சக்தியிழந்த நிலையில்தான் மனிதன் கடவுளை நினைக்கிறான் சுயபலத்தில் நம்பிக்கையிருக்கும்வரையில் மனித எண்ணத்தில் மமதை ஒங்கி நிற்கிறது நிர்ப்பலமாகித் திண்டாடும் சமயத்தில் தான் அகங்காரம் விலகி கடவுளுக்கு இடம் கொடுக்கிறது மனது வேண்டியவேளையில் மட்டும் கடவுளை நினைத்தால் போதுமா என்ற சர்ச்சையில்கூட மனித மனம் அந்தச் சமயத்தில் இயங்குவதில்லை ஆபத்தான நிலைமையில் ஆதரவாகப் பிடித்து கொள்ளக்கூடிய இடத்தை மனம் நாடுகிறது திக்கற்ற நிலைமையில் மனித மனத்துக்கு பிடிப்பை அளிப்பது கடவுளின் நினைப்பு ஒன்றுதான்...
எது சரித்திரம்? மக்கள் அறிந்ததே சரித்திரம் அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாக கலந்து விட்ட நிணைகளே சரித்திரம் "நாம் நீர்க்குமிழிகள் அல்ல வடியாத பெருவெள்ளத்தின் துளிகள் நாம்" அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்ல அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம் நேற்று இருந்தோம் , இன்று இருக்கிறோம் நாளைக்கும் இருப்போம் என்று தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்...
வாழ்க்கையின் ஒரு பகுதி தானே கனவு ஆனால் அந்தக் கனவில் தானே மனிதன் மனத்தின் சுகங்களை அடைய முடியாத இன்பங்களை அடைகிறான் கைக்கெட்டாதது மனத்துக்கு எட்டுகிறது கனவில்...
உண்மையில் ஆண்கள் கோழைகள் தான் உலகில் பிரதி தினம் அக்கம் பக்கத்தில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பிறப்பதை அறிந்தும் தங்கள் மனைவிக்கு அந்த நிலை வந்தால் என்ன பயம் பயப்பிடுகிறார்கள்...
ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும் ஆண்கள் கேட்டுக் கொள்ளும் கேள்வி "என்ன இருந்தாலும் என் மனைவி என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள் ?"
அதுவரை வளர்த்த தாய் தந்தையர் , சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது ஆண் மனம் தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது மணமான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது காரணம் சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர் , அவிழ்க்க முடியாத விந்தை ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்...
மனித வாழ்வில் நடக்குமா? நடக்காதா? என்று நினைப்பவனுக்கு எதுவும் நடப்பதில்லை தெய்வம் உண்டா? இல்லையா? என்று நினைப்பவனுக்குத் தெய்வம் கிடையாது வீரம் தனக்கு உண்டா? இல்லையா? என்று சந்தேகிப்பவனுக்கு வீரம் கிடையாது சந்தேகம் அலட்சியம் இந்த இரண்டும் சிந்தனையின் பலவீனங்கள் நம்பிக்கை , லட்சியம் இரண்டும் ஆத்மாவின் சக்திகள் ஒரு மனிதனுக்கு வாழ்வில் இரண்டும் எப்பவும் அவசியம்...
மனிதப் பிறவியில் சமுதாயக் கட்டுப்பாடுகள் , நாகரிக வலைகள் எத்தனை கோட்பாடுகளை ஏற்படுத்தினாலும் சிருஷ்டியின் அடிப்படை இச்சைகளை யாரும் வெற்றி கொள்ள முடிவதில்லை...
விதியென்பது ஆண்டவனின் விசித்திர தண்டம் (தண்டனை கொடுக்க) மனித அறிவுக்குச் சிறிதும் புலப்படாத ஒரு மர்மம் அஞ்ஞானி அதை அறிவீனத்தால் அசட்டை செய்கிறான் விஞ்ஞானி அதை விவேகத்துக்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கிறான் மெய்ஞ்ஞானி அதை ஆண்டவன் கட்டளை , கர்மத்தின் கரம் என்று உணர்ந்து அதன் விளைவுகளுக்குச் சிரம் தாழ்த்துகிறான் ஆனால் அந்த மெய்ஞ்ஞானிகூட விதி எதை விளைவிக்கிறது என்பதை அறியாமல் திகைக்கிறான்
வலைஞன் எப்படி ஒரு நூலிழையை எடுத்துப் பின்னத் துவங்கி பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறானோ அப்பிடியே விதியும் வாழ்வின் ஒரு நூலிழையை எங்கோ துவக்கி
எப்படியோ பின்னிப் பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறது அதில் சிக்க வேண்டியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் அதை நாடி வருபவர்கள் தானே வருகிறார்கள் அப்படி வருவதை "சந்தர்ப்பம்" , 'தற்செயல்' என்ற சொற்களால் குறிப்பிடுகிறார்கள் உலக பந்தத்தில் உழலும் மனிதன் வைத்த பெயர் அவை சாஸ்திரம் வைத்த பெயர் விதி...
சொர்க்கத்தின் சிறப்புகளை புராணங்கள் எத்தனை தான் வர்ணித்தாலும் பேரின்பத்தை அடைவதன் உயர்வை வேதாந்தங்கள் எத்தனை தான் போதித்தாலும் பூலோகத்தில் இருப்பதில் மனிதன் எத்தனை திருப்தி அடைகிறான் உலகத்தில் மதங்கள் பல இருந்தாலும் தத்துவங்கள் பல இருந்தாலும் இந்த உலகத்தைவிட்டு மேல் உலகம் சென்றால் எத்தனை அமைதியும் சந்தோசம் உண்டு என்பதை மதங்களும் தத்துவங்களும் லியுறுத்தினாலும் உயிருடன் பூவுலகத்தில் கூடியவரை வாழவேண்டும் என்ற ஆசை மனிதனை விட்டு அகலுவதில்லை "மண்ணாசை சில நேரங்களில் சிறந்ததுதான்"...
துன்பத்தை தங்கிக் கொள்பவனுக்குத் தான் இன்பத்தை வரவேற்கிற தகுதி உண்டு அதாவது எவன் புளிப்பைச் சாப்பிட மாட்டேனென்று சொல்கிறானோ அவனுக்கு இனிப்பைச் சாப்பிட அருகதை கிடையாது...
வீடு என்கிற சுமையை விட்டு விட்டு ஓடப் போகிறேன் என்கிறாய் ஆனால் உன்னுடைய உடல் என்கிற சுமை உன்னோடுதான் வரும் பெற்றோரையும் சகோதரர்களையும் உற்றார்களையும் உறவினர்களையும் விட்டுவிட்டு ஓடப்போகிறேன் என்கிறாய் ஆனால் உன்னுடைய அகங்காரம் , உன்னுடைய ஆசை , உன்னுடைய கோபதாபம் யாவும் உன்னுடன் தானே வரும்...
காதல் சூழ்நிலையில் மனம் சிக்கும் போது புத்திக்கு மறதி பெரிதும் ஏற்படுகிறது இன்பத்துக்கும் துன்பத்துக்கும் எத்தனை பிணைப்பு ரோஜாவையும் முள்ளையும் போல்...
கோவம் யார் கண்ணையும் மறைக்கவல்ல ஒரு பெரும் திரை அந்தத் திரையைச் சரேல் சரேலென மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப் பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில் பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...
நாம் வாழும் மண் எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது மண் தாய் அவள் தான் குழந்தைகளில் யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள் என்றாவது ஒரு நாள்.
மண்ணிடமிருந்து வருகிறோம் மண்ணால் வளர்கிறோம் மண்ணுக்கே போகிறோம் மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...
பயம் வேறு பக்தி வேறு பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும் அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்
உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப் பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர் கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள் இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும் பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக் செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்
தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத் தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம் நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான் தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு வழிகாட்டும் பெரியோர்களிடத்தும் பயபக்தி வேண்டும் என்று பயத்தையும் பக்தியையும் இணைத்தே உலகம் கூறுகிறது...
மதம் உலக நன்மைக்காக ஏற்பட்டது அழிவிக்காக அல்ல ஆனால் மதத்தின் பெயராலேயே அழிவுச் செயல்களில் மனிதன் ஈடுபடுகிறான் இதற்கு ஆண்டவன் பொறுப்பாளியல்ல தனி மனிதனின் ஆசையும் வெறியும் தான் காரணம்...
வாழ்க்கையில் பணத்துக்கும் சரி பதவிக்கும் சரி உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்றத்தாழ்வு உண்டு அந்த ஏற்றத் தாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகியாகிறான் அடியோடு பாதிக்கபடுபவன் ஒன்று போகியாகிறான் அல்லது ரோகியாகிறான் சற்றுப் பாதிக்கப்பட்டாலும் சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்கிறவன் விவேகியாகிறான்...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com