Monday, December 2, 2013

காதல்...

எல்லா காதலும் கல்யாணத்துல
முடியனும்னு நினைக்கிறதல தான்
இங்க யாராலயும்
கல்யாணத்துக்கு அப்புறம்
காதலிக்க முடியுறதில்லை...

காதலும் குழந்தையும்...

மனசுல சுமக்கிற காதலும்
வயித்துல சுமக்கிற குழந்தையும்
வெளிய வந்தால் தான் சந்தோசம்
இல்லை என்றால்
உயிரையே குடித்திரும்...

காதல்...



காதல் வர வரைக்கும்
விடாம துரத்தனும்
அதுவே காதல் வந்துட்ட
விட்டு கொடுத்து வாழனும்...

மனிதனுடைய அந்தஸ்தை...


ஆடையினால் மனிதனுடைய அந்தஸ்தை
தெரிந்து கொள்ளலாமே தவிர
அவனுடைய உள்ளத்தை
தெரிந்து கொள்ள முடியாது
வெளி வேஷத்தை கண்டு
எதையும் தீர்மானிக்க கூடாது...

விதி...



விதினா எனக்கு என்னனு தெரியாது
எங்க அம்மாதான் அதைப்பற்றி
அடிக்கடி சொல்லுவாங்க
இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க
திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க
யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு
தெரியாதுனு சொல்லுவாங்க
எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது
அம்மா சொன்ன பல விஷயங்கள்
கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...

என் நிழல்...



இருட்டு வெளிச்சத்தில்
என் நிழலையே
நான் பார்த்து
பயந்த நாட்கள் அதிகம்...

அரவணைப்பு இல்லாமல்...



பெற்றவங்க அரவணைப்பு இல்லாமல்
அவங்க இல்லாமல் வளர்த்த பிள்ளைகள்
உலகத்தை சீக்கிரம்
புரிந்து கொள்கிறார்கள்...

கதை...

பல பேர் கதை சொல்றதுல கெட்டிக்காரர்கள்
அவங்க சொல்ற கதையை கேட்கும் போது
அத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும்
அந்த கதைல இருக்கிற
சம்பவங்களும் காதபாத்திரங்களும்
நம்மகிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு
ஏற்படும்
பல முறை அந்த உணர்வை நான் உணர்த்து இருக்கிறேன்...

நாக்கு...

அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
பலவாறு பேசவேண்டி இருக்கிறது...
PAKEE Creation