Wednesday, February 20, 2013
Tuesday, February 12, 2013
காதலர் தினம்...
கலப்பது உயிர்களென்றால்
பிறப்பது காதல்தான்
காலம் பார்த்து வருவதா
காதலெனும் காவியம்?
மனங்களால் கதைகள் பேசி
கருத்தினில் ஒன்றிய பின்
நாளும் காதலர் தினம்தானே
காதல் வாழ்கிறது இங்கே
காதலர்கள் கல்லறையில்
வாழ்த்த காதலர்கள்
காவியமாய் ஆனதில்லை
மதத்தின் பிரிவினால் காதல்
மறுதலித்த போதும்
சாதியின் பிரிவினால் காதல்
சாதலில் முடிந்த போதும்
பணத்திமிரினால் காதல்
பந்தாடப் பட்ட போதும்
மொழியின் பிரிவினால் காதல்
மழுங்கிப் போன போதும்
காதல் கதைகளில் வாழ்கிறது
காதலர்கள் பிரிந்த பின்பே
எமக்கு வேண்டாம் இந்த
பிரிந்து வாழும் காதல்
காதலர்கள் இணைந்து வாழும்
காதல் கோட்டைஒன்றை
எம் காதல் தேசத்தில்
காதலுக்கு காதல் சொல்லி
காவியமாய் வாழவைப்போம்...
Friday, February 1, 2013
நீ என் உலக அழகியடி நீ...
நான் உன் ரசிகனடி
தினம் தினம்
ரசித்துக் கொண்டே
இருக்கிறேனடி உன்னை
பள்ளிக்காலங்களில்
நீ செய்யும்
ஒவ்வொரு
செயல்களையும் ரசித்தேனடி
என் புத்தகத்தில்
உன் பெயரை எழுதி
அதில்
உன் முகத்தை ரசித்தேனடி
நீ கோபப்படும்
அழகினை ரசித்தேனடி
உன் பெயரை எழுதி
அதில்
உன் முகத்தை ரசித்தேனடி
நீ கோபப்படும்
அழகினை ரசித்தேனடி
அதனால் தான்
தினம் தினம்
உன்னை ரசித்துகொண்டே
இருக்கிறேனடி
நீ கொள்ளை அழகியடி
என் எதிரிகள்
எண்ணிக்கை உச்சமடி
உன் அழகு முகம்கான
முழு நிலவும் உன்னை தேடுதடி
பிரபஞ்சத்தின் அழகெல்லாம்
உன் பின்னால நிற்குதடி
நீ என் உலக அழகியடி...
தினம் தினம்
உன்னை ரசித்துகொண்டே
இருக்கிறேனடி
நீ கொள்ளை அழகியடி
என் எதிரிகள்
எண்ணிக்கை உச்சமடி
உன் அழகு முகம்கான
முழு நிலவும் உன்னை தேடுதடி
பிரபஞ்சத்தின் அழகெல்லாம்
உன் பின்னால நிற்குதடி
நீ என் உலக அழகியடி...
Subscribe to:
Posts (Atom)