Friday, February 17, 2023

அனுபவம்...






சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும்
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும்
அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது.
கற்றுத் தந்த ஆசிரியர்களை விட,
கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட
இந்த அனுபவங்கள் தான்
ஒருவரை தலைவராக
மற்றொருவரை 
தறுதலையாக 
மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது...

இது அனைவருக்குமான வாழ்க்கை...





நம் வாழ்க்கை களவாடப்படிருக்கிறது
சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது
அதை நாம் மீட்டாக வேண்டும்
அதற்காகப் போராடித்தன் ஆக வேண்டும்
அனைவரும் சேர்ந்து ஏனென்றால்
இது அனைவருக்குமான வாழ்க்கை...

இயற்கை நியதி

 



சிந்தனை, செயல், திறமை என
எல்லாவற்றிலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர்
வித்தியாசப்பட்டவர்களாகவும் ஏற்றத்தாழ்வு
உடையவர்களாகவும் இருக்கும்படிதான்
இயற்கை அமைப்பே நிறுவப்பட்டிருக்கிறது.
அதில் சமத்துவம் கிடையாது
அதேபோல் விரும்பியோ விரும்பாமலோ
அதன் சட்டங்களுக்கு எல்லோரும்
அடிபணிந்துதான் ஆக வேண்டும்.
இயற்கை நியதிகளை மிஞ்சி
யாராலும் சுதந்திரமாக இருக்க முடியாது...

நதியைக் காணும் போது

 


நதியைக் காணும் போது எனக்கு
அதில் ஒரு நீர்க்குமிழியாகி விடும் ஆசை தோன்றுவதுண்டு
நதி எத்தனையோ ரகசியங்களை நம் காதுகளில்
கிசுகிசுத்துக் கொண்டேயிருக்கிறது
அதைப் புரிந்துகொள்ளத்தான் அவகாசமும்,ஆர்வமும் நம்மிடம் இல்லை...

PAKEE Creation