Thursday, February 18, 2016

பணம்...

மனிதர்க்குக் கிடையாத மதிப்பு இங்கு
தினம் மாறும் பணத்துக்கு உரித்தாச்சு
தறிகெட்டு நெறிகெட்டு தர்மத்தின் விழிகேட்டு
துயர் இங்கு வாழ்வாச்சு

நோய் கண்ட மனிதர்மேல் மருத்துவப்
பணத்தீயால் ரணம் செய்து வதைக்கின்றனர்
கடவுள் பெயரை சொல்லி களியாட்டம் செய்கின்றனர்
கருத்து ஏதும் அறியமால்
மடம் கட்டி பொருள் சேர்த்து மாயங்கள் பல செய்வார்
மெய்யை பொய்யாக்கி

உதிரத்தில் உணர்வில்லை உறவுக்கும் விருப்பமில்லை
மரணத்தில் விடையாகும் - போகும்
மரணத்தில் விடையாகும்

கண்ணோடு வாயையும் செவியையும்
நம்பாதே
உன்னை நீயே உணர்த்துகொள் - மனிதா
விழித்து கொள்...

No comments:

Post a Comment

PAKEE Creation