skip to main |
skip to sidebar
வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்
உன்னையும் என்னையும்
உரசி நெருப்பெடுத்து
குலக்காப்புக் கொள்கை எரிப்போம்
பின்னேரங்களில்
சாயும் சூரியனுக்கு
விடியல் பற்றி விமர்சிப்போம்
விதையாகிப் போன நம்
வீரரின் கல்லறை காட்டி
அமாவாசை இரவுகளை அகற்றுவோம்
வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்...
வீட்டுக்கு திரும்பும்
ஒவ்வொரு பொழுதுகளிலும்
சந்தோசம் தருகிறது
நீ காத்திருக்கக் கூடும்
எனும் பிரம்மை...