Thursday, July 3, 2014

விதி...

விதியென்பது ஆண்டவனின் விசித்திர தண்டம் (தண்டனை கொடுக்க)
மனித அறிவுக்குச் சிறிதும் புலப்படாத ஒரு மர்மம்
அஞ்ஞானி அதை அறிவீனத்தால் அசட்டை செய்கிறான்
விஞ்ஞானி அதை விவேகத்துக்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கிறான்
மெய்ஞ்ஞானி அதை ஆண்டவன் கட்டளை , கர்மத்தின் கரம் என்று உணர்ந்து அதன் விளைவுகளுக்குச் சிரம் தாழ்த்துகிறான்
ஆனால் அந்த மெய்ஞ்ஞானிகூட விதி எதை விளைவிக்கிறது என்பதை அறியாமல் திகைக்கிறான்

வலைஞன் எப்படி ஒரு நூலிழையை எடுத்துப் பின்னத் துவங்கி பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறானோ
அப்பிடியே விதியும் வாழ்வின் ஒரு நூலிழையை எங்கோ துவக்கி
எப்படியோ பின்னிப் பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறது
அதில் சிக்க வேண்டியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்
அதை நாடி வருபவர்கள் தானே வருகிறார்கள்
அப்படி வருவதை "சந்தர்ப்பம்" , 'தற்செயல்' என்ற
சொற்களால் குறிப்பிடுகிறார்கள்
உலக பந்தத்தில் உழலும் மனிதன் வைத்த பெயர் அவை
சாஸ்திரம் வைத்த பெயர் விதி...

No comments:

Post a Comment

PAKEE Creation