எண்ணிக் கொண்டே இருக்கும்போது
எண்ணியவரே எதிரே வந்து நிற்கும் வியப்பிலே.
மனது அனுப்பி தகவல் கொடுக்கிறதோ?
"நினைவுகளே தந்திகள்
நினைவுகளே தபால்கள்
நினைவுகளே புறாக்கள்
காற்றில் பறந்து சென்று
காதல் தூது சென்று
கைபிடித்து இழுத்து வருகின்றன".
களைத்து வந்தவரை எப்படி கவனிப்பாய்?
"நெஞ்சுக் கூட்டுக்குள்
இழுத்தணைத்து பூட்டிக் கொள்வேன்
கொஞ்சும் இதழினாள்
கொவ்வைப் பழம் கொடுப்பேன்"
கைகள் தாளமிட
கால்கள் கலந்தாட
தோள்கள் சுதிசேர
பாலும் பழமாகி
தேனும் சுவையாகி
தேகம் சதிர் ஆடும்...
No comments:
Post a Comment