Tuesday, March 20, 2012

அவள் முகம்...

நான் ரசித்தது!
தெளிந்த நீரில் அவள் முகம்
உயிர் போகும் அளவு தாகம்
தொட்டால் அழிந்துவிடும் உன் முகம்
போனால் போகட்டும்
உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே உயிர்...!

மறதி மட்டும்...


மறதி மட்டும்
மண்ணில் இல்லையென்றால்
மனிதன் மடிந்திருப்பான் !
மங்கை மட்டும்
மண்ணில் இல்லையென்றால்
மனிதன் மறதியை மறந்திருப்பான்...!

மனிதனே...


மனிதனே,
ரோஜாவை கண்டு,அதை போல்
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
முட்களுக்கு நடுவில் தான் அது ,
பிறந்தது என்பதை மறக்கிறாய்.
படர்ந்த அழகிய மேகமாய் ,
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
இடிக்கி நடுவில் தத்தளிக்கும்
அதன் தன்மையை மறக்கிறாய்.
உறுதியான பாறையை போல்
வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
சிற்பியின் உளியில் துர்கலாகும்,
அதன் முடிவை மறக்கிறாய்.

மனிதனே,
இருப்பதை வைத்து வாழ பழகு.
உன் பிறப்பின் அதியாயத்தை புரிந்துகொள்...

மௌனம்...


நீ சிந்திய கண்ணீரை கூட,
கடலிலிருந்து எடுக்க முடியும்.
நீ விட்டு சென்ற ரோஜாவைக் கூட,
பூந்தோடதில்லிருந்து எடுக்க முடியும்.
ஒரு குண்டூசியை வைத்துக் கூட ,
மாமலையை தகர்க்க முடியும்.
பிறவிக் குருடனுக்குக் கூட,
வர்ணங்களை எடுத்துரைக்க முடியும்.

ஆனால்,
உன் மௌனத்தை தினமும் கண்டு
என் வாழ்வை கடக்க முடியாது...

பெண்ணின் மௌனம்...



மீன்களின் கண்ணீரை எவராலும்
உணர முடியாது ... !
பிறவி குருடனுக்கு வர்ணங்களை
எடுத்துரைக்க முடியாது ... !
கல்லிருந்து கசியும் நீரினை
கண்களில் காண முடியாது ...!
தண்ணீரில் எழுதிய எழுத்தை
பதிக்க முடியாது ... !
கற்பூரத்தை காற்றால்
கரைக்க முடியாது ...!

அதுபோல தான்
பெண்ணின் மௌனத்தை
எவராலும் உணர முடியாது ...!
உணர முடிந்தவன் கணவன் ...
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்..!



ஆண்களின் இதயத்தில்...


பெண்களின் சடலங்கள் அதிகம்
கல்லறைக்கு வருவதில்லை ஏன் என்றால்
அவர்கள் ஆண்களின் இதயத்தில்
புதைக்கப் படுகிறார்கள்...

எனது கவிதை...


மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால்
அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை

மனதை உருக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சோகங்கள்தான் எனது கவிதை

மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால்
அவளின் பேச்சுதான் எனது கவிதை

மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சுவாசம்தான் எனது கவிதை

மனதை தொடுவதுதான் கவிதை என்றால்
அவளின் முத்தம்தான் எனது கவிதை

மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால்
அவள்தான் எனது கவிதை...

நேசிக்கின்றேன்...

உன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றேன்
என்பது எனக்கு தெரியாது ஆனால் நீ
இருக்கும் வரை மட்டும் என் உயிர் இருக்க வேண்டும்
காரணம் உன்னை அன்றி வேறு
ஒருவரையும்
இப்பிறவியில் என்னால் நேசிக்க முடியாது...
PAKEE Creation