Tuesday, September 15, 2009
நண்பனாகப்பட்டவன்...
விரட்டும் நினைவுகளுடன்
குரல்வளைக்குள் ஏதோ சிக்கி தவித்தவாறு
உன் தோள் சாய்ந்து
சட்டை நனைத்து விம்முகிறேன்
யாதென கேளாமல்
ஏதும் விசாரியாமல்
தோள் தட்டி அரவணைத்தபடி
“சரி..சரி..சரியாகிடும்…”
கணத்தில் கனங்கள் கரைந்ததும்
மீண்டும் அழுகிறேன்
நீ கிடைத்ததற்க.
நட்புடன்...
கண்களில் தொடங்கி
காலங்களில் நிறைகின்றதடா நட்பு....
அறிமுகம் கிடைத்தவுடன் ஆயுசுக்கும் முடிவதில்லை....
உன் நட்பு ஒரு பொது சொத்து..அதில்
என் பங்கை பட்டாயிட்டு விட்டாய்...... இனி
என் முயற்சிகளில் முதலாமவன் நீ....
வெற்றிகளில் கைதட்டும் கரம் நீ....
வேதனைகளில் தோள் கொடுக்கும் தோழன் நீ...
லட்சியத்தின் லட்ச தீபம் நீ....
வானம் போலவே உன் நட்பின்
தேவை முடிவதில்லை................
Subscribe to:
Posts (Atom)