Thursday, July 16, 2009

என்றும் பிரியாது


நிழல் கூட
மாலை
நேரத்தில் பிரியும்
என் நினைவுகள்
உன்னை விட்டு
என்றும் பிரியாது...

என் மடி சாய்ந்து
தேவதை கேட்டாள்.....
என்னைப்பற்றியே எழுதும்
உன்னை கவிஞன் என்று எப்படி சொல்ல?
கவிதையை சுமப்பவனை
கவிஞன் என்றுதானே சொல்ல முடியும்.....

தேடுகிறேன் கனவுகளில் உன்னை


உன்னைத் தொலைத்துவிட்டு

தேடுகிறேன் கனவுகளில்…

பேச ஆயிரம் வழிகள் இருந்தும்

பேச முடியா ஊமையைப் போல

உன் நிழற்படத்தோடு

என் நிஜங்களை பகிர்ந்து கொள்கிறேன்…

உன்னை நினைவுப்படுத்தும் அனைத்தையும்

இன்னும் ஆழமாய் நேசிக்க ஆரம்பிக்கிறேன்

உன்னைப் போலவே…

மீண்டும் மீண்டும்



மீண்டும் மீண்டும் ஓயாமல்
உன்னை பார்க்கும் என்
கண்களுக்கு புரியவில்லை
இமைக்கும் ஒவ்வொரு நொடிகளிலும்
அவைகள் உன்னை விழியோடு
பூட்டி வைத்திருக்கிறது என்று...

என் காதல்


காற்றை சுவாசிக்கிறேன்
உயிர் வாழ அல்ல உன் மூச்சு
காற்றும் அதில் கலந்திருப்பதால்.....

அதிசயம்


இந்த பிரபஞ்சத்தில் ஒரு
அழகான அதிசய மலரை பார்த்தேன்
என்ன நடந்ததோ தெரிய வில்லை
என்னை மறந்தேன் இந்த உலகை மறந்தேன்
ஒருமுறை இறந்தேன் மறுபடியும் பிறந்தேன்
காற்றாக ஏன் தெரியுமா?அப்போதாவது
உன் இதயத்தில் மனசில் மூச்சுகாற்றாய் வாழ....

என் கவிதை


அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு ...
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்...
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்...
எழுதிய கவிதையை மறந்து விடாதே...
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி ...

உன் புன்னகை


ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று...

கவிதை


இமைப்பொழுதிலும்
கவிதை

எழுதுவேன்
இமைப்பது
நீயெனில்...

உயிரிலே கலந்தவளே


உயிரிலே கலந்தவளே
உண்மையாக
உன்னை நேசிக்கிறேன்
உயிர் கூட அழுகுதடி
நீயின்றி
உன்னை நினைத்து...

கனவுகளில் மலர்வதில்லை காதல்


கனவுகளில் மலர்வதில்லை
காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயத்தில் இறக்கும் வரை
உயிரானவளே
உன்னை நினைத்து துடிக்குமடி
என் இதயம்...

என் இதயத்தை

கடலில் விழுந்த
மழைத்ததுளியைத்
தேடுவது போல்!
தேடுகிறேன்...
உன் கண்களின்
வழியே.
என் இதயத்தை...

முதல்முதறை

காதலிக்காமல்


காதலிக்காமல்
இருப்பதை
விட காதலித்து
தோற்றுப் போவதே
மேல்...

என் மனதில் காயம்


மருந்திட்டுக்கொள்ள மனமில்லை
மருந்திட்டும் மாற்றமில்லை

என் மனதில்
காயம்

என் காயங்களிலும் கசிகிறது
என் காதல்!

புரிவதில்லை


காதல்
என்பது சொல்லிப்
புரிவதில்லை!
உனக்கு சென்னாலும்
புரிவதில்லை!

இதயம்


என் நிழழுக்கே
இதயம் உள்ள போது
உனக்கும்
நிச்சயம்
இருக்கும்...


ஏனெனின்
என் இதயத்தில்
நீ தான் இருக்கிறாய்
PAKEE Creation