Thursday, October 22, 2009

அழவும் மனமில்லை...


அழவும்
மனமில்லை
என் கண்ணீரில்
உன் நினைவுகள்
கரைந்து விடும்
என்ற பயம்.

உன்னை நினைத்தால் மட்டும்...


இருட்டிலும் தனியாக
செல்லும் நான்
உன்னை நினைத்தால் மட்டும்
கையாலாகாத்தனமான
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைக்கின்றேன்.

காதலியே...


காதலியே
உலகத்தில்
அன்பை
எதனாலும்
அளக்க
முடியாது
என்பதை
புரிந்து
கொண்டேன்
உன் அன்பால்...

உன் பின் தான் மனம் போகிறது...


ஆயிரம் பேர்
வந்தாலும்
வேண்டாம்
என்று
விலகிப் போகும்
உன் பின் தான்
மனம் போகிறது.!!!

பிரிந்தவுடன் தான் தெரிகிறது...


பிரிந்தவுடன் தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை
போடுவதன்
சுகம்.

உன்னை நினைக்காத நாளே இல்லை...


என்
வாழ்வில்
உன்னை
நினைக்காத
நாளே இல்லை
உன்னை
நினைக்காத
நாளும்
நாளே இல்லை.

Wednesday, October 21, 2009

நீ என்னை வெறுக்கும் போது...!!!


உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...

அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...!!!

சொர்க்கமாம்!.. நரகமாம்!...


சொர்க்கமாம்!..
நரகமாம்!..

உன்னருகில்
இல்லாத போது..

நான்
எங்கிருந்தால் என்ன.?

அன்றே அழுதிருப்பேன் மொத்தமாய்...


அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...

இன்று முள்ளாய்
குத்துகிறது!

பிரிய
வேண்டும் என்று
தெரிந்திருத்தால்Align Center
அன்றே
அழுதிருப்பேன்...

மொத்தமாய்.



ஒரு வேளை பிரிந்து விட்டால்...


ஆயிரமாயிரம்
மாலை நேரங்களில்
ஏதேதோ பேசினாமே...
திட்டமிட்டிருக்கலாமே அன்பே
ஒரு வேளை
பிரிந்து விட்டால்
எப்படி ஒருவரை ஒருவர்
மறப்பதென்று...

நினைவாய் இருந்தவற்றை எல்லாம் ஆழித்து விட்டேன்..


உன்
நினைவாய்
என்னிடம்
இருந்தவற்றை
எல்லாம்
ஆழித்து விட்டேன்
இனி
மீதம்
இருப்பது
நான்
மட்டும் தான்.

உனக்கு தெரியுமா...


உன் புகைப்படத்தையும்
என் புகைப்படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்கு தெரியுமா...

உன் பெயரோடு
என் பெயரை
இணைத்து எழுதி
இன்பத்தில் தவழ்ந்தது
உனக்கு தெரியுமா...

உன் மேலுள்ள
காதலினால்
கையை வெட்டி
இரத்தத்தில் கவிதை வடித்தது
உனக்கு தெரியுமா...

இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் காதலின் ஆழம்
எங்கே தெரிய போகிறது...?

என் கவிதைகள் தான் எனக்கு முதல் துரோகி...


என்
கவிதைகள் தான்
எனக்கு
முதல்
துரோகி..!
எழுதுவது
நான்
பேசுவதெல்லாம்
உன்னைப் பற்றி.

என் கண்கள் கலங்கினால்...


என் கண்கள் கலங்கினால்
துளிகளாக நீ வெளிபடுகிறாய்
மனம் கலங்கினால்
வரிகளாக வெளிபடுகிறாய்.

காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை...


கண்கள் தூங்கும் வரை கனவு வருவதில்லை
காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை
உன்னை பார்க்கும் வரை காதல் புரியவில்லை
உன்னை பார்த்ததும் காதலா என புரியவில்லை

வார்த்தைகள் சேரும் வரை வாக்கியங்கள் வருவதும் இல்லை
உன்னை சேரும் வரை உணர்வுகள் முடிவதில்லை.

இதயத்துக்கு மட்டுமே வலி தெரியும்...


உயிர் பிரிந்தும்
மனம் பிரியாமல்
இருக்கும் நிலையைச்
சிலுவையில் சிக்கியும்
சாகாமல் இருக்கும்
இதயத்துக்கு
மட்டுமே
தெரியும்.

உயிரோடு நான் இறந்து விட்டேன்...


கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து

மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.

தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?

சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...

Tuesday, October 20, 2009

ஈட்டியாய் உன் நினைவுகளை...


ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டு
துயில் கொள்ளு கண்மணியே
தூங்கமால் நானிருப்பேன்.

காதல் தீயில் நான் எறிகிறேன்...


காதல்
தீயில்
நான்
எறிகிறேன்
நீயோ
குளிர்
காய்கிறாய்.

இமயத்தையும் வில்லாய் வளைப்பேன்...


இனியவளே
இதயத்தில்
நீ
இருந்தால்
இமயத்தையும்
வில்லாய்
வளைப்பேன்.

இந்த சோகம் இன்று சுகமானது...


இந்த
சோகம்
இன்று
சுகமானது
அது
வரமாக
நீ
தந்தது
நீ
மறந்தாலுமே
நம்
காதல்
மட்டுமே
துணையாக
வரும்.

இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும்...


இதயம்
கூட
இடைவெளி
விட்டு தான்
துடிக்கும்
ஆனால்
அந்த
இடைவெளி
கூட
உன்னை
தான்
நினைக்கும்...

நான் உன்னை நேசிப்பதை உன்னிடம் சொல்லவில்லை...


நான்
உன்னை
நேசிப்பதை
உன்னிடம்
சொல்லவில்லை
ஏன்
என்றால்
எப்போது
உன்னை
நேசிக்க
ஆரம்பித்தேன் என்று
எனக்கே
தெரியவில்லை.

என் இதயம் ஒரு துரோகி...


என்
இதயம்
ஒரு
துரோகி...
காரணம்
என்னிடம்
இருந்து
கொண்டு
உன்னை
தான்
நினைக்கிறது.

யாரையும் நான் பார்ப்பதில்லை...


தொலைவில்
இருக்கும்
உன்னை
பார்க்க
முடியாததால்
அருகில்
இருக்கும்
யாரையும்
நான்
பார்ப்பதில்லை.

கண்ணீர் துளி கூட பிடிக்கும்...


சில பேருக்கு பனித்துளி பிடிக்கும்
சில பேருக்கு மழை துளி பிடிக்கும்
யாரையாவது
உண்மையா
நேசித்துப்
பாருங்க
கண்ணீர்
துளி
கூட
பிடிக்கும்.

தாய்மை நட்பில் இருக்கிறது....


தாய் பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில்
இருக்கிறது.

நட்பு...


எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தெர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தெர்ந்தெடுத்தேன்
அதனால் தான்
நட்பு
நம்மைத்
தெர்ந்தெடுத்திக்கிறது.

இதயத்தின் சுகம் தெரியும்...


நீ
நேசிக்கும்
இதயத்தில்
பல
ஆண்டுகள்
வாழ்வதை விட
உன்னை
நேசிக்கும்
இதயத்தில்
சில
நெடிகள்
வாழ்ந்து
பார்
இதயத்தின்
சுகம்
தெரியும்.

கவிதை...


கவிதை
வேண்டுமென
போனா
தூக்கினேன்...!!
கைகள்
தானாய்
கிறுக்குதடி
உன்
பெயரை.

வாசம் வீசும் பூவாக இருப்பேன்...


நீ
ரசிக்கின்ற
றோஜா பூ
சில நாட்களே
வாசம்
வீசும்
நானே
என்
இதய
தோட்டத்தில்
நீ
சுவாசிக்கும்
வரை
வாசம் வீசும் பூவாக இருப்பேன்.

Wednesday, October 14, 2009

விழியின்றி என்னாலும் பார்வையில்லை...


விழியின்றி
என்னாலும்
பார்வையில்லை
நீ
இன்றி
என்னாலும்
நானில்லை.

உயிர் பிரிகின்றபோதும் உன்னையே சுவாசிப்பேன்...


இன்னொரு பிறவி
வரை உன்னையே
நேசிப்பேன் என்
உயிர்
பிரிகின்றபோதும்
உன்னையே
சுவாசிப்பேன்.

காதலின் தோல்வி...


காதலின்
தோல்வி
வாழ்வின்
கடைசி
மூச்சு வரை
தொடரும் வலி
தீயில் வேகின்ற
போதும் தீராத
வலி.

கண்ணில் நீ வந்த வேளை...


கண்ணில் நீ வந்த வேளை
கனவுகள் பல தந்தாய்
என் காதலை உன்னிடம்
சொன்ன வேளை
என் கண்களை பிடிங்கி
சென்றாய்.

காதலின் தோல்வி கண்டால்...



காதலின் தோல்வி
கண்டால் அந்த
சுட்டெரிக்கும் சூரியன் கூட
தன் நிலையை மறந்து
கண்ணீர் சிந்தும்
இதுவே காதலின் வலி.

உனக்காக நான் கண்ணீர் வடிக்காத நாளும் இல்லை...


உயிரே
உன்னை நான் நினைக்காத
நேரமும் இல்லை
உனக்காக நான் கண்ணீர்
வடிக்காத நாளும் இல்லை
நான் வாழ்வதே உனக்காகதன்
நீ இன்றி எனக்கு வாழ்வில்லை.

உன்னை நினைத்து கண்ணீர் சிந்த மறந்ததில்லை...


மேகம்
கூட
தண்ணீர்
சிந்த
மறக்கலாம்
ஆனால்
என்
விழிகள்
உன்னை
நினைத்து
கண்ணீர்
சிந்த
மறந்ததில்லை.

கண்மணி நீ என்னை விட்டு போனால்...


கண்கள் கூட கலங்கும்
கனவுகள் அழியும்
கவிதைகள் நூறு மலறும்
காலந்தோரும் தொடரும் வலி
காலங்கள் கூட பாராமாக
தோன்றும்
கண்மணி
நீ
என்னை விட்டு போனால்

என் உயிரைகூட வருடியது...


என்
உயிரைகூட
வருடியது
நீ
என்
மீது
காட்டிய
அன்பு
என்
உடலைவிட்டு
உயிர்
பிரியும்
வேளை
மாறது
நான்
உன்
மீது
கொண்ட
பாசம்.

என் கண்கள் கண்ணீர் மழை பொழிகிறது...


கண்மணியே
உன்னை
நினைத்து
நான்
தவிக்கும்
வேளை
என்னை
அறியாமலயே
என்
கண்கள்
கண்ணீர்
மழை
பொழிகிறது.

இதயமே உன் துடிப்பை நிறுத்திவிடு...


அவள்
நினைவுகளில்
மிதந்துகொண்டு
என்
இதயமே
உன்
துடிப்பை
நீ
நிறுத்திவிடு
நான்
மண்ணோடு
மறைவதற்கு.

கண்களில் கண்ணீர்...


கண்களில்
கண்ணீர்
வருவதில்
ஒரு
சுகம்
உன்
நினைவினால்
வருவதினால்.

நான் உன்னை மறந்து வாழ மாட்டேன்...


கண்மணியே
நீ
என்னை
மறந்து
வாழலாம்
ஆனால்
உன்னை
மறந்து
வாழ
மாட்டேன்.

காதல் தோல்வியை...


காதல் தோல்வியை
உணர்ந்தால் அந்த
தண்ணீர் சிந்தும்
மேகமும் கரைந்து விடும்
தன்னிலையை விட்டு...

தோழி ...



நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கே ஒர் முளையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்கமால் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமேன
ஒரு வார்த்தை கூறினாய்

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்கமாலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே

என்றவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பாதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது எவ்வாறு என்பதை...

Monday, October 5, 2009

உன் நினைவுகளில் என் காதல்...


என்
கவிதைகளில்
உன்
நினைவுகள்
உன்
நினைவுகளில்
என்
காதல்.

உன் பார்வையில் எத்தனை ஆழமடி...


உன்
பார்வையில்
எத்தனை
ஆழமடி
உன்
இரு
விழி
உரசலில்
ஊசலாடி
போனதே
என்
உயிர்...

உன்னையே நான் காதலிப்பேன்...


இத்தனை
வருடத்தில்
எத்தனையே
காதல்
என்னைக்
கடந்தாலும்
உன்னையே
நான்
காதலிப்பேன்...
PAKEE Creation