எனது கிரணங்களுக்கு
உன் இதயத்தில்
பாதைகளை உருவாக்கு
நடந்து திரிவதற்கல்ல
நிலைத்து நிற்பதற்கு
என்
இமைச்சிறகுகள் படபடக்க
உனக்குள் ஒரு வானத்தை எழுப்பு
சிரித்து மயக்கும்
உன் கன்னக்குழியில்
நான் நடந்து போக
ஒரு பாலம் போடு
உன் மெளன வளையங்களுக்குள்
சேகரிக்கும் பரிமாணங்களை
அரியாசனத்தில் அமரச்செய்
உன் உதடுகளில்
பூசி மெழுகும் புன்னகையை
நிர்வணமாய் வெளித்தள்ளு
உன் திருமுகத் திருவிழாவில்
பல்லவியை ஒரம் கட்டி
புது அகராதி எழுது
பவனி வரும் பனிக்காற்றை
உன் சுவாசத்தில்
பந்தி போட்டு பத்திரப்படுத்தி வை
உன் விழிகளைச் சுற்றி
இமைகளால் பரண் கட்டாதே
என் பார்வை பரிதவிக்கும்
என் கனவுகளுக்கு
நீ புதிய அறிமுகம்
உன் கருவறைச் சுவரில்
நான் கவிதை எழுத வேண்டும்
பிரியங்களை பலப்படுத்து
உன் நெஞ்சினில் சிறகுகளை தரித்துவை
உச்சிச் சூரியன் வரை உயர பறப்போம்...