Wednesday, April 27, 2016

பெண்கள்...

பெண்கள் இதயத்தால் சிந்திப்பவர்கள்
ஆண்கள் மூளையால் சிந்திப்பவர்கள்
இதனால் தான் பெண்கள் பலவினமானவர்கள்
என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்...

இளமை...

பூவோடும் நிலாவோடும் பட்டம்பூச்சியோடு
பேச கற்றுத்தரும் இளமை
நிறைய பேருக்கு அவங்க அப்பா அம்மா பேச்ச கேட்கனும்
அப்பிடினு கற்றுத்தறதில்லை...

என்றே ஒரு நாள் வாழ்வதற்கு...

என்னிடம் நிறைய கனவுகள் இருக்கின்றன
ஆனால் விற்பதற்கு மனமில்லை
எல்லா கனவுகளையும் அழகாய் செதுக்கி வைத்து இருக்கிறேன்
என்றே ஒரு நாள் வாழ்வதற்கு...

கனவு...

இங்கு பல பேருடைய வாழ்க்கை
கனவுகளில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது
நிஜத்தில் வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது...

பெண்...

மனிதன் முழுத் துன்பத்துக்கோ
முழு மகிழ்ச்சிக்கோ ஆளாக்கக்கூடியது ஒரே ஒரு சிருஷ்டிதான்
அது பெண்
மனிதன் சித்தத்தைச் சிதைக்கவும் , பிரமை உண்டாக்கவும்
ஆனந்த வெள்ளத்தில் அழ்த்தவும் சக்தி உள்ளவள் பெண்தான்
அதனால்தான் உலகத்தை இயக்கும் சக்தியையும்
வேதாந்தம் பெண்ணாகச் சித்தரித்திருக்கிறது...

இழப்பு...

இழப்புகளில் தான் மனிதனின் வாழ்வு நடக்கிறது
சில நீர் துளிகளின் இழப்புதானே மனிதனை உருவாக்குகிறது
அறியாமையின் இழப்புதானே ஒரு மனிதனுக்கு அறிவைக்கொடுத்தது
வருடங்களின் இழப்புதானே வயதைக்கொடுத்தது
உடலின் உழைப்பு என்ற இழப்புதானே மனிதனுக்கு பொருளைக்கொடுக்கிறது...

வழிபாடுகளும் வணக்கங்களும்...

என் துயரங்களை ஆற்றும் கடவுள்களென்று
வெறும் கற்சிலைகளை நம்பினேன்
தூசி பட்டதுவோ என்று வருந்தி
அவைகளுக்கு கண்ணூதி விட்டேன்

போகும் இடமெல்லாம் பூனைபோல
காவ்விச் சென்றேன்
கடவுள் வடிவெடுத்த கற்சிலைகளை

எங்கயோ பிறந்து வளர்ந்து
என் வாழ்வில் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
வணக்கங்கள் வழிபாடுகள்
சுலபத்தில் என்னைவிட்டு போகாது
என்கைகளை கும்பிடவும் வைக்கிறது

இன்னும் பல உருவமாக மாறி மாறி
என்னைக் கூழக்கிப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது
என் பரம்பரைக் குள்ளாலே வந்த
வழிபாடுகளும் வணக்கங்களும்...

கண்ணீர்...

அம்மா பிள்ளையை
அழவைத்துத்தான் பெற்று எடுக்கிறாள்
உன் வாழ்க்கையில் கண்ணீரை புரிந்து கொள்வதற்கு...

நம் மூதாதையர்கள்...

மனிதன் வளர வளர ஆசையும் பாசமும் வளர்கின்றன
இளம் பருவத்தில் அவர்கள் உள்ளத்தில் அத்தனை மாசு இருப்பதில்லை
ஆதலால்தான் இளமையில் கல்வி கற்கும் வழக்கத்தை
நமது மூதாதையர்கள் வைத்து இருக்கிறார்கள்...

இழப்பு...

உண்மையில் இழப்புகள் தான்
மனிதனை செம்மைப்படுத்துகின்றன
கருவறையின் இழப்புதானே
ஒரு மனித உயிரை உலகிற்க்கு கொடுத்தது...

அழுகை...

திரிந்து போன பாலுக்காகவும்
கசந்து போன மனத்துக்காகவும்
அழுது என்ன பயன்...

சில பேர்கள்...

தோட்டத்து மயிலிடம் ஆட்டத்தின் அழகைத்தான்
எதிர்பார்க்க முடியுமே தவிர
நரியின் தந்திரத்தையோ ,
வேங்கையின் வீராவேசத்தையோ எதிர்பார்க்க முடியாது
அது போல் தான் சில பேர்களிடமும்...

சம்பிரதாயம்...

சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிறதே
தவறு என்று தெரிந்தாலும் சொல்ல முடியாத
நிலையை அது ஏற்படுத்தி விடுகிறது...

முன்னேற்றம்...

என்று எமது சமுதாயம் இளையோரை மதிக்கிறதோ
அன்றேதான் நம்மவர்கள் வான் வீதி வலம் வரலாம்
இளைஞரது ஆற்றல்கள் இலைமறைவாய் இருக்கும் வரை
முன்னேற்றம் என்றதொரு பாதையை நாம் காண போவதில்லை...

ஆண்...

நிலவென்றான் உயிரென்றான்
நெருங்க முதல்!
சுவையென்றான் தேன் கனியென்றான்
இணைந்த பின்னால்!
விஷமென்றான் தேள் என்றான்
கை கழுவியபின்!
நரகமென்றான் தோல்வியென்றான்
பிரிந்த பின்னே...

நாம்...


பிரயாணக்களைப்பின் போது சற்று இளைப்பாற
நிழல்தேடி இவ்வுலகில் உட்கார்ந்தவர்கள் நாம்
இதனை மறந்து இங்கேயே என்றும்
ஆட்சி நடத்தலாமென
அகங்காரம் கொள்ளாதீர்கள்...

பெண் குழந்தை...

பெண் குழந்தையை எந்த தகப்பனும்
குழந்தையாக பார்ப்பதில்லை
தன் அம்மாவாக தான் பார்க்கிறான்...

Wednesday, March 2, 2016

சுதந்திரம்...

நாயும் பூனையும் சுதந்திரமாய் உலவுதல் போல்
மரம் செடிகள் தலை நிமிர்ந்து நிற்பது போல்
மனிதர்கள் எல்லோரும் இப் பூமி எங்கினும்
சென்று வர நிலை வர வேண்டும்
அது தான்யா சுதந்திரம்...

தன்னினத்தை...

தன்னினத்தைத் தாழ்த்தி
வேறு தயவுதனில் வாழ்வது
கண்ணை விற்றுச் சித்திரத்தை
கையிலேந்தும் தன்மையே...

ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடாது...

எல்லாம் நடந்து முடிந்து
ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பிறகு
பல விஷயங்களை மறக்கத்தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர
ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடாது...

சொர்க்கத்தில்...

சேரக்கூடாத பந்தங்கள் சேர்ந்து விடுகின்றன
அவை பிரியக் கூடாத நேரத்தில் பிரிந்து விடுகின்றன
திருமணம் மட்டுமா சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பெறுகிறது?
மரணமும் கூடத்தான்...

பெரிய எதிரி...

நம் வாழ்வில்
நாம் சந்திக்கக் கூடிய பெரிய எதிரி
நம்மை அதீதமாய் நேசிப்பவரே...

மனிதனின் சக்தி...

கோடை காலத்துக்குப் பின்னால்
வசந்த காலம் வந்தே தீரும் என்பது
கோடையில் புரிவதில்லை
வசந்தம் வந்ததும் தான் புரிகிறது

துன்பங்கள் முடியக்கூடியவையே
சோதனைகள் எதிர்பார்க்கப்பட வேண்டியவையே
அவற்றைச் சந்திப்பதில் தான்
மனிதனின் சக்தி அடங்கி கிடக்கிறது...

சந்திரன்...

சந்திரனை சாட்சிக்கு அழைக்காதீர்கள்
அவன் ஒரு நாள் இருப்பதைப்போல்
இன்னொரு நாள் இருப்பதில்லை
சில நாட்கள் தேய்கிறான்
சில நாட்கள் வளர்கிறான்
நிலையற்றவன்...

விவேகம்...

பெண் விஷயங்களில் குறுக்கிடும் போது
ஆணின் விவேகம் மறைகிறது
ஏனென்றால் பெண்களுக்கு விவேகம் குறைவு
அதுவும் ஒரு ஆண் மீது ஆசை ஏற்படும்போது
விவேகம் மிகக் குறைந்து விடுகிறது
பிடிவாதம் மிஞ்சுகிறது...

ஆசை வைத்த பொருள்கள் அதிகம் இல்லை...

நான் உலகத்தில் ஆசை வைத்த பொருள்கள் அதிகம் இல்லை
ஏதோ ஓரிடத்தில் என்னையும் மீறிப் பாசம் விழுகிறது
ஆனால் ஆசை நிராசையாகி விடுகிறது...

ஆச்சரியம்...

நம்பத்தகாத காரியங்கள் உலகத்தில்
எவ்வளவோ நடக்கின்றன
அப்பிடி நடக்கவிட்டால்
ஆச்சரியம் என்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது...

அன்பு...

அன்பு மலரில் இந்த முட்கள் பல
எதற்காகத் தான் முளைக்கின்றனவோ?
எல்லையற்ற அன்பு கிளைக்கும்போது
தொட்டதற்கெல்லாம் சந்தேக முட்களும் கிளம்பி
மனத்தைக் குத்திப் புண்ணாக அடிப்பதில்
விதிக்கு அதிகச் சந்தோஷமிருப்பாதகத் தோன்றுகிறது...

சுகதுக்க உணர்ச்சிகள்...

வாழ்க்கையில் அதிகம் கசப்புத் தட்டிவிடும் சமயங்களில்
சுகதுக்க உணர்ச்சிகள் எதையுமே மனம் வாங்குவதில்லை
அப்படி மனம் மரத்து நிற்கும் சமயங்களில்
கண்கள் உணர்ச்சி ஏதுமின்றி வெறித்துப் பார்க்கும்...

தாய் மனைவி...

பிள்ளையின் கொளரவத்தைப் பார்த்து சந்தோசப்பட ஒரு தாயும்
கணவன் மகிழ்ச்சியைப் பகிர்த்து கொள்ள ஒரு மனைவியும்
இல்லாதவனுக்கு
உலகத்தில் சந்தோசம் எதற்கு? கொளரவந்தானெதற்கு?...

முகஸ்துதி...

தன்னைப் பற்றிய அபிப்ராயங்களை
நேருக்கு நேர் தெரிந்து கொள்ளும்படியான பாக்கியம்
எந்த மனிதனுக்கும் கிடைப்பது அரிது
எவ்வளவு அயோக்கியனைப் பார்த்தாலும்
முகஸ்துதியாகப் பேசிவிட்டு போவதுதானே உலகத்தின் இயல்பு...

விதி..

வாழ்க்கை முறையை நிர்ணயிக்க மனிதன்
பல விதிகளை ஏற்படுத்தியிருக்கிறான்
அந்த விதிகளை மீறினால் தண்டிப்பதற்கும்
பல விதிகளைச் சிருஷ்டித்திருக்கிறான்
ஆனால் இந்த விதிகள் அனைத்தும் யுகத்துக்கு யுகம்
வருஷத்துக்கு வருஷம் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன
சமூகத்துக்குத் தகுந்த விதிகள் சமயத்துக்கு தகுந்த நீதிகளாக மாறின
பன்மையில் மனித சமூகத்தில் படர்ந்த இந்த விதிகள் ஒருமையில்
அநாதிகலமாகத் தனித்து நின்ற அந்த தலைவிதியை மட்டும் மாற்ற முடியவே இல்லை
கடவுள் எப்பிடி ஒருவனோ அப்பிடியே அவன் கட்டளையான அந்த விதியும்
பன்மைத் தொடரின்றி "விதி" என்ற ஒற்றைச் சொல்லாகவே தனித்து நின்று வருகிறது
மனிதன் வாழ்க்கை இப்பிடித்தான் ஓட வேண்டும் என்று
பரம்பொருள் விதித்த விதி எந்த நிலையிலும் எந்த யுகத்திலும்
ஆடாமல் அரங்காமல் தன்னிஷ்டப்படியே மனிதனைச் இழுத்து செல்கிறது...

இயற்கையின் நியாதி...

ஆண்மகன் கைவசப்பட்ட பெண்
குயவன் கைக் களி மண்ணுக்குச் சமானம்
அவன் இஷ்டப்படியெல்லாம் வளைவாள்
இதுதான் இயற்கையின் நியாதி...

மனிதனுடைய புத்தி...

மனிதனுடைய புத்தி விசித்திரமானது
ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித் தனத்தையெல்லாம் உதறித்தள்ளி
சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது
எப்போர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும்
ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து
எழுப்பப் பட்டுத் தன்னைத்தானே
சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது...

ஏதோ ஒரு வகையில்...

நாம் மற்றவர்களோடு
ஏதோ ஒரு வகையில் ஒரு நாளிலாவது
ஒற்றுமையா தான் இருக்கிறோம்
இன்பம் துன்பத்திலும் கூட...

வாழ்க்கை...

உலகத்தில பல பேர்
அவங்க அம்மாவோட வாழ்க்கைல இருந்தும்
தன்னோட வாழ்க்கைல இருந்தும்
எதையுமே கத்துகிறதில...

தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள்...

அழகான பாம்புகள் விஷத்தோடு இருப்பதைப்போல
வேறு தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள்
படுமோசமான ஆதிக்க வெறியர்களாக இருப்பார்கள்

உலகையே ஆழ விரும்பிய ஹிட்லர்
மது அருந்த மாட்டான் , மாமிசம் சாப்பிடமாட்டான்...

பொருட்கள்...

ஓடுகிற வரையிலும்தான் காருக்கு மதிப்பு
நின்னு தள்ளினா கேலிதான்
படாடோபமான பொருட்கள் எல்லாமே இப்படிதான்
ஒழுங்காயிருந்தால் மதிப்பு
ஒழுங்கு கெட்டால் ஊருக்கு நகைப்பு...

Thursday, February 18, 2016

கோபம்...

சாந்தமான மனிதனுக்கு கோபம் வரவேண்டுமானால்
காரணம் பலமாக இருக்க வேண்டும்
அழமான நீர்நிலை அலையாது
அது அலைய வேண்டுமானால்
அதில் பெரிய கல்லைத்தான் எடுத்துப் போட வேண்டும்...

குழந்தைகளின் கடமை...

பெரியவர்கள் சம்பாதிக்கும் பெரும் சொத்துக்களை
அழிப்பதுதான் அடுத்து வரும் குழந்தைகளின் கடமை...

அற்ப குணங்கள்...

நம்மைவிடச் சிறந்தவர்களைப் பற்றி பேசும்போது
நாம் நம்மிடமுள்ள அற்ப குணங்களை
உதறிவிடவாவது கற்றுக்கொள்ள வேண்டும்...

பெண்கள்...

புண்பட்ட பெண் உள்ளத்திற்கு ஆறுதலிளிக்க
ஆணின் அன்பைவிடச் சிறந்த மருந்து உலகத்தில் கிடையாது
ஆண் தங்களை அணுகுவதிலும் கொஞ்சுவதிலும்
பெண்கள் எவ்வளவோ திருப்தியடைகிறார்கள்...

வாழ்வு , சாவு...

வாழ்க்கைல பள்ளம் மேடு இருப்பது சகஜம்
மேட்டுல இருந்து பள்ளத்துக்கு போறவன் சாகனும்னு நினைக்கிறான்
பள்ளத்துல இருந்து மேட்டுக்கு போறவன் வாழனும் நினைக்கிறான்...

பணம்...

மனிதர்க்குக் கிடையாத மதிப்பு இங்கு
தினம் மாறும் பணத்துக்கு உரித்தாச்சு
தறிகெட்டு நெறிகெட்டு தர்மத்தின் விழிகேட்டு
துயர் இங்கு வாழ்வாச்சு

நோய் கண்ட மனிதர்மேல் மருத்துவப்
பணத்தீயால் ரணம் செய்து வதைக்கின்றனர்
கடவுள் பெயரை சொல்லி களியாட்டம் செய்கின்றனர்
கருத்து ஏதும் அறியமால்
மடம் கட்டி பொருள் சேர்த்து மாயங்கள் பல செய்வார்
மெய்யை பொய்யாக்கி

உதிரத்தில் உணர்வில்லை உறவுக்கும் விருப்பமில்லை
மரணத்தில் விடையாகும் - போகும்
மரணத்தில் விடையாகும்

கண்ணோடு வாயையும் செவியையும்
நம்பாதே
உன்னை நீயே உணர்த்துகொள் - மனிதா
விழித்து கொள்...

கண்கள்...

தனியாக உட்கார்ந்து நன்றாக அழ விரும்புகிறவனுக்கு
தனிமை நல்ல வசதி
அது உடம்பில் உள்ள நீரைக் கீழே இறக்கி விடுகிறது
துடைப்பார் இல்லாத கண்கள்
முற்றிலும் வற்றியே பிறகே கண்ணீரை நிறுத்துகின்றன...

பிரமன் படைப்பு ...

பெண்களைப் போல் எந்த விஷயத்தையும்
உள்ளடக்கியும் ரகசியமாகவும் வைத்துக்கொள்ள
ஆண்களால் முடியாது
ஆண் பிள்ளைகளைத்தான் பெண்களிடம் ஏமாறுவதற்கென்றே
பிரமன் படைத்திருக்கிறான்...

குடியின் சக்தி...

குடியின் சக்தி மிக விசித்திரமானது
சிரிப்பு , அழுகை , கோபம் , அங்க சேஷ்டைகள்
ஆகிய சகல விகாரங்களையும் மின்னல் வேகத்தில்
மாறி மாறி அளிக்ககூடிய மருந்து உலகத்தில்
ஏதாவது உண்டென்றால் அது குடிதான்...

மக்கள்...

மக்கள் நினைப்பதைக்கொண்டு
தனிப்பட்டவர்கள் நடத்தையை தீர்மானிக்க முடியாது
வயது வந்த பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர்
பார்த்துச் சிரித்துக் கொண்டால் கூட
உலகம் விபரீத அர்த்தத்தையே கற்பிக்கிறது...

காலம்...

காலம் மனிதர்களின் அந்தஸ்தை
எப்படி மாற்றி மாற்றித் தூக்கி எறிகிறது...

கடமை...

உலகத்தில் ஆள்பவர்களுக்குக் குறைவில்லை
கடமையை அறிந்து ஆள்பவர்கள்தான் குறைவு
பின்னால் வருபவர்களுக்குக் கடமையை உணர்த்துவது
முன்னாள் செல்பவர்களின் கடமை...

அற்பமான மனிதன்...

அற்பமான மனிதன்
ஆபத்தில் சிக்கிகொண்டால் தான் தப்பும் வழியைப் பார்ப்பானேயொழிய
தன் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றி கவலைப்படவே மாட்டான்...

மகான், முட்டாள்...

வாழ்க்கைச் சமுத்திரத்தில் ஊசலாடும் நாம்
சதா உணர்ச்சி அலைகளால் தூக்கி எறியப்படுகிறோம்
காதலிக்கும் பருவத்தில் துறவறத்தையும்
துறக்க வேண்டிய வயதில் காமத்தையும் இச்சிப்பவர்கள்
பெரிய மகான்களாய் இருப்பார்கள் அல்லது
முட்டாள்களாயிருப்பர்கள்...

சமூகம்...

அறியாத உள்ளங்களில் ஆயிரம் ஆசைகள் எழலாம்
ஆனால் அவை கைகூடுவது
சமூகம் அவற்றை எவ்வளவு தூரம்
சகிக்கும் என்பதைப் பொறுத்திருக்கிறது...

கசப்பு...

கசப்பு ஏற்பட்ட மனத்தில்
எழும் எண்ணங்களும் கசந்தே இருக்கும்...

முட்டாள்தனம்...

ஒரு மனிதனின் முட்டாள்தனம்
இன்னொரு மனிதனுக்கு
எவ்வளவு தூரம் பயன்படுகிறது...

பணத்தின் வலிமை பெரிதுதான்...

சாம்ராஜ்யத்தைக் காக்கவும் பணம் தேவை
பெண்ணைக் காப்பாற்றவும் பணம் தேவை
பணத்தின் வலிமை பெரிதுதான்...

பெண்ணின் மனம்...

தன்னை காக்க ஓர் ஆண்மகன் இருக்கிறான்
என்ற துணிவு இருந்தால்
பெண்ணின் மனம் ஒரு தனி பலத்தைப் பெற்று விடுகிறது...

Wednesday, February 17, 2016

மனிதன் வாழ்வு...

வாழ்க்கையில் மிதமிஞ்சிய கஷ்டம் ஏற்பட்டால்
ஒன்று மனிதன் பண்படுகிறான்
இல்லை நாசமாகி விடுகிறான்
அவனவன் தரத்தைப் பொறுத்த விஷயம் அது
நெருப்பில் வைக்கோல் விழுந்தால்
சட்டென்று பற்றி எரிந்து தீய்ந்து போகிறது
தங்கம் விழுந்தால் முன்னைவிட
அதிகப் பளபளப்பைப் பெற்றுப் பிரகாசிக்கிறது
மனிதன் வாழ்வும் இப்பிடித்தான்...

எனது முதல் காதல்...

வானத்தில் திடிரென ஒரு நட்சத்திரம்
பளிச்சென்று கண்ணுக்குத் தோன்றி மறைந்துவிட்டால்
எப்பிடியிருக்கும் அதே போல தான்
எனது முதல் காதல்...

பெண்மனத்தின் ஆழம்...

பெண் மனத்தை ஆண்பிள்ளை
அவ்வளவு சுலபமாக உணர முடிந்தால்
உலகத்தின் சிக்கல் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது
எப்பொழுதுமே ஏற்பட்டிருக்காது...

வாழ்க்கை...

வானவில்லின் நிறங்களைப்போல்
கைகளுக்குள் அகப்படமால்
சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளைப் போல்
வாழ்க்கையென்றும் அழகாக இல்லை

அருவருப்பான மண் புழுவைப்போல்
சொத சொத வென நாட்கள் நகருகின்றது...

ஆசை...

ஆசை மனிதனுக்கு அபாரத் துணிச்சலைக் கொடுக்கிறது
பின்னால் வரக்கூடிய லாபத்தை உத்தேசித்து
எத்தகைய அபாயத்தையும் சமாளிக்க முன் வருகிறான்...

பொய்...

ஏழைகள் சொல்லும் உண்மையை விடப்
பெரிய இடத்துப் பொய்யைத்தான்
எல்லோரும் நம்புவார்கள்...

ஆண் பெண்...

ஆண் பெண் உறவில் ஒருவரைப் பற்றி
மற்றொருவருக்கு எழும் எண்ணங்கள்
புத்தியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டால்
வேற்று மனிதர்கள் வேம்பாக இருப்பார்கள்
இந்த எண்ணங்களின் சஞ்சாரத்துக்கு
தனிமையில் கிடைக்கும் சுதந்திரம்
அத்தியாவசியமானது ஆகிறது...

காலத்தின் கரங்கள்...

காலத்தின் கரங்கள், நிகழ்ச்சிகளின் வேகம்
மனிதர்களை எவ்வளவு தூரம் மாற்றி விடுகிறது...

கஷ்டம் ,வெற்றி...

ஒவ்வொரு திட்டத்தை நிறைவேற்றுவதிலும்
உள்ள கஷ்டங்களை மட்டுமே யோசித்துக் கொண்டிருப்பவன்
உலகத்தில் எந்தக் காரியத்தையும் சாதிக்க மாட்டான்
கஷ்டத்தை உணர்ந்தாலும் அதற்குப் பரிகாரம்
தேடுபவனே வெற்றி பெறுகிறான்...

இரவு...

திருட்டுக்கும் காமத்துக்கும்
இருட்டு பலமான துணை...

மனித உணர்ச்சி...

மனிதனுக்கு எண்ணற்ற உணர்ச்சிகளை இறவன் படைத்திருக்கிறான்
ஒவ்வோர் உணர்ச்சியின் குணமும் தனித்தனியாக இருப்பது போல் தோன்றினாலும், ஓர் உணர்ச்சிக்கும் இன்னோர் உணர்ச்சிக்கும் நெருங்கிய சம்மந்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உதாரணமாக அனுதாபம், அன்பு, ஆசை, இன்பம்
இந்த உணர்ச்சிகள் நான்கும் நால்வைகைப்பட்டவை.
ஆனால் அனுதாபத்திலிருந்து அன்பு முளைக்கிறது
அன்பு எதனிடம் ஏற்படுகிறதோ அதை அடைய ஆசைப்படுகிறோம்
ஆசை பூர்த்தியாகும் நிலைதான் இன்பம்
இப்படி நெருக்கமாகத் தொடுக்கபட்டிருக்கும் இந்த உணர்ச்சிகளிலிருந்து யாரும் விடுபடுவதில்லை...
PAKEE Creation