Tuesday, August 14, 2012

அழகுதீயே...



இது வரை
குளத்தில் மட்டுமே
மீன்களைப் பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உன் முகத்தில் கண்கள்
வலை வீசுவது யார்?
கரையில் இத்தனை காவலர்கள் - இமை
முழு நிலவு முகத்தில்
இடது வலதாய்
இரு மூன்றாம் பிறைகள் - புருவம்
என்ன அதிசயம்
தென்றலைத் தாலாட்டும் கூந்தல்
அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை
பார்த்து விட்டேன் இதழ்களை
வரைந்தது யார்?
ஏய்
அழகுத்தீவே சிரிக்காதே
நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...

Tuesday, August 7, 2012

வாழ்க்கை ஒரு போராட்டம்...



வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை
லட்சக்கணக்கான விந்தணுக்களுடன்
சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம்
போராட்டத்தில் பிறந்து ,
போராட்டத்தில் வளர்ந்து
போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை .
பிறப்பதற்கே லட்சக்கணக்கான
அணுக்களை வென்ற நம்மால்
வாழ்வதற்கான போராட்டத்தில்
வெல்ல முடியாதா என்ன?!!!
வாழ்ந்து தான் பார் நண்பா...
PAKEE Creation