Thursday, January 2, 2014

பெண்...

ஒருவர் நான்கு நாட்கள்
நம்பிக்கைக்குரியவராகக் காட்சியளித்து விட்டால்
தன் சகல உடைமைகளையும்
அவரிடம் ஒப்படைத்து விடுகிறாள் பெண்...

பெண்...

இக்கட்டான நேரங்களில்
பெண்ணுக்கு வரும் துணிச்சல்
சிங்கதுக்குக் கூட வராது...

சீதை...

இராமன் காட்டுக்குச் செல்லும்போது
சீதை ஏன் கூடச் சென்றால்?
கணவன் மீது இருந்த காதலால்
மட்டுமல்ல அங்கும் ஒருத்தி
வந்து விடக்கூடாதே என்றுதான்...

இரவு...

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே
ரகசியத்தை வைத்த இறைவன்
அந்த ரகசியத்தைப் பரிமாறிக்கொள்ளவே
இரவைப் படைத்து இருக்கிறான்
இல்லை என்றால் இரவு என்ற
ஒன்றே இல்லாமல் வாழ முடியாத என்ன?...

தனிமை...

துன்பப்பட்டவன் தனிமையை
நாடினால் சமயங்களில்
தற்கொலை எண்ணமே வரும்...

மெழுகுவர்த்தி...

மனிதன் பலபேரின் உதவி இருந்தாலும்
தான் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிறான்

எவரின் உதவியும் இல்லாததால்
தன்னைத்தானே அழித்து
திரியை சின்னதாக்கி தீயோடு
சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி...

வாழ்க்கை போராட்டம்...

வாழ்க்கை போராட்டம் மனிதர்களுக்கு மட்டுமில்லை
எல்லா உயிர் இனங்களுக்கும் தான்
மனிதன் மட்டும் தான் சோதனையிலும் வேதனையிலும்
புழுவாய் துடிக்கிறான்...

உன் சுதத்திர வாழ்க்கை உன் கையில்...



நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சனை பெரிய வியாதியே இது தான்
ஒவ்வொருவரையும் அவர் படிக்கும் போதே
அவர் இந்த வேலைக்கு என்று முடிவு பண்ணிவிடுகிறோம்
அல்லது அவர் படிப்பை வைத்து அவர் இந்த வேலைதான்பார்க்க வேண்டும்
என தீர்மானித்து விடுகிறோம்
சொல்லப்போனால் இது எழுதப்படாத சட்டம் போல்ஆகி
எல்லோரது வாழ்க்கையிலும் புகுந்து விளையாடுகிறது

ஆக கடைசியில் மனிதனாய் பிறப்பதேபடிப்பதற்கு
பின் படித்த படிப்பிற்கு வேலை தேடுவதற்கு
பின் கல்யாணம் குடும்பம் என சொட்டிலாகி விடுவது
என ஒரு குறுகிய வட்டத்திற்குள்அடைப்பட்டு விடுகிறது

அதைத் தாண்டி யாரும் சிந்திப்பதும் இல்லை
நம் வீட்டாரும் சரி நம்மை சுற்றியுள்ளவர்களும் சரி
நம்மை இப்படி சிந்திக்க விடுவதுமில்லை

நாம் விருப்பப்பட்ட வாழ்க்கையை நாம் ஏன்அமைத்து கொள்ளகூடாது?
என்பது பற்றியெல்லாம் யாரும் சிந்திக்க முடியாத அளவுக்கு
ஒவ்வொருவரும் ஒருவித காட்டாயத்தில்அகப்பட்டு விடுகிறோம்
அப்பிடியே வாழ்ந்து நம் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம்
பிறப்பு இறப்பு இந்த இரண்டுக்குள்ளும் நாம் காண்கிற கனவு
சிலது பலித்து விடுகிறது சிலது கனவாகியே விடுகிறது
நாம் எப்பிடி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ
அது முடியமால் அந்த தவிப்பையும் மனதில் வைத்துகொண்டு
இறந்து போகிறோம்

நீ என்ன வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறயோ
அது வாழ முடிந்தவரை முயற்சி செய்
உன் வீட்டார் சுற்றத்தார் எதிர்ப்பை மீறி
நீ நினைத்த ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்...
PAKEE Creation