Thursday, July 21, 2011

பெண்ணே...


பெண்ணே
உன்னோடு நான் இருந்த இருக்கையில்
தனிமையில் நான்
என் தோளிலே தலை சாய்ந்து

நீ அன்று கூறியதை
நினைத்து பார்க்கிறேன்
சாவு நம்மை
பிரிக்க நினைத்தாலும்
நாம் காதலைவிட்டு
பிரியக்கூடாது என்று கூறியதை

கூறிய நீயே
காதலைவிட்டு நீ பிரிந்ததேன்

காதலைவிட்டு நான் பிரியவில்லை
காதலும் என்னைவிட்டு பிரியவில்லை
பிரிந்தது நீ மட்டுமே

நீ பிரிந்தாலும்
நீ கூறிய வார்த்தை
என் காதலோடு கலந்துவிட்டதடி
சாவு என்னை பிரிக்கும் வரை
காதலைவிட்டு நான் பிரிவதும் இல்லை...

No comments:

Post a Comment

PAKEE Creation