன்னை விட உன் நினைவுகள் மேல் அன்பு அதிகம்...



உன்னை விட
உன் நினைவுகள்
மேல் அன்பு அதிகம்...

ஏன் என்றாள்

அவை என்றும்
என்னை விட்டு
பிரிய நினைப்பதில்லை...

என்னவளில் எச்சில் துளிகள்தான் வானிலே மின்னுகிற நட்சத்திரங்கள்...



என்னவளில்
எச்சில் துளிகள்தான்
வானிலே மின்னுகிற
நட்சத்திரங்கள்

அவள் வெட்டியெறிந்த
அவளின்,
கட்டை விரல் நகம்தான்
வானிலே வட்ட நிலவாய்
வளர்ந்து நிற்கிறது...

இரவுகள் விடிய அதிக நேரங்கள் ஆகட்டும்....



இரவுகள் விடிய
அதிக நேரங்கள்
ஆகட்டும்....
கனவிலாவது
நீ என்னோடு
இருக்கும் நேரங்கள்
அதிகமாகும்
என்பதால்...

அது ஒரு உடைந்த இதயத்தின் அழுகை...



‎"கவிதைகளை எல்லோரும்
அமைதியாக தான் வாசிப்போம்...
ஏனென்றால், அது ஒரு உடைந்த
இதயத்தின் "அழுகை''...

பிரம்மன் உன்னை படைத்தது....



பிரம்மன் உன்னை
படைத்தது....
நான் உன்னை
சந்தித்தது.....
இறைவன் நம்மை
பிரித்தது....
தவறுகள் திருத்தபடட்டும்
மறுஜென்மத்தில்
...

தினமும் ஏங்கியதுண்டு....



தினமும் இரு தடவை
சூரியன் உதிக்காதா என்று
ஏங்கியதுண்டு....
நீ எனக்கு தினமும்
காலையில் சொல்லும்
வாழ்த்து செய்திக்காக...

இதயம் மறப்பதில்லை....





இதயம் மறப்பதில்லை
உன்னை பிரிந்த வலியை...
மறந்துவிடவும் நினைப்பதில்லை
நாம் சந்தித்த நினைவுகளை..
.

உயிரோடுதான் இருக்கிறது...



என் காதல் இறந்து போனது என்று நினைத்தேன்,
இல்லை..!? ..

அது இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
என்பதை நான் உணர்ந்தேன்
நீ என் இறுதி ஊர்வலத்தில்
அழும்போது...

என் காதல்...



என் காதல் இறந்து போனது
ஒரு நொடியில்,

பிடிக்காததால் அல்ல..
என் அன்பு உனக்கு புரியாததால்...

நானா இன்னும்...



நானா இன்னும் உனக்குள்
இருக்கிறேன் என்பதை
உணர்த்தியது,

எனக்கு உன் கண்ணீர்
துளிகள்..
PAKEE Creation