Wednesday, December 25, 2013

என் எதிர்காலத்தை...

நான் மற்றவர்கள் போல் என் எதிர்காலத்தை பற்றி
கவலைப்படுவது இல்லை
ஆனால்
நான் கடந்து வந்த பாதையை மட்டும்
எப்போதும் நினைச்சு பார்த்துகிட்டு இருப்பேன்...

சில பேரின் மனம்...

சில பேரின் மனம்
கஸ்ரப்படுகிற மாதிரி நடந்து கொள்வதுக்கும்
காரணம் உண்டு

கொல்லன் பட்டறையில் இரும்பை
பழுக்க காய்ச்சி அடிக்கிறானே
ஏன்?
இரும்பின் மீது அவனுக்கு கோவமா இல்லை
அப்பிடி செய்தல் தான்
பயனுள்ள கத்தியாகவோ சுத்தியாகவோ மாறும்
என்பதுக்காக...

எல்லோருமே...

வாய் விட்டு சிரிக்கும் எல்லோருமே
இதயம் திறந்து சிரிக்கிறார்கள் என்று
நம்பிவிடக்கூடாது
அப்பிடி நம்புகிற குணம் நம்மிடம்
இருப்பதால் தான்
நாம்மோடு இருந்து கொண்டே
நமக்கு குழி பறிக்கிறார்கள்...

புகழ்ச்சி...

பொன்னுக்கும் போதைக்கும் பெண்ணுக்கும்
இல்லாத ஆளை மயக்கும் சக்தி
புகழ்ச்சிக்கு உண்டு...

என்ன வாழ்க்கைடா...

அன்பு என்னும் சொல்
வெறும் அலங்கார சொல் ஆகி விட்டது
காட்சிக்கு அளிக்கப்படும் மரியாதை
கடமைக்கு அளிக்கப்படுவதில்லை
பொய்யான விளம்பரத்திற்கு கிடைக்கும் புகழ்
மெய்யான உழைப்பிற்கு இல்லை
வெறும் பேச்சுக்கு அளிக்கப்படும் பட்டமும் பதவியும்
உண்மையான தொண்டுக்கும் சேவைக்கும் கிடைப்பதில்லை...

வாதிப்பவன் & சாதிப்பவன்...

ஒரு விஷயத்தைப்பற்றி வாதிப்பவன் 
ஏற்றுக்கொள்வான்
ஆனால்
சாதிப்பவன் ஏற்றுக் கொள்ளவேமாட்டன்...

ஒன்றுமில்லை...

ஒன்றுமில்லை என்ற சொல் 
ஒரு ஆணிடம் இருந்து வந்தால் 
அதற்கு அர்த்தமும் ஒன்றுமில்லை தான்
ஆனால் 
அதே ஒன்றுமில்லை என்ற வார்த்தை
ஒரு பெண்ணின் வாயில் இருந்து வந்து விட்டால்
அதற்குள் எண்ணிலடங்காத விஷயங்கள்
அடங்கி இருக்கிறது...

Monday, December 2, 2013

காதல்...

எல்லா காதலும் கல்யாணத்துல
முடியனும்னு நினைக்கிறதல தான்
இங்க யாராலயும்
கல்யாணத்துக்கு அப்புறம்
காதலிக்க முடியுறதில்லை...

காதலும் குழந்தையும்...

மனசுல சுமக்கிற காதலும்
வயித்துல சுமக்கிற குழந்தையும்
வெளிய வந்தால் தான் சந்தோசம்
இல்லை என்றால்
உயிரையே குடித்திரும்...

காதல்...



காதல் வர வரைக்கும்
விடாம துரத்தனும்
அதுவே காதல் வந்துட்ட
விட்டு கொடுத்து வாழனும்...

மனிதனுடைய அந்தஸ்தை...


ஆடையினால் மனிதனுடைய அந்தஸ்தை
தெரிந்து கொள்ளலாமே தவிர
அவனுடைய உள்ளத்தை
தெரிந்து கொள்ள முடியாது
வெளி வேஷத்தை கண்டு
எதையும் தீர்மானிக்க கூடாது...

விதி...



விதினா எனக்கு என்னனு தெரியாது
எங்க அம்மாதான் அதைப்பற்றி
அடிக்கடி சொல்லுவாங்க
இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க
திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க
யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு
தெரியாதுனு சொல்லுவாங்க
எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது
அம்மா சொன்ன பல விஷயங்கள்
கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...

என் நிழல்...



இருட்டு வெளிச்சத்தில்
என் நிழலையே
நான் பார்த்து
பயந்த நாட்கள் அதிகம்...

அரவணைப்பு இல்லாமல்...



பெற்றவங்க அரவணைப்பு இல்லாமல்
அவங்க இல்லாமல் வளர்த்த பிள்ளைகள்
உலகத்தை சீக்கிரம்
புரிந்து கொள்கிறார்கள்...

கதை...

பல பேர் கதை சொல்றதுல கெட்டிக்காரர்கள்
அவங்க சொல்ற கதையை கேட்கும் போது
அத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும்
அந்த கதைல இருக்கிற
சம்பவங்களும் காதபாத்திரங்களும்
நம்மகிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு
ஏற்படும்
பல முறை அந்த உணர்வை நான் உணர்த்து இருக்கிறேன்...

நாக்கு...

அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
பலவாறு பேசவேண்டி இருக்கிறது...
PAKEE Creation