Thursday, July 21, 2011

நான் உனக்கு மட்டுமே பிள்ளையாக பிறப்பேனம்மா...


ன் வாழ்வின் ஓவியத்தை

வரையும் தூரிகையே -

உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்

அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல

எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்

அசைவில் மட்டுமே அசைந்து -

நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

டைபாதையின் முட்களை மிதித்து – என்

கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே

உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்

நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

ண்மையில், காற்றின் சப்தத்தை

இசையாக்கிக் கொடுத்த ஒரு

யாழின் பெருமை -

உன்னையே சாரும் அம்மா!

னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்

இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்

நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு

நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா...

No comments:

Post a Comment

PAKEE Creation