Tuesday, November 20, 2012

வருவாயா என் துயர் நீக்க...?




ஊர் அடங்கும் நேரம்
ஓசை உறையும் நேரம்
மௌனம் பேசும் நேரம்
தென்றல் வீசும் நேரம்
காதல் கடலில் மூழ்கும் கப்பலாக நான்
பூட்டிய அறைக்குள் புகுந்தாலும்
போர்வைக்குள் ஒளிந்தாலும்
ஓசை இன்றி துரத்துகிறது உன் நினைவு
ஆயிரம் மலைகளையும் தாண்டி
ஆயிரம் கடலையும் கடந்து
இன்பம் துன்பம் நினைக்காமல்
வருகிறேன் உனக்காக
நீ கடலாக நான் தீவாக
நீ இரவாக நான் நிலவாக
நீ வானமாக நான் மேகமாக
நீ பூவாக நான் தேனீயாக
என்றுமே உனக்குள் நானாக
என்னை சுற்றிலும் நீயாக
எங்குமே நீயாக
என் வாழ்க்கையே உனக்காக
வருவாயா என் துயர் நீக்க...?

மனைவி...




மரங்கள் மறைந்து நின்றால்
மரநிழல் தெரிவதில்லை
மனைவியாய் அவள் வருவதனால்
மரணம் கூட எனக்கு பெரிதில்லை...

அரலிவிதை...



அரலிவிதையும்
இப்போது அழுகிறது
எனென்றால்
"தன்னால்" இறப்பவர்களை காட்டிலும்
"பெண்ணால்"
இறப்பவர்களே அதிகம் என்று...

கண்ணீர்...



கருவறையில் இருக்கும் குழந்தைகூட
கண்ணீர்விடும் எனது காதலின்
தோல்வியின் வேதனை உணர்ந்தால்.

ஆனால் நானோ என் கண்களில் வரும்
கண்ணீரைக்கூட துடைப்பதில்லை
ஏனெனில் நான் கண்களை துடைக்கும் போது
அதற்க்குள் இருக்கும் உனக்கு வலிக்குமே என்று...

Tuesday, October 23, 2012

சூரியன் & காதல்...



உலகத்தில இரண்டே விஷயம் தான்
தோன்றும் போதும் மறையும் போதும்
அழகா இருக்கும் ஒன்னு சூரியன்
இன்னொன்னு காதல்...

Saturday, October 20, 2012

காதலுக்காக காத்திருப்பேன்...



எங்கிருந்தோ வந்தால்
என் வாழ்கையில் தோன்றினால்

அவள் யார் என்று நான் அறியேன்
என் மனமறியும் என்றது

அவள் புன்னகைத்தால்
பூக்கள் புன்னகைப்பதை கண்டேன்

அவளிடம் பேச முயன்றேன்
வார்த்தைகள் வற்றி மௌனம் பேசினேன்

மற்ற பெண்ணில் இல்லாத ஒன்று
இவள் பெண்மையில் கண்டேன்

அது என்னவோ நானறிய முயன்றேன்
என் மனதை தொலைத்து நின்றேன்

மன போதைஎன்றால்
ஒரு நொடியில் மறந்திருப்பேன்

இதுதான் காதல் என்றால்
அந்த காதலின் வாருகைக்காக காத்திருப்பேன்...

அழகிய புன்னகை...



என்னை மறந்தே வேளையிலே
மெல்லிய பூங்காற்று என்மேல் விசியது

பறவைகளின் தாழட்டிலே
தனிமையோ என்னை சுத்துது

கண் இமைகள் மெய்மறக்கையிலே
மங்கை ஒருவளின் நிழல் முன்னே நின்றது

அழகியே அவளது விழியிலே
நாணம் ஒன்றே தெரிந்தது

அடக்கமான அவள் சிரிப்பிலே
என் மனம் ஏனோ சொக்கி போனது

மங்கையவள் வார்தையிலே
மௌனம் ஒன்றே என்னை ஆள்த்தது

அவள் யாரென்று என் மதி அறியலையே
அழகிய புன்னகை ஒளி ஒன்றே இன்று என் வசமானது...

அவள் மொழி மட்டும் மௌனமானது...




என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது
என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது
என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது
என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது
என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின்
செல்ல கோபத்திற்கவே உருவானது
நான் வாங்கும் பொருட்கள்
எல்லாம் அவளாலே அழகானது
ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின்
மொழி மட்டும் மௌனமானது..!

நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...




நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை காதலிப்பேன்
நீ என்னை பிரிந்து விடுகிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் அந்த தவிப்பை அனுபவிப்பேன்
நீ என்னை எப்போது நினைக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நானும் உன்னை நினைப்பேன் உன் வருகைக்காக
நீ எப்போது தனியாக தவிக்கிறாய் என்று எனக்கு தோணும் போது
நான் நிச்சயமாக உன்னை அடைந்து விடுவேன்...

Thursday, October 11, 2012

என்னை ஒரு நொடிகூட நினைக்கமாட்டாய?...



உன்னை சுற்றி ஆயிரம் உறவுகள் உள்ளன
ஆனால் என்னை சுற்றி எவருமே இல்லையே
நீ என்னுடன் இருக்க விரும்புவ என்று எண்ணினேன்,
ஆனால் நீ உன்னை சுற்றி உள்ள
உறவுகளை மட்டுமே விரும்புகிறாய்
நீ விரும்புவதற்கூட தகுதி இல்லாதவனா நான் ஆகிவிட்டன?
வலிக்கிறது இதயம்..!

அன்பே...



வண்ணத்து பூச்சிகள்
உன்னை நெருங்கினால்
விரட்டி அடிக்காதே
பாவம் அது
வேறு எங்குதான் செல்லும்
வண்ணங்களை திரட்ட...

Saturday, September 29, 2012

என்னில் உன்னை பார்த்தேன்...



அலைகளின் ஓசையில் உன் குரல் கேட்டேன்
விண்மீன்களில் உன் முகம் பார்த்தேன்
மழையில் நனைகையில் உன் தழுவல் உணர்ந்தேன்
வெள்ளை நிறத்தில் உன் மனம் பார்தேன்
கார்மேகத்தில் உன் கண்கள் பார்தேன்
இறுதியில்...,
என்னில் உன்னை பார்த்தேன்...

என் காதலை காற்றும் சுவாசிக்கும்...



உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை 
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...

Wednesday, September 12, 2012

எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீக்கு நன்றிகள்...




எனக்கு விருது (Sunshine blogger award) வழங்கி பெருமைப்படுத்திய ஹிஷாலீ அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...


எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீ இணையதளம்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்கள்...

1. கவியருவி ம. ரமேஷ்
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்

பிடிக்கவில்லை...



கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...

வலிக்கிறது...




நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்ல நீ
என்னருகிலில்லை

இப்போது நீ அழுகிறாய் தோழியே
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...

காதல் வலி...



உன் பதில் தெரியாமல்
கொஞ்ச நாள் தவித்தேன்
உன்னை பார்க்கவே
பல நாள் துடித்தேன்
நீ அருகில் இருக்க வேணும் என்று
தினமும் ஆசைப்பட்டேன்

நீ என்னை பிரிந்ததும்
பல ஜென்மம் வேணும்
நான் உன்னை மறப்பதற்கு என
உணர்ந்தேன்...

இதயம்...



என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...

Sunday, September 2, 2012

வலி...




கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினக்குறிப்பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்க்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...

Tuesday, August 14, 2012

அழகுதீயே...



இது வரை
குளத்தில் மட்டுமே
மீன்களைப் பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உன் முகத்தில் கண்கள்
வலை வீசுவது யார்?
கரையில் இத்தனை காவலர்கள் - இமை
முழு நிலவு முகத்தில்
இடது வலதாய்
இரு மூன்றாம் பிறைகள் - புருவம்
என்ன அதிசயம்
தென்றலைத் தாலாட்டும் கூந்தல்
அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை
பார்த்து விட்டேன் இதழ்களை
வரைந்தது யார்?
ஏய்
அழகுத்தீவே சிரிக்காதே
நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...

Tuesday, August 7, 2012

வாழ்க்கை ஒரு போராட்டம்...



வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை
லட்சக்கணக்கான விந்தணுக்களுடன்
சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம்
போராட்டத்தில் பிறந்து ,
போராட்டத்தில் வளர்ந்து
போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை .
பிறப்பதற்கே லட்சக்கணக்கான
அணுக்களை வென்ற நம்மால்
வாழ்வதற்கான போராட்டத்தில்
வெல்ல முடியாதா என்ன?!!!
வாழ்ந்து தான் பார் நண்பா...

Monday, July 30, 2012

மனிதா...



மனிதா நான் யாரு நீ யாரு
சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு
பண்போடு நல்ல அன்போடு
நீ முன்னேறு நீதான் ஸ்டார்
வாழ்க்கை ஒரு புதிர் போல
எது எப்ப நடக்கும் தெரியாது
கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில்
நல்லது நடக்கும் நம்புங்கள்
முயற்சி இல்லாமல் பலன் ஏது?
குறைகளை சொல்வதினால் தடுமாற்றம்
உனக்குள் ஒருவன் யார் அதை தேடு
அதை நீ அறிந்தால் தான் வரலாறு
போட்டி இல்லாமல் வெற்றி ஏது?
பொறமை கொள்வதால்தான் தகறாரு
நமக்கு தெரியாது பல உண்டு
கற்றது கையளவு
நீ என்னும் தேடு
வா நண்பா மர்மமான வாழ்க்கையில்
வாழ்த்துதான் பார்க்கலாம்...

றோஜாவே...



றோஜாவே...
நீ காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட..!
காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில்
இருக்கலாம்...

கவனம் தோழர்களே...



கைய விட்டு நழுவிய கண்ணாடியும்,
கைய விட்டுட்டு போன காதலும்,
திருப்பி கைக்கு வந்தால்
நமக்கு தான் ஆபத்து...

Saturday, July 28, 2012

கவிதைகளை...


கவிதைகளை அனைவரும் அமைதியாக
தான் வாசிப்போம்
ஏன் தெரியுமா
அது ஒரு உடைந்த இதயத்தின் அழுகை..!

உன் பாசம்...



ஏழை துடிப்பது இரண்டு நேர
சாப்பாடாவது வேண்டுமென்று
நான் துடிப்பது என் மரணம்
வரை உன் பாசம் வேண்டுமென்றே...

ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி மனசை படைக்கிற...


நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த
உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன்
ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன்
அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும்
முதல் சொல்லி இருந்தால்
நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன்
நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ?
அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர
எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ
ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...

Thursday, July 26, 2012

உயிரின் உயிரே...




மெழுகாய் என்னை உருக வைக்கும் அழகிய ஒளியே
ஒளி தரும் விளக்கினிலே திரியாக நானிருப்பேன்
என் உடலை உருக்கி நெய் தருவேன்
நீயும் வாழ்த்திடவே
என் உயிரின் உயிரே
விழி இரண்டும் உறங்கிய பின்
உயிர் வருமே உன்னைத் தேடி...

Thursday, July 5, 2012

பிரிவு...

எங்களுக்கு பிடித்த ஒன்றை 
இழக்கும் போது தான்
சோகத்தோடு 
கவிதைகளும் பிறக்கின்றது...

நீயும் ஒருத்திடி...


பலருடன் பழகலாம் - ஆனால்
சிலரைத்தான் நெஞ்சில் வைத்து
அன்பு கொள்ள முடியும்
அந்த வகையில் நீயும் ஒருத்திடி
உன் நினைவுகளோடு வாழ்கிறேன்...

Sunday, June 24, 2012

தனிமை...





இந்த மரம் அந்த நதி எல்லாமே

இது எதுவுமே மாறல
ஆனால்
என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்
இது எவ்வளவு பெரிய சோகம்
மறக்க முடியல


சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன்
கவலை என்றால் மடியில் சாயா அம்மா
ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா
இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு

சின்ன வயசில் வந்த காதல்
காதலிக்காக காத்திருந்த நாட்கள்
காதலியோடு போடும் குட்டி சண்டைகள்
அவள் ஒரு நாள் பேசவில்லை என்றால்
துடித்து போகும் நாட்கள்
அவள் பிரிந்து சென்ற போது
அவள் விட்டு சென்ற நினைவோடு வாழ்ந்த நாட்கள்

தனிமை கொடுமை தான்
ஆனால்
அந்த தனிமையில் தான் நம்மளை
நாங்களே உணர்ந்து கொள்ள முடியும்...


Thursday, June 14, 2012

வலிக்குதுடி...



கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன்
நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன்
வலையில் மாட்டும் மீனாய்
எனை காதல் வலையில் சிக்க வைத்தாய்
உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...

நீயும் என் அருகில் இருந்தால்...



கண்கள் ஏனோ உன்னைத் தேடுதடி
விழிகள் உறங்க மனமோ தடுக்குதடி
கரைகள் சேர அலைகள் ஓயும்
நீயும் என் அருகில் இருந்தால்
வலிகள் குறையும்...

அன்பே...



உன் அருகில் நானிருந்தேன்
என் அருகில் நீயிருந்தாய்
உன் இதயக் கதவுகளை பூட்டாதே
ஏனோ வலிகள் போதுமே என் அன்பே...

காதல் தேவதையே...



ஜென்மங்கள் மீண்டும் வந்து காதல் செய்வேன் நானே
என் உயிரை எரிக்கும் காதல் தேவதையே
என் மனசை குத்தி ரசிக்கின்றாயே
எனை தவிக்க வைத்து தைக்கின்றாயே...

காதல்...



காதலை படைத்தான் இறைவன்
பிரிவை படைத்தான் மனிதன்...

உன் நினைவலைகள்...



இறந்து இறந்து பிறந்து விட்டேன்
எரிந்து எரிந்து கருகிவிட்டேன்
கடல் அலைகள் ஓய்வதில்லையே
உன் நினைவலைகள்
உன் நினைவுகள் அழிவதில்லையே...

உன் நினைவுகள்...



உன் நினைவுகள் வரும் போது
அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை கவிதைகளாக எழுதுகிறேன்...

Saturday, May 5, 2012

நட்பின் பிரிவு...


பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி
கல்வி என்னும் மூன்றெழுத்தில் - சேர்ந்து
அன்பு என்னும் மூன்றெழுத்தில் - இணைந்து
பிரிவு என்னும் மூன்றெழுத்தில் - தவிக்கின்றோம்...

சந்திக்கலாமா?...



சந்தித்த வேளை சிந்திக்க வில்லை
காரணம் சந்தித்த இடத்தில் என்
மனதை தொலைத்து விட்டேன்
சந்தித்த இடத்தில் மீண்டும் சந்திக்கலாமா?...

காத்திரு...


எப்போது முதல் முதல் பார்த்தமோ
அப்போதே நீ என் இதயத்தை திருடி விட்டாய்
எப்போது உன் இதயத்தை திருட வருவேன்
என காத்திரு...

பெண்...


பெண் அன்பில் ஒருதாய்
பெண் அழகில் ஒரு தேவதை
பெண் அறிவில் ஒரு மந்திரி
பெண் அதரவு தருகையில் ஒரு உறவு
பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு
பெண் வெற்றிக்கு ஒரு மாலை
பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்
பெண் நட்பில் ஒரு நேர்மை
பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

அன்பு...





எண்ணெயில் எரியும் சுடர்
விளக்கை அணைக்க முடியும் - ஆனால்
அன்பில் எரியும்
சுடர் விளக்கை எவாராலும்
அணைக்க முடியாது...

Thursday, April 26, 2012

காதலாய் நீ கிடைத்தாய்...



கற்பனைகள் இல்லாமல்
கவிதை இல்லை
காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆனால் என் வாழ்வில்
கவிதையிலும் கற்பனையிலும்
காதலாய் நீ கிடைத்தாய்...

நட்சத்திரமாய் மிளிர்வேன்...




உன் வீட்டு முற்றத்தில் நின்று
நட்சத்திரங்களை எண்ணிப்பார்
அதில் ஒன்றாய் நான் மிளிர்வேன்...

நீ அழகுடி...



ரோஜாச் செடியில்
ஏராளமான முற்கள் உண்டு
ஆனால் ரோஜாப்பூ
அழகாத்தான் இருக்கும்
அது போல நீ சில சமயம்
கோவபட்டாலும் நீ அழகுடி...

இதயமே பெரிது...


இடியின் ஒலியைவிட
கடலின் அலையை விட
பூவின் மனதை விட
காதலின் இதயமே பெரிது...

Monday, April 9, 2012

காதல்...




காதல் கொள்வதில் நிதானமாய்
இரு
காதல் கொண்டபின் நிலையாய்
இரு

நான் உயிர் வாழ்வதற்கு...


நீ நேருக்கு நேர் வரும் போது
என்னை பார்க்காமல் குனித்தே வருகிறாய்
என்னை உன் ஓரகண்ணால் பார்க்கும்
அந்த பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...



நான் நேசிப்பது என் அன்னையை...




நிலவே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
மலரே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
பெண்ணே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
என் சுவாச மூச்சே
நான் நேசிப்பது
உன்னை கூட அல்ல
எல்லாவற்றுக்கும் மேலான
என் அன்னையை தான்...
PAKEE Creation