Wednesday, October 21, 2009

நீ என்னை வெறுக்கும் போது...!!!


உன்னை ரசித்து கவிதை எழுத தெரித்தது
உன்னை வெறுத்து எழுத தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...

அன்பு...நட்பு...காதல் என்ற முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில் பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும் போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது...!!!

சொர்க்கமாம்!.. நரகமாம்!...


சொர்க்கமாம்!..
நரகமாம்!..

உன்னருகில்
இல்லாத போது..

நான்
எங்கிருந்தால் என்ன.?

அன்றே அழுதிருப்பேன் மொத்தமாய்...


அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...

இன்று முள்ளாய்
குத்துகிறது!

பிரிய
வேண்டும் என்று
தெரிந்திருத்தால்Align Center
அன்றே
அழுதிருப்பேன்...

மொத்தமாய்.



ஒரு வேளை பிரிந்து விட்டால்...


ஆயிரமாயிரம்
மாலை நேரங்களில்
ஏதேதோ பேசினாமே...
திட்டமிட்டிருக்கலாமே அன்பே
ஒரு வேளை
பிரிந்து விட்டால்
எப்படி ஒருவரை ஒருவர்
மறப்பதென்று...

நினைவாய் இருந்தவற்றை எல்லாம் ஆழித்து விட்டேன்..


உன்
நினைவாய்
என்னிடம்
இருந்தவற்றை
எல்லாம்
ஆழித்து விட்டேன்
இனி
மீதம்
இருப்பது
நான்
மட்டும் தான்.

உனக்கு தெரியுமா...


உன் புகைப்படத்தையும்
என் புகைப்படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்கு தெரியுமா...

உன் பெயரோடு
என் பெயரை
இணைத்து எழுதி
இன்பத்தில் தவழ்ந்தது
உனக்கு தெரியுமா...

உன் மேலுள்ள
காதலினால்
கையை வெட்டி
இரத்தத்தில் கவிதை வடித்தது
உனக்கு தெரியுமா...

இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் காதலின் ஆழம்
எங்கே தெரிய போகிறது...?

என் கவிதைகள் தான் எனக்கு முதல் துரோகி...


என்
கவிதைகள் தான்
எனக்கு
முதல்
துரோகி..!
எழுதுவது
நான்
பேசுவதெல்லாம்
உன்னைப் பற்றி.

என் கண்கள் கலங்கினால்...


என் கண்கள் கலங்கினால்
துளிகளாக நீ வெளிபடுகிறாய்
மனம் கலங்கினால்
வரிகளாக வெளிபடுகிறாய்.

காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை...


கண்கள் தூங்கும் வரை கனவு வருவதில்லை
காதல் கொள்ளும் வரை சோகம் தெரிவதில்லை
உன்னை பார்க்கும் வரை காதல் புரியவில்லை
உன்னை பார்த்ததும் காதலா என புரியவில்லை

வார்த்தைகள் சேரும் வரை வாக்கியங்கள் வருவதும் இல்லை
உன்னை சேரும் வரை உணர்வுகள் முடிவதில்லை.

இதயத்துக்கு மட்டுமே வலி தெரியும்...


உயிர் பிரிந்தும்
மனம் பிரியாமல்
இருக்கும் நிலையைச்
சிலுவையில் சிக்கியும்
சாகாமல் இருக்கும்
இதயத்துக்கு
மட்டுமே
தெரியும்.

உயிரோடு நான் இறந்து விட்டேன்...


கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து

மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.

தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?

சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
PAKEE Creation