skip to main |
skip to sidebar
அன்று
உன்
உதடுகள் என்னிடம்
உரைத்த அன்பு வார்த்தைகள்
இன்று இரங்கியேனும்
அன்பாக பேசமாட்டாயா
என்று
என்
மனமோ
தவம் கிடக்கின்றது...
யார் சொன்னார்
தனிமையில் நானென்று
என் இதயத்தில்
நீ இருக்கும் பொழுது
நான் உன்னோடு இருக்கிறேன்
உயிர் விடும் நிமிடங்கள் கூட
உன் மடியில் என்றால்
இறப்பிலும்
சுகம்
காண்பேன்உயிரே..
எதை
சொல்லுவது
புரிதல்
இல்லாததால் பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா??
என் பிரிவு உனக்கு சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்.
என்னருகில்
நீ
இருந்தபோது என்னையறியாமலே
எனக்குள்
ஒரு
திமிர் இருந்தது
என்னை
யாராலும்
அசைக்கமுடியாதென்று....
ஆனால்
நீ
சற்று தூரம் சென்றதும்
தான் எனக்கு புரிகிறது
நீ
என்னருகில்
இல்லை
என்றால்
என்னை அசைத்து விடலாம் என்று..
அன்பே என்னருகில் இரு..
நான் நானாக இருக்க.....