Friday, October 21, 2011

என் காதலை யார்தான் அறிவார்...

சொல்லாமல் உள்ளே நுழைந்து
கண்ணீராய் வெளியே செல்லும்
என் காதலை யார்தான் அறிவார்...

நான் உயிர் வாழ காரணமே நீ தான்...

நீ
என் இதயத்திற்க்குள் இல்லை
என் இதயமாகவே இருக்கிறாய்
நான் உயிர் வாழ காரணமே நீ தான்...

துடிக்கத்தானடி தெரியும்...

துடிக்கத்தானடி தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும் உன்னை சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று...

மரணத்தை தேடிச்சென்ற...


மரணத்தை தேடிச்சென்ற எந்தன் வாழ்கை
மறுபடியும் வாழ நினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது என்பதற்காக...

உன்னை நேசித்ததால்...

கானல் நீரான உன்னை நேசித்ததால்
இன்று கண்ணீருடன் வாழ்கிறேன்
உள்ளுக்குள் இதயம் பதறுதடி
காதல் கொண்ட நெஞ்சம் கதறுதடி...
PAKEE Creation