Tuesday, February 28, 2012

தலையணை...


இருவரும் சேர்ந்து உறங்கத்தான்
தலையணை வாங்கினேன்
அதுவும் தனிமையானது
என்னைப் போலவே!

ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை...

உன்னை கருவில் சுமத்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கும் பெண்ணையும்
நீ கல்லறை செல்லும் வரை நேசி...

புன்னகைப்பாயா...


பூமியில் நிலைத்த நிலவே!
புன்னகைப்பாயா -பெண்ணால்
புண்ணான என் மனதைப் பார்த்து...

என் ஆயுள் குறைகிறது...


ஒரு நொடி அவள்
சிரித்துப் பேசினால்
நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது.
ஒரு துளி கண்ணீர் சிந்தினால்
நூறுநாள் என்
ஆயுள் குறைகிறது...

என் காதலை...


பூமிக்குள் புதைத்து வைத்தாலும்
உன் புன்னகையை தோண்டி எடுப்பேன்.
இதழ்களுக்கிடையில்
அடம்பிடிக்கும் காதலை
இழுத் தெடுப்பதுவா கஸ்ரம்...

உனக்கு தெரியாது...


நீ காதலித்த போதும்
சொன்னேன்
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியாதென்று

நீ என்னை விட்டு பிரிந்த போதும்
சொல்கின்றேன்
என் வலிகளின் ஆழம்
உனக்கு தெரியாதென்று...

உன் நினைவினால்...


என் விழியில் வழியும் நீர்
உன் பிரிவினால் அல்ல
நீ வேண்டாம் என்று
விட்டு சென்ற பின்னும்
என்னைத் துரத்தும்
உன் நினைவினால்...
PAKEE Creation