Monday, August 2, 2010

வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...


விழியில் விழுந்தாய்!
என் இதயம் நுழைந்தாய்!
உயிரிலும் கலந்தாய்!
எனை ஏன்! பிரிந்தாய்?

உன் மேல்
நான் கொண்ட பிரியாத
அன்பை புரியாமலே
பிரிந்து சென்றாய்

நம் நினைவுகளை
தண்ணீரில்
எழுதி சென்றாய்
எனை கண்ணீரில்
மிதக்க வைத்தாய்!

என் உயிரில்
வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!

ஒரே வினாடியில்
என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்தாய்!

உன் பிரிவை மறக்க
முயல்கிறேன்
முடியவில்லை!

உன் பிரிவை மறக்க
நினைக்கும்தோறும்

இதயத்தில் இறங்கிய
முள்ளாய் என்னுள்
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்...

No comments:

Post a Comment

PAKEE Creation