Friday, May 29, 2020

ஆனால்... மனிதர்கள்..?



கடலை முத்தமிடும் தொடுவானம் என்று
இளமையில் கற்பனை செய்யப்பட்ட வானம்.
எப்போதும்போல்
தொடாத கடலை தொட்டுவிட்டதுபோல் பாவனை
காட்டிக்கொண்டு எட்டாத தொலைவில்
சரிந்து கிடக்கிறது.

கரையைத்தொடும் அலைகளைக் காணோம்.
இரக்கமற்ற மனிதர்கள் இதயத்தைத்
திறந்து காட்டினாற்போல்
கற்களும் பாசியுமாய்க் கோலம்காட்டும்
கடலின் முற்றம்.

சற்றுத் தொலைவில் கரைக்கும்
தொடுவானத்துக்கும் இடையே சத்தமின்றிப்
புரளும் அலைகள்.

மறுபடியும் அலைகள் கரையத்தேடிவரும்
கடலின் நிலப்பரப்பைக் கண்ணுக்குத்
தெரியவிடமால் குளிர்ந்த நீரால் சுகம்
விசாரித்து கரையை முத்தமிட்டு
மறுபடியும் திரும்பிப்போகும்
இயற்கை இன்னும் மாறவில்லை.

ஆனால்... மனிதர்கள்..?
தன்னத்தனியே நின்று சூழலை நோக்குகையில்
தவித்துப் போகிறது மனது...

No comments:

Post a Comment

PAKEE Creation