அன்னை மடிதனில்
தலை சாய்ந்த நாள்தனையும்
நிலாக் காட்டி அன்னமூட்டிய
ஆனந்த காலங்களையும்
அழகாக எண்ணுகிறேன்
ஆலயம் தொழ
அழகாகச் சென்ற
அரிய பக்தி நாட்களையும்
ஆனந்தமாய் ஆடி ஓடிய
ஆவேச நாட்களையும்
ஆர்ப்பரித்து எண்ணுகிறேன்
அங்காடி வேளையில்
ஆனந்தமானந்தமாய்
ஊரளந்த ஊதாரித் தனத்தையும்
உற்று நோக்குகிறேன் இன்னும்
நரகத்தில் நாமிங்கு
சொகுசாக வாழ்ந்தாலும்
அங்கு சொந்தங்கள் கூடி
சொற்பணமாய் வாழ்ந்த காலங்களை
சொல்லியெடுக்க முடியுமா..?
No comments:
Post a Comment