Wednesday, May 27, 2020

நான் நானாக இல்லை...



நெஞ்சில் ஆசைவந்தபோது
கையில் பொருள் இல்லை;
கையில் பொருள் வந்தபோது
நெஞ்சில் ஆசை இல்லை;
வயிற்றில் பசிவந்தபோது
கையில் உணவு இல்லை;
கையில் உணவு வந்தபோது
வயிற்றில் பசி இல்லை;
எழுத நினைத்தபோது
நெஞ்சில் சிந்தனை இல்லை;
நெஞ்சில் சிந்தனை வந்தபோது
எழுத நேரம் இல்லை;
மனதில் காதல் வந்தபோது
காதலிக்கும் ஒருத்தி இல்லை;
காதலிக்க ஒருத்தி வந்தபோது
மனதில் காதல் இல்லை;
நாடு, அதை நாடும்போது
இன்று எனக்கு நாடு இல்லை;
நாடு எனை நாடும்போது
அன்று நான் இவ்வுலகில் இல்லை;
இல்லை இல்லை என்பதனால்
நான் நானாக இல்லை...

No comments:

Post a Comment

PAKEE Creation