Friday, March 19, 2010

அழுகிறது என் உள்ளம் ஒரு முறையாவது பேசு...


தென்றலாய் என் மனதை

வருடி புயலாய் என் கவலைகளை
கலைந்து பாலைவனமாய்

இருந்த என் வாழ்வை பூங்காவனமாய்
மாற்றி விட்டாய் அன்பெனும்

விதையை மனதினில் விதைத்து
இப்போது நீ எங்கே சென்றாய்

ஊமையாக அழுகிறது என் உள்ளம்

ஒரு முறையாவது பேசு.

அவளை மட்டுமல்ல...


அவள்

கூறியது

பொய்

என்று

தெரிந்தும்

காதலித்தேன்

அவளை

மட்டுமல்ல

அவளது

பொய்களையும் தான்.

மௌனம் எனைக் கொல்லுகின்ற விஷம்...


நீ கொண்ட

மௌனம் எனைக்

கொல்லுகின்ற விஷம் ..
நான் கொண்ட

அன்பு நம்மை

வாழ வைக்கும் சந்தோஷம்...

காதலுக்கு கண்ணீர் மீது ரொம்ப இஷ்டமோ...


மறந்து போக நினைத்தேன்
அது உன் தொல்லையே ...
இறந்து போக நினைத்தேன்
தடுத்தாய் முல்லையே ...
காதலுக்கு கண்ணீர்
மீது ரொம்ப இஷ்டமோ....

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்...


உன் கண்ணோடு கண் பார்த்து பேசும் போது - நீ

வெட்கப்படும் அந்த ஓர் நிமிடம் இந்த உலகமே என் காலடியில் - அப்போ

சிவக்கின்ற உன் கன்னங்கள் , சிரிக்கின்ற செவிதழ்கள் - என்

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.....

என் அருகில் இருப்பாய் என்றே....


உன் வாழ்வின்
சந்தோஷமான நேரங்களில்
நான் உன் அருகில் இருந்தேன் - நீ
என் வாழ்வின்
சோகமான
நேரங்களிலும்
என் அருகில் இருப்பாய்
என்றே ....

எனக்காக ஒரு துளி சிந்திய போது...


உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன்
உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால்
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில்
என் உயிரே இறந்து போனது - நீ
எனக்காக ஒரு துளி சிந்திய போது.

உன்னை மட்டும் ஏன் எனக்காகப் படைக்க மறந்துவிட்டான்...?


உன் அழகையும் அன்பையும் எனக்காகவே
படைத்த இறைவன் -

உன்னை மட்டும் ஏன் எனக்காகப்

படைக்க மறந்துவிட்டான் ?

உன் அழியாத நினைவுகளால்...


என்னக்குள்ளும்
பல மாற்றம் நேற்று வரை
இருந்ததில்லை ....
மாறிய பின் நான் நானாக
இருக்க முடியவில்லை ...
உன்னை
மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்
உன்
அழியாத நினைவுகளால்...

உன்னை அடைவது தான்...


நான்

ஒரு

தீவிரவாதி

எனது

நோக்கம்

உன்னைஅழிப்பது

அல்ல

உன்னை

அடைவது தான்.

உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை
என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..

உனக்காகவே துடிக்கும் என் இதயம்...


உன்

இதயத்தில்

ஓரமாய்

ஓர்

இடம்

கொடு - இறுதி

மூச்சுள்ளவரை

உனக்காகவே

துடிக்கும்

என்

இதயம்.

நான் எப்படி உயிர் வாழ்வது...


உன்னை

காணும்

முன்பே

என்னை

அறியாமல்

பாசம் வந்தது,


உன்னை

கண்ட பின்பு நட்பை அறிந்தேன்,

உன்னோடு சண்டை போட்ட


பொது உன் மேல் நான் வைத்த காதலை உணர்ந்தேன்,

உன் நினைவுகள்

என்னில்

இல்லாவிடில்

நான் எப்படி உயிர் வாழ்வது.

ஊமையின் காதல்...


ஊமையின்

காதல்

யாருக்கு

புரியும்?

அதை

உணரத்தான்

யாரு

உண்டு?....

உன்னை நான் மறவேன்....


குருவி

தன்

கூட்டைவிட்டு

சென்றாலும்

அது

தன்

கூட்டை

மறவாது

அது

போல

நீ

எங்கு

சென்றாலும்

உன்னை

நான்

மறவேன்....

நீயில்லாத உலகினில்...


நீயில்லாத

உலகினில்

நான்

உயிர்த்திருக்க

மாட்டேன்

நீயில்லாத

உறவொன்றை

நான்

நினைக்கவும்

மாட்டேன்.

மறப்பது உனக்கு சுலபம்...


மறப்பது

உனக்கு

சுலபம்

உனக்காய்

இறப்பது

எனக்கு

சுலபம்

இறந்தாலும்

இறக்காமல்

எனக்குள்

உறங்கிக்

கிடக்கும்

உன்

ஞாபகங்கள்...

நீ என் அருகில் இருந்தால்...


இந்த

உலகம்

கூட

எனக்குத்

தேவையில்லை

நீ

என்

அருகில்
இருந்தால்.

மறந்து விடுவேன் உன்னை....


என்னை

நீ

மறந்து

விட

நினைத்தாலும்

மறக்கமாட்டேன்.

வெறுக்க

நினைத்து

விடாதே

பிறகு

மறந்து

விடுவேன்

உன்னை

அல்ல

என்

உயிரை...

நீ வார்த்தைகளால் பேசிய நிமிடங்களை விட...


நீ

வார்த்தைகளால்

பேசிய

நிமிடங்களை

விட

உனது

கண்கள்

பேசிய

நிமிடங்களே

அதிகம்...

PAKEE Creation