Wednesday, April 27, 2016

வழிபாடுகளும் வணக்கங்களும்...

என் துயரங்களை ஆற்றும் கடவுள்களென்று
வெறும் கற்சிலைகளை நம்பினேன்
தூசி பட்டதுவோ என்று வருந்தி
அவைகளுக்கு கண்ணூதி விட்டேன்

போகும் இடமெல்லாம் பூனைபோல
காவ்விச் சென்றேன்
கடவுள் வடிவெடுத்த கற்சிலைகளை

எங்கயோ பிறந்து வளர்ந்து
என் வாழ்வில் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
வணக்கங்கள் வழிபாடுகள்
சுலபத்தில் என்னைவிட்டு போகாது
என்கைகளை கும்பிடவும் வைக்கிறது

இன்னும் பல உருவமாக மாறி மாறி
என்னைக் கூழக்கிப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது
என் பரம்பரைக் குள்ளாலே வந்த
வழிபாடுகளும் வணக்கங்களும்...

No comments:

Post a Comment

PAKEE Creation