அதி அற்புதமான படைப்புக்கு
உன் உருவமே சாட்சி
என் கவிதையில் இந்த உலகம்
மிக இனிமையாக இருந்தாலும்
அதில் அழகாக தோன்றுவது உன் முகம் தான்
ஒத்த பின்னலும்
பூப்போட்ட பாவடையும் சட்டையுமாய்
வட்ட முகத்தில் சிவந்த பொட்டுடன்
சிரிப்போடு போட்ட விதைதான்
இந்தக் கவிதைகள்
இந்த ஊமைக்குயிலை
கவிக்குயிலாக்கிய என் உயிரே
என்றுமே உனக்கு நான்
காதல் காணிக்கை தான்...
No comments:
Post a Comment