Thursday, July 21, 2011

என்ன கேள்வி வரும்?...

கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
'‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?...

No comments:

Post a Comment

PAKEE Creation