Saturday, September 29, 2012

என்னில் உன்னை பார்த்தேன்...



அலைகளின் ஓசையில் உன் குரல் கேட்டேன்
விண்மீன்களில் உன் முகம் பார்த்தேன்
மழையில் நனைகையில் உன் தழுவல் உணர்ந்தேன்
வெள்ளை நிறத்தில் உன் மனம் பார்தேன்
கார்மேகத்தில் உன் கண்கள் பார்தேன்
இறுதியில்...,
என்னில் உன்னை பார்த்தேன்...

என் காதலை காற்றும் சுவாசிக்கும்...



உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை 
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...

Wednesday, September 12, 2012

எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீக்கு நன்றிகள்...




எனக்கு விருது (Sunshine blogger award) வழங்கி பெருமைப்படுத்திய ஹிஷாலீ அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...


எனக்கு விருது வழங்கிய ஹிஷாலீ இணையதளம்


மேலும் என்னுடன் விருது பெற்ற சக நண்பர்கள்...

1. கவியருவி ம. ரமேஷ்
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்

பிடிக்கவில்லை...



கடவுளுக்கு தான் என்னை
பிடிக்கவில்லையென தினமும்
கண்ணீர் துளிகளை தருகிறார்

அந்த மரணத்திற்கு கூட
என்னை பிடிக்காமல் போய் விட்டது
இன்றுவரை என்னை தேடி வரவில்லை...

வலிக்கிறது...




நான் அழுத போது
எனக்கு ஆறுதல் சொல்ல நீ
என்னருகிலில்லை

இப்போது நீ அழுகிறாய் தோழியே
உன் கண்ணீரை துடைப்பதற்கு கூட
நான் உன்னருகிலில்லை

சோகம் என்பது நமக்கு
என்றுமே நிரந்தரமில்லை
என்பதை இன்றாவது புரிந்து விடு

நிரந்தரமில்லாத ஒன்றிற்காக
தயவு செய்து கண்ணீர் சிந்தாதே
என் இதயத்திற்கு வலிக்கிறது...

காதல் வலி...



உன் பதில் தெரியாமல்
கொஞ்ச நாள் தவித்தேன்
உன்னை பார்க்கவே
பல நாள் துடித்தேன்
நீ அருகில் இருக்க வேணும் என்று
தினமும் ஆசைப்பட்டேன்

நீ என்னை பிரிந்ததும்
பல ஜென்மம் வேணும்
நான் உன்னை மறப்பதற்கு என
உணர்ந்தேன்...

இதயம்...



என்னிடம் தான் சொல்லவில்லை
நான் இறந்த பின்
என் கல்லறையிலாவது
ஒரு முறை எழுதுவாய
இதில் உறங்குவது
என் இதயம் என்று...

Sunday, September 2, 2012

வலி...




கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினக்குறிப்பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்க்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...
PAKEE Creation