Sunday, November 14, 2010

அழியாத காதல்...


நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு..
நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்..
உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ..
துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ..
என் உயிரை நீ அழிக்கலாம்,உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு...

நீ ஏற்படுத்திய காயத்தின் பிரதிபலிப்பு
என் கண்களின் கண்ணீர்...
நீ என்னை பிரிந்ததின் பிரதிபலிப்பு
என் அண்ணன் எழுப்பிய கல்லறையில்
எனது ஆழ்ந்த நித்திறை...

காதல் ரோஜா...


காதல் எனும் மலரைப் பறிக்க
ரோஜா தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த நான்
கையிலொரு அழகிய மலரைப் பறித்துக்கொண்டு
வெளியே வந்தேன்...
கையில் வைத்திருந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தவர்களின்
கண்களுக்கு புலப்பட வாய்ப்பில்லை
என் கையில் தென்படும் கீறல்களும் காயங்களும்...

உயிரையே துறந்தேன் நான்...

இமைக்க மறந்தேன் நான்-என்
கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என்
இதயத்திற்குள் உறங்கும் உன்
தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ
என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..

உயிராக அவளை நினைத்தேன்...


உயிராக அவளை நினைத்தேன்
அப்போது எனக்கு தெரியவில்லை
உயிர் எப்போது வேண்டுமனாலும்
பிரியும் என்று.....

காதல்...


உறவுகளை நிலைக்க வைத்திடும் காதல்...
வேதனையை தாங்கிடும் காதல்...
வெற்றியைத் தந்திடும் காதல்...
சரித்திரம் படைத்திடும் காதல்...
இது பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள காதல்..

மறக்க தெரியாது...


மழைக்கு அழத்தெரியும் ஆனால்
சிரிக்கத்தெரியாது
சூரியனுக்கு எரிக்கத்தெரியும் ஆனால்
அணைக்கத் தெரியாது
எனக்கு நினைக்கத்தெரியும் ஆனால்
மறக்க தெரியாது...

நட்பு...


உள்ளம் ரெண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகும்...
அதே உள்ளத்தில் நட்பு துளிர்விட்டால்
கண்ணீர் என்ற வார்த்தை
வாழ்க்கை அகராதியிலிருந்தே அழிந்து போகும்...

உண்ணை எனக்குப் பிடிக்கும்...


கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
அது என் கவலை தீர்க்கும் வரை
உறவுகள் எனக்குப் பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை
உண்ணை எனக்குப் பிடிக்கும்
என் உயிர் பிரியும்வரை...

நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...


நட்பே நீ என் உயிராக மட்டும் இரு...
இதயமாக இருக்க வேண்டாம்
ஏன் என்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ விரும்பவில்லை...
நட்பு என்றால் என்னவென்று யோசித்தேன்...
நல்ல வேளை உன்னை சந்தித்தேன்.......
இல்லை என்றால் தெரியாமலே போயிருக்கும்...

என் காதலி...


அன்று என் இதயத்தை வடம் பிடித்து
தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி!!!!
இன்று ஊர் பார்க்க மணமகள்
ஊர்வலத்தில், அவள்...
கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய்...
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய்!!
சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
"என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும் கணம்"...
¸.•♥•PAKEE Creation¸.•♥•

மறக்கவே முடியவில்லை....


கண்கள் மூடி
தூக்கத்தை தேடினேன் முடியவில்லை
கண்ணுக்குள் தெரிவது
நீ அல்லவா?

நீ
தான் என்னை
மறந்து விட்டாயே
இல்லை...இல்லை..நம் காதலை..
மறுபடியும் ஏன் வருகிறாய்? என் நினைவுக்குள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல் நினைவுகளையும்
மறந்துவிட அது என்ன நினைவுகளா?
இல்லை..என் வாழ்வின் நியங்கள்.

நானும் உன்னை
மறந்திடலாம் என்றென்னி
இறைவனிடம்வேண்டி நின்றேன்
அவளும் என்னை மறுத்துவிட்டாள்

மறுபடியும் வேண்டுகிறேன்
என் வாழ்வில்
நீ வேண்டும் இல்லையேல்
உன் நினைவில்
சிறிதேனும் எனக்கு வேண்டாம்....
¸.•♥•PAKEE Creation¸.•♥•

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதை புரிந்துகொள்.....

காதல் தோல்வியா அழு....
வாய் விட்டு அழு....
கதறிக் கதறி அழு....
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும் வரை அழு....

பின்பு உலகத்தை பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்
காதல் தோல்வியையும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்
அழகுகளை ரசிக்க கற்றுக்கொள்
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்
வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்துகொள்...

பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்
காதல் இறந்ததற்காக உயிரை சிந்தத் துணிகிறாய்
காதல் புனிதமானதுதான்.....
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை

விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கின்றோம்.
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கின்றோம்.

காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்

தேடிச் சென்ற காதலை மறந்து
தேடி வரும் காதலை அணைத்துக்கொள்

காதலையே வெறுத்திருந்தால்

களவைப் போல் காதலையும் கற்று
மறந்ததாய் நினைத்துக்கொள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதை புரிந்துகொள்.....

¸.•♥•PAKEE Creation¸.•♥•

நான் தோற்றுவிட்டேன்...


காதல்
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை

மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது

வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...
¸.•♥•PAKEE Creation¸.•♥•
PAKEE Creation