Thursday, July 21, 2011

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க...


எத்தனை கடவுளிடம்

எனக்காக வேண்டியிருப்பாய்!

எத்தனை மணித்துளிகள்

எனக்காக காத்திருந்தாய்!

எத்தனை இரவுகள்

என் வரவுக்காக விழித்திருந்தாய்!

எத்தனை ஆண்டுகள்

இரவில் விழிக்காமல் நானிருக்க

விழித்து கொண்டு நீ இருந்தாய்!

*

கருவறையில் இருக்கும்

கல்லைவிட,கள்ளகபடமில்லாத,

கருவறையில் சுமந்தவளே,

கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்!

*

என் வலிக்காக நான் அழுதேன்.

வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை...

காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்!

*

இதயத்தை உதைத்தவளுக்காக

வலியால் நான் அழுதேன்...

காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும்

என்னுடன் நீ அழுதாய்!

*

அன்பு ஒன்றே உலகில்

சிறந்தது என்பதை தெரியவைத்தாய்!

அன்புதான் அழுகையாக

வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்!

அன்பே அன்னை!அன்புதான் உலகம்

என்பதை உணர்த்தினாய்!

*

கருவறையில் இருந்தபோது

கரு என்று பாராமல்,

உன் உயிரை பற்றி நினைக்காமல்

கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்!

*

மழலையாக தவழ்ந்தபோது

இரத்தம் என பாராமல்,

என் கண்ணீரை துடைக்க

இரத்தத்தை பாலாக மாற்றி,

எனை மகிழச்செயதாய்!

*

மனிதனாக வளர்ந்தபோது

சோகம் தெரியாமல் நான் வாழ,

சுகமாக நான் இருக்க,

நலமுடன் நான் வாழ,

எனக்காக என்று நான் இருந்தபோது

தனக்காக என்று நீ இல்லாமல்,

இரத்தத்தை உருக்கி

வியர்வை சிந்தினாய்!

*

அன்றும் எனக்காக

கண்ணீர் வடித்தாய்!

இன்றும் எனக்காக

கண்ணீர் வடிக்கின்றாய்!

*

இதுவரை செய்த தவறுகளுக்காக

தலை வணங்குகின்றேன்!

வாழ்க்கையை தொலைக்க

நான் விரும்பவில்லை...

இதோ!கடவுளாக

உனை வணங்குகின்றேன்!

*

கடல் தாண்டி

பயணம் செய்ய விருப்பமில்லை.

நீயே!எந்தன்

அசையா சொத்தாக இருக்கும்போது!

காற்றை

சுவாசிக்க விருப்பமில்லை...

நீயே!எந்தன்

மூச்சாக இருக்கும்போது!

ஒலியினை கூட

கேட்க விருப்பமில்லை....

நீயே!எந்தன்

செவியாக இருக்கும்போது!

*

அத்தனையும்,

இத்தனையும்,

இத்தனை நாட்கள்

நான் இழந்ததுபோதும்...

இனி,அன்பை மட்டும் என்றும்

நான் இழக்க விரும்பவில்லை...

*

தாயே!உனையே!

என் இதயத்தில் நேசிக்கிறேன்!

உன்னை மட்டுமே

உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்!

*

இனி,எனக்கு

ஒரு பிறப்பு என்றால்,

அது உன் கருவறையாக

மட்டும்தான் இருக்க வேண்டும்.

எனக்கு இறப்பு என்றால்,

அதுவும் உன் மடியாக

மட்டுதான் இருக்க வேண்டும்....

*

இனி,உனக்கு

ஒரு பிறப்பு என்றால்,

எனக்கு மகனா

மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்...

மகனாக பிறந்து,

தாயாக இருந்து,

எனை நீ

வளர்க்க வேண்டும்.....

*

கடவுள்

என்பவன்

ஒருவன் இருந்தால்,

இதனையேற்று

எனக்காக

செவி சாய்க்க வேண்டும்....

*

அன்பே கடவுள்!

அன்பை தரும்

அன்னை மட்டுமே கடவுள்!

தாயே!நீ வாழ்க!

அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!!

பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க...

No comments:

Post a Comment

PAKEE Creation