Thursday, July 21, 2011

எதுவாய் மாறி உன் இதயத்தில் நுழைவது?...



நீ என்னை ஏற்கா

விட்டால் என்ன...

மீண்டும்

மூங்கிலாய் பிறந்து

புல்லாங்குழலாய்

உருமாறி

உன் இதழ் ஸ்பரிசம்

பெறுவேன்

மலராய் பூத்து

உன் கூந்தலில்

அமர்வேன்

மருதானியாய்

உன் விரல்களையும்

சிவக்கச்செய்வேன்

வளையலாய்

உன் கைகளோடு

உறவாடுவேன்

புற்களாய்

உன் பாதம் வருடுவேன்

ஆனால்.....

"எதுவாய்" மாறி

உன் இதயத்தில் நுழைவது???..


No comments:

Post a Comment

PAKEE Creation