Thursday, July 3, 2014

பயம் வேறு பக்தி வேறு...

பயம் வேறு பக்தி வேறு
பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது
இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும்
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்

உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில்
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப்
பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது
வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர்
கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து
தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள்
இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும்
பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக்
செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்

தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத்
தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ
என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம்
நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான்
தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு
வழிகாட்டும் பெரியோர்களிடத்தும்
பயபக்தி வேண்டும் என்று
பயத்தையும் பக்தியையும் இணைத்தே
உலகம் கூறுகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation