skip to main |
skip to sidebar
நிழல் கூடமாலைநேரத்தில் பிரியும்என் நினைவுகள்உன்னை விட்டுஎன்றும் பிரியாது...
என் மடி சாய்ந்து
தேவதை கேட்டாள்.....
என்னைப்பற்றியே எழுதும்
உன்னை கவிஞன் என்று எப்படி சொல்ல?
கவிதையை சுமப்பவனை
கவிஞன் என்றுதானே சொல்ல முடியும்.....
உன்னைத் தொலைத்துவிட்டு
தேடுகிறேன் கனவுகளில்…
பேச ஆயிரம் வழிகள் இருந்தும்
பேச முடியா ஊமையைப் போல
உன் நிழற்படத்தோடு
என் நிஜங்களை பகிர்ந்து கொள்கிறேன்…
உன்னை நினைவுப்படுத்தும் அனைத்தையும்
இன்னும் ஆழமாய் நேசிக்க ஆரம்பிக்கிறேன்
உன்னைப் போலவே…
மீண்டும் மீண்டும் ஓயாமல்
உன்னை பார்க்கும் என்
கண்களுக்கு புரியவில்லை
இமைக்கும் ஒவ்வொரு நொடிகளிலும்
அவைகள் உன்னை விழியோடு
பூட்டி வைத்திருக்கிறது என்று...
காற்றை சுவாசிக்கிறேன்
உயிர் வாழ அல்ல உன் மூச்சு
காற்றும் அதில் கலந்திருப்பதால்.....
இந்த பிரபஞ்சத்தில் ஒரு
அழகான அதிசய மலரை பார்த்தேன்
என்ன நடந்ததோ தெரிய வில்லை
என்னை மறந்தேன் இந்த உலகை மறந்தேன்
ஒருமுறை இறந்தேன் மறுபடியும் பிறந்தேன்
காற்றாக ஏன் தெரியுமா?அப்போதாவது
உன் இதயத்தில் மனசில் மூச்சுகாற்றாய் வாழ....
அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு ...
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்...
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்...
எழுதிய கவிதையை மறந்து விடாதே...
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி ...
ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று...
இமைப்பொழுதிலும்
கவிதைஎழுதுவேன்
இமைப்பது
நீயெனில்...
உயிரிலே கலந்தவளே உண்மையாகஉன்னை நேசிக்கிறேன் உயிர் கூட அழுகுதடி நீயின்றிஉன்னை நினைத்து...
கனவுகளில் மலர்வதில்லை காதல்இதயத்தில் மலர்வதே காதல் இதயத்தில் இறக்கும் வரை உயிரானவளேஉன்னை நினைத்து துடிக்குமடி என் இதயம்...
கடலில் விழுந்தமழைத்ததுளியைத்தேடுவது போல்!தேடுகிறேன்...உன் கண்களின்வழியே.என் இதயத்தை...
காதலிக்காமல்இருப்பதை விட காதலித்துதோற்றுப் போவதேமேல்...
மருந்திட்டுக்கொள்ள மனமில்லைமருந்திட்டும் மாற்றமில்லைஎன் மனதில்காயம்என் காயங்களிலும் கசிகிறதுஎன் காதல்!
காதல் என்பது சொல்லிப்புரிவதில்லை!உனக்கு சென்னாலும்புரிவதில்லை!
என் நிழழுக்கேஇதயம் உள்ள போதுஉனக்கும்நிச்சயம்இருக்கும்...ஏனெனின்என் இதயத்தில்நீ தான் இருக்கிறாய்