Sunday, June 24, 2012

தனிமை...





இந்த மரம் அந்த நதி எல்லாமே

இது எதுவுமே மாறல
ஆனால்
என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்
இது எவ்வளவு பெரிய சோகம்
மறக்க முடியல


சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன்
கவலை என்றால் மடியில் சாயா அம்மா
ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா
இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு

சின்ன வயசில் வந்த காதல்
காதலிக்காக காத்திருந்த நாட்கள்
காதலியோடு போடும் குட்டி சண்டைகள்
அவள் ஒரு நாள் பேசவில்லை என்றால்
துடித்து போகும் நாட்கள்
அவள் பிரிந்து சென்ற போது
அவள் விட்டு சென்ற நினைவோடு வாழ்ந்த நாட்கள்

தனிமை கொடுமை தான்
ஆனால்
அந்த தனிமையில் தான் நம்மளை
நாங்களே உணர்ந்து கொள்ள முடியும்...


Thursday, June 14, 2012

வலிக்குதுடி...



கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன்
நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன்
வலையில் மாட்டும் மீனாய்
எனை காதல் வலையில் சிக்க வைத்தாய்
உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...

நீயும் என் அருகில் இருந்தால்...



கண்கள் ஏனோ உன்னைத் தேடுதடி
விழிகள் உறங்க மனமோ தடுக்குதடி
கரைகள் சேர அலைகள் ஓயும்
நீயும் என் அருகில் இருந்தால்
வலிகள் குறையும்...

அன்பே...



உன் அருகில் நானிருந்தேன்
என் அருகில் நீயிருந்தாய்
உன் இதயக் கதவுகளை பூட்டாதே
ஏனோ வலிகள் போதுமே என் அன்பே...

காதல் தேவதையே...



ஜென்மங்கள் மீண்டும் வந்து காதல் செய்வேன் நானே
என் உயிரை எரிக்கும் காதல் தேவதையே
என் மனசை குத்தி ரசிக்கின்றாயே
எனை தவிக்க வைத்து தைக்கின்றாயே...

காதல்...



காதலை படைத்தான் இறைவன்
பிரிவை படைத்தான் மனிதன்...

உன் நினைவலைகள்...



இறந்து இறந்து பிறந்து விட்டேன்
எரிந்து எரிந்து கருகிவிட்டேன்
கடல் அலைகள் ஓய்வதில்லையே
உன் நினைவலைகள்
உன் நினைவுகள் அழிவதில்லையே...

உன் நினைவுகள்...



உன் நினைவுகள் வரும் போது
அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை கவிதைகளாக எழுதுகிறேன்...
PAKEE Creation