Thursday, July 21, 2011

களவையும் கற்று மற என்றனர்…. காதலை கற்றேன் மறப்பதெப்படி?..


நீ வந்த போதும்

என் இத‌யத்தில் நுழைந்த போதும்

தடுக்க நினைக்கவில்லை காதலை

நீ போகின்ற போதும்

இதயம் வேகுகின்ற போதும்

என்னால் அடக்க முடியவில்லை

சோகத்தை

வார்த்தைகள்

கொடுக்கும் வலியை

அறிந்து கொண்டேன்..!

நீ நம் காதலைமறந்து

விடச் சொன்ன போது..!!

நீ சொன்னது கூட

எனக்கு வருத்தமில்லை...

என்னை நேசித்த உன் இதயத்தை

எங்கே கழற்றி வைத்தாய்

என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!

உன்னால்

சந்தோஷங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

துக்கங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

சுகங்கள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

வலிகள் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

காதல் என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

உன்னால்

பிரிவு என்றால்

என்ன என்று

அறிந்து கொண்டேன்!

என் இதயம் துடிப்பது உனக்காக

அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?

என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி

அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?

என் இதயம் இருப்பது உன்னிடம்

அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்

அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!

வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!

என்னை இழக்கப் போகிறேன்உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்நான் நீயாக மறினேன்

நீயாக விலகுகிறாய்

முடியாதடி உன்னை பிரியஅடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே

இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது

நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்றுஉயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மனசு மட்டும்மாறவே இல்லையே

மறுபடியும் மறுபடியும்

உன்னையே கேட்கிறது

உன்னைத் தேடும் என் இதயம் தினம்

கண்ணீர் வடிக்கின்றது

உன் எண்ணங்களை சுமந்த என் மனம்

சோகங்களால் வாடி நிற்கிறது

ஒரு முறையாவது உன்னுடன்

பேசக்கிடைக்காதா என்று - உன்

விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது

எனை ஆறுதல்படுத்தாதா என

என்னவளே ஏன்

என்னை மறந்தாய்

என் இனியவளே ஏன்

என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்

நீ வாழ்கவென

வாழ்த்திட என்

உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்

தினமும் அழுகிறதே

உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே

உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே

இரக்கம் காட்ட மாட்டாயா

இதய வாசல் திறப்பாயா..?

பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில்

பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....

சிலர் இறந்து போனால் மனது மறந்து

போகும்

சிலர் மறந்து போனாலே மனது இறந்து

போகும்

முன்பு

சாலையை கடக்கும் போது கேளாமல்

என் கரம் பிடித்து வந்த என் தோழியே….

இன்று

வாழ்க்கையை கடக்க

நான் கரம் நீட்டியும்

என் கரம் பற்ற யோசனை ஏனோ…..

மழையில் நான் நனையவில்லை

ஈரம் காய்ந்து போவதற்கு…..

மணலில் நான் விழவில்லை

உதறி விட்டு நடப்பதற்கு…..

களவையும் கற்று மற என்றனர்….

காதலை கற்றேன்

மறப்பதெப்படி?

நேசிக்கும் முன் யோசி

நேசித்தப்பின் யோசிக்காதே

அதுநேசித்த இதயத்தையே காயப்படுத்தும்

வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…

நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு…..

காதல்.

அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு

என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!

உன்

கோபங்களைதாபங்களை

மன்னித்துவிடுகிறேன்

முத்தத்தால் நீ முடிப்பதானால்!

என் கண்ணீர்

துளிகளால்

உனக்கு வைரமாலை!

காய்வதேயில்லை!

நீ தந்த

முத்தங்களின் ஈரம்!

பார்வை விட்டு

போன பின்னும்

என்னில் சிறகடிக்கும்

உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்

மழைக்கின்ற

மரம் கணக்காய்...

No comments:

Post a Comment

PAKEE Creation