உறிஞ்சிய பால் ஜீரணித்து இரத்தமாகி
இளைஞனாகி
மார்புநிமிர்ந்த பெண்மையில் மயங்கி
மார்புதைந்து
பாலும் பழமும் பவளவாயும் என்று ருசித்து ருசித்து
அன்னை முலை தந்த அப்பாலில் தொடங்கி
இறுதி நேரத்தில் புகட்டப்படும் இப்பால் வரையில்
எத்தனை பால்..?
ஆண்பால் பெண்பாலாய் பாலியல் படித்து
திருப்தியாயிற்றா மனது..?
இல்லையே...
No comments:
Post a Comment