Thursday, October 22, 2009

அழவும் மனமில்லை...


அழவும்
மனமில்லை
என் கண்ணீரில்
உன் நினைவுகள்
கரைந்து விடும்
என்ற பயம்.

உன்னை நினைத்தால் மட்டும்...


இருட்டிலும் தனியாக
செல்லும் நான்
உன்னை நினைத்தால் மட்டும்
கையாலாகாத்தனமான
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைக்கின்றேன்.

காதலியே...


காதலியே
உலகத்தில்
அன்பை
எதனாலும்
அளக்க
முடியாது
என்பதை
புரிந்து
கொண்டேன்
உன் அன்பால்...

உன் பின் தான் மனம் போகிறது...


ஆயிரம் பேர்
வந்தாலும்
வேண்டாம்
என்று
விலகிப் போகும்
உன் பின் தான்
மனம் போகிறது.!!!

பிரிந்தவுடன் தான் தெரிகிறது...


பிரிந்தவுடன் தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை
போடுவதன்
சுகம்.

உன்னை நினைக்காத நாளே இல்லை...


என்
வாழ்வில்
உன்னை
நினைக்காத
நாளே இல்லை
உன்னை
நினைக்காத
நாளும்
நாளே இல்லை.
PAKEE Creation