Thursday, April 26, 2012

காதலாய் நீ கிடைத்தாய்...



கற்பனைகள் இல்லாமல்
கவிதை இல்லை
காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆனால் என் வாழ்வில்
கவிதையிலும் கற்பனையிலும்
காதலாய் நீ கிடைத்தாய்...

நட்சத்திரமாய் மிளிர்வேன்...




உன் வீட்டு முற்றத்தில் நின்று
நட்சத்திரங்களை எண்ணிப்பார்
அதில் ஒன்றாய் நான் மிளிர்வேன்...

நீ அழகுடி...



ரோஜாச் செடியில்
ஏராளமான முற்கள் உண்டு
ஆனால் ரோஜாப்பூ
அழகாத்தான் இருக்கும்
அது போல நீ சில சமயம்
கோவபட்டாலும் நீ அழகுடி...

இதயமே பெரிது...


இடியின் ஒலியைவிட
கடலின் அலையை விட
பூவின் மனதை விட
காதலின் இதயமே பெரிது...

Monday, April 9, 2012

காதல்...




காதல் கொள்வதில் நிதானமாய்
இரு
காதல் கொண்டபின் நிலையாய்
இரு

நான் உயிர் வாழ்வதற்கு...


நீ நேருக்கு நேர் வரும் போது
என்னை பார்க்காமல் குனித்தே வருகிறாய்
என்னை உன் ஓரகண்ணால் பார்க்கும்
அந்த பார்வை போதும் நான் உயிர் வாழ்வதற்கு...



நான் நேசிப்பது என் அன்னையை...




நிலவே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
மலரே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
பெண்ணே நான் நேசிக்கின்றேன்
ஆனால் உன்னையல்ல
என் சுவாச மூச்சே
நான் நேசிப்பது
உன்னை கூட அல்ல
எல்லாவற்றுக்கும் மேலான
என் அன்னையை தான்...

வரம் வேண்டும்...




வானம் நீயானால் - நான்
மேகமாக வரம் வேண்டும்
விழிகள் நீயானால் - நான்
இமைகளாக வரம் வேண்டும்
தூக்கம் நீயானால் - நான்
கனவாக வரம் வேண்டும்
கவிதை நீயானால் - நான்
நல்ல வரிகளாக வரம் வேண்டும்
நிலம் நீயானால் - நான்
உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...

குழந்தையாகவே இருந்திருந்தால்...






பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம்கெட தேவையில்லை
முகத்திற்குமுன் சிரித்துப்பேசி
முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை
ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

அன்னை...






உனது துணைவி உன்னால்
தேர்ந்தெடுக்கப்பட்டவள்

ஆனால்

உன் அன்னையோ
கடவுளால் உனக்களிக்கப்பட்ட
அரிய தொரு பரிசாகும்

விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக

பொக்கிஷமான தாயைத்
தொலைத்து விடாதே...

உன் உயிர நான் இருப்பேன்...




உன்னுள் பதியாய்
என்னுள் மீதியாய்
உன் உயிர நான் இருப்பேன்...

சேர்ந்து இருப்போம் இவ்வுலகில்...




காலங்கள் வந்த போதும்
காதல் மட்டும் நம்மிடத்தில்
காலங்கள் போனாலும்
சேர்ந்து இருப்போம் இவ்வுலகில்...

அம்மா




எல்லா அம்மாவிற்கும் தெரியும்
தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று,
ஆனால் 99% மகனிற்கு தெரியாது
தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...



அவளை இழந்து...



உயிரை எரித்து காதல் வளர்த்தேன்
கடைசியில் அவளை இழந்து தனியாக
நிற்கிறேன்...
PAKEE Creation