Saturday, December 25, 2010

என்மேல் பாசம் வைப்பவர்களையும் வெறுக்கிறேன்...


என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்...

என்னால் மறக்க முடியவில்லையே...


அன்பே உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும் நினைக்கின்றேன்
ஆனால் உன் பார்வைகள் என் மேல்
விழூந்த அந்த நாளை...
உனக்காய் நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் ஆனால் என்னால்
மறக்க முடியவில்லையே...

சொர்க்கத்தில் அல்லவா இருந்திருப்பேன் ...


உந்தன் நினைவுகளே என்னை
இவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கே
உந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்
வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவா
இருந்திருப்பேன்...

இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்.....


இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்
அப்போதெல்லாம் உன் நிழலை விட
நெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்
உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்
சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்
உன்னுடனான நிஜங்களே வேண்டும் ....
PAKEE Creation